Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?!

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? 22 members have voted

  1. 1.

    • அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
      0
    • வளமான வாழ்வு தேட மட்டும்
      11
    • திருமணத்தின் போது சீதனம் வாங்க
      4
    • பெருமைக்கும் புகழுக்கும்
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழ் ஆண்கள் சீதனம் வாங்க வேண்டும் என்று நினைத்துப் படிக்கினமோ இல்லையோ தமிழ் பெண்களின் அநேக பெற்றோர் தங்கள் மருமகன்கள் இன்ன இன்னதாக இருந்தால் இன்ன இன்ன கொடுக்க வேண்டும் இன்ன இன்னதாய் நீ வர வேண்டும் என்பதை தங்கள் புத்திரியர்களுக்குப் புரிய வைக்கத் தவறுவதில்லை...தற்போதும் அது தாராளமாக நடை முறையில் உள்ளது...! எனவே பெண் வாக்காளர்கள் தங்கள் சிந்தையில் புகுத்தப்பட்டதை வாக்கின் மூலம் வெளிப்படுத்த அனுமதிக்கும் முகமாகவே தலைப்பிடப்பட்டுள்ளது....!சீதனம

  • Replies 54
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.

பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: :P

உங்கள் கருத்து பெண்களை பலவீனமாகவே சிந்திக்கச் சொல்வதாக இருக்கிறது...! மீண்டும் சொல்கிறோம்...ஒருவர் டாக்டர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரியும் என்பதல்ல அர்த்தம்... கல்வி அறிவென்பது தேவைப்படும் இடத்துக்குப் பயன்படுத்தவே அன்றி...வீட்டில் உள்ளவர்களிடம் காட்டுவதற்கல்ல....ஒருவர் டாக்டர் ஆகும் போது அவரின் பெற்றோர் டாக்டர் ஆக இல்லாது இருப்பினும் அவர் பெற்றோரை சகோதரங்களை மதிப்பதில்லையா....அதே போல்தான் அவர் அவரின் துணையாக வருபவருக்கும் மதிப்பளிக்க வேண்டும்...! பெண்கள் இப்படியான சூழல்களை எதிர்கொள்ளப் பழக வேண்டுமே தவிர சூழ்நிலைக்களைக் கண்டு ஒதுங்கக் கூடாது....! இதைத்தான் கடந்த காலங்களிலும் செய்துவிட்டு இப்போ ஆண்கள் மீது ஆதிக்க குற்றம் சுமத்துகின்றனர்....! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நாங்க சொல்லவில்லையே டாக்டருக்கு எல்லாம் தெரியும் என்று. ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் நடக்கிறது அதைத்தான் சொன்னம். அதை விட துணைவியை தாய் தந்தையை நடத்திற போல நடத்திறாங்களா என்ன.? நாங்கள் எண்ணியதைச்சொன்னம். மதிப்பளிக்க வேண்டும் அதை ஏற்றுக்கொள்கிறம். மதிப்பளிக்கிறாங்களா என்றது யாருக்கு தெரியும். மற்றவங்க மதிப்பளிக்க வேணும் என்ற அவசியம் இல்லைத்தானே. :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: :P :idea:

இதிலை சிறுமிதான் சொல்லியிருக்கிறாள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போதை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான புலம்பெயர்ந்து போனவை எல்லோரும் தாயகத்திற்கு ஒரு விசிற் அடிச்சு காணி, பூமி எல்லாம் பார்த்து விக்கிறதை வித்து, வயது போனதுகளையெல்லாம் போய் பாத்து 'இனி எப்ப வாறமோ தெரியாது' எண்டு சொல்லிப் போட்டுத் திரும்பிப் போட்டினம். இதிலை என்ரை அனுபவம் என்னவென்று சொன்னால் இந்த 'தாயக விசிற்' அடிச்ச இளம்தலைமுறையினர் கனபேரோடை எனக்கு பழகிற வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக உயர்கல்வி கற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அதிலை குறிப்பிடத்தக்க அளவிலான ஆக்கள் உங்க வெளிநாட்டிலேயே பிறந்து வளருற ஆக்கள். அவர்கள் சொல்கிறார்கள். தாங்கள் இங்க தான் வரப்போறம் எண்டு. அவர்கள் சும்மா சாட்டுக்குச் சொன்ன மாதிரி எனக்குப்படேல்லை.

  • தொடங்கியவர்

இதிலை சிறுமிதான் சொல்லியிருக்கிறாள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போதை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான புலம்பெயர்ந்து போனவை எல்லோரும் தாயகத்திற்கு ஒரு விசிற் அடிச்சு காணி, பூமி எல்லாம் பார்த்து விக்கிறதை வித்து, வயது போனதுகளையெல்லாம் போய் பாத்து 'இனி எப்ப வாறமோ தெரியாது' எண்டு சொல்லிப் போட்டுத் திரும்பிப் போட்டினம். இதிலை என்ரை அனுபவம் என்னவென்று சொன்னால் இந்த 'தாயக விசிற்' அடிச்ச இளம்தலைமுறையினர் கனபேரோடை எனக்கு பழகிற வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக உயர்கல்வி கற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அதிலை குறிப்பிடத்தக்க அளவிலான ஆக்கள் உங்க வெளிநாட்டிலேயே பிறந்து வளருற ஆக்கள். அவர்கள் சொல்கிறார்கள். தாங்கள் இங்க தான் வரப்போறம் எண்டு. அவர்கள் சும்மா சாட்டுக்குச் சொன்ன மாதிரி எனக்குப்படேல்லை.

இதே ஆக்களோட பழகும் வாய்ப்பு அவர்கள் வாசற்படியில் வைத்து எங்களுக்கு கிடைத்தது...அவர்களின் பெற்றோரும் அவர்களில் பெரும்பாலானோர் சொன்னது நாங்க அங்க போய் என்ன செய்யுறது....இங்க எங்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்...அதுமட்டுமல்லாமல்..அரச

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.