Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேச இராணுவத்தை வரவழைக்கவும் முயற்சி

Featured Replies

வன்னியில் முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைள் காரணமாக இடம் பெயரும் மக்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அரசு அதியுச்ச கட்டமான கரிசனையை செலுத்திவருகிறது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம் பெயர்வால் அவல வாழ்க்கையை வாழ்வதாக சர்வதேசத்தின் முன் பிரசாரம் மேற்கொண்டு படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் சர்வதேச இராணுவத்தை வரவழைப்பதற்கும் சூழ்சிசிகள் மேற்கொள்ளப்படு:கின்றன. இடம் பெயர்பவர்களுக்கு சாவதேச நிறுவனங்கள் உதவுவதாயின் எம்முடன் கைகோர்த்துக் கொள்ளலாம்' என்றும் அவர் சொன்னார்.

இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார் மேலும் : வன்னியில் முன்னெடுக்கபடும் படை நடவடிக்ககைள் கனாரணமாக மக்கள் இடம் பெயர்ந்து மரநிழல்களில் வாழ்வதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லையென கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சோந்த அரச அதிபர்கள், சர்வதேச பிரதிநிரகள் முன்னிலையில் நடைபெற்ற அனர்த்த நிவாரண ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது தெரிவித்தனர்.???

இவ்விரு மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் எங்கள் மக்கள். அவர்கள் இலங்கை பிரஜைகள். அவர்களுக்கு மனிதபிமான நடவடிக்கை மூலம் சகல உதவிகளும் அரசினால் செய்து கொடுக்கப்படும். இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு எவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்பது தொடர்பான பல வருட அனுபவங்களை நாம் கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 2006ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுர் இடப் பொயர்வு மற்றும் ஏ-9 வீதி மூடப்பட்டதன் பின்னர் யாழிற்கு தரை வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் கடல் மார்க்கமாக மட்டுமே பொருட்களை கொண்டு சென்று அம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த அரசினால் முடிந்துள்ளது.

இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்ற மக்களை அரசு ஒருபோதும் கைவிடாது என்பதுடன், அவர்களுக்கு உதவ வேண்டிய அடிப்படைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதுடன் இதற்கு மேலதிகமாக சர்வதேச சமூகம் அரசுடன் இணைந்து உதவ முடியும்.

கிளிநொச்சி மாவட்ட மக்களை அரசு மறந்துவிட்டது. அவர்களுக்கு உணவு இல்லை மரநிழல்களில் அகதிகளாக அநாதைகனளாக வாழ்கின்றனர் என்று சர்வதேச மட்டத்தில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற யுத்தத்தை நிறுத்தவும் சர்வதேச இராணுவத்தை வரவழைக்கவும் பலவேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், பாரளுமன்றில் உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரமான பஷில் தலைமையில் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கூட்டமொன்றின் போது, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் இவ்விரு மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையிலிருப்பில் இருப்பதாக தெரிவித்தனர்.

அத்துடன், மேலும் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் தேவை ஏற்படும் போது இரண்டு அரச அதிபர்களுக்கும் தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. இடம் பெயர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் அதே வேளை, வன்னிப் பிரதேசத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு வவுனியாவில் மத்திய நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அநத மத்திய நிலயத்தினூடாக சர்வதேச நிறுவனஙகள் தங்களது உணவுப் பொருட்களை வன்னிப் பிரதேசத்திற்கு வழங்குவதற்காக உதவ முடியும்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விரு மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் எங்கள் மக்கள். அவர்கள் இலங்கை பிரஜைகள். அவர்களுக்கு மனிதபிமான நடவடிக்கை மூலம் சகல உதவிகளும் அரசினால் செய்து கொடுக்கப்படும். இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு எவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்பது தொடர்பான பல வருட அனுபவங்களை நாம் கொண்டுள்ளோம்.

இப்படி சொல்லியே , அந்த மக்களின் குடியிருப்புகள் , வழிபாட்டுதலங்கள் , பாடசாலை , வைத்தியசாலை என்று குண்டு வீசாதீர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.