Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்கடத்தல்களை ஆட்சேபித்து நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தல்களை ஆட்சேபித்து

நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்!

06.09.2008

பெரும்பான்மையினமான பௌத்த சிங்கள சமூகத்தின் பேரினவாதச் சிந்தனைக்குச் செயலுருக் கொடுப்பனவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அமைந்து இருப்பினும், வெளிப்படையாகப் பெயருக்கேனும் சமத்துவத்தைக் காட்டும் சட்ட ஏற்பாடுகளும், சட்டமாக எழுதப்படாத இயற்கை நீதியும் இந்த நாட்டில் இருக்கவே செய்கின்றன.

இலங்கைத் தீவில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்கள் இந்த வசதிகள், வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தி நியாயம் தேடவும், நீதி பெறவும் தம்மால் இயன்ற அளவுக்கு முயற்சிக்க வேண்டும்.

அத்தகைய முயற்சிகளில் வெற்றிகிட்டாமல் போகலாம். நீதியை நிலைநாட்ட இயலாமல் போகலாம். ஆனால், ஆகக் குறைந்தது நியாயம் தேடும் குரல் பற்றிய உலகம் கேட்கும் வாய்ப்பாவது கிட்டும்.

யாழ். குடாநாட்டில் முப்பது வீதமான வளமான நிலப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அரசுப் படைகள் கபளீகரம் செய்துள்ளன. அந்த மண்ணின் மைந்தர்களை அவர்களின் பாரம்பரிய பூர்வீக தாயக நிலத்திலிருந்து விரட்டியடித்து, அவர்களை ஏதிலிகளாக அகதி முகாம்களிலும், நலனோம்பு மையங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் அலையவிட்டிருக்கின்றது படைத்தரப்பு.

இதற்கு நீதிவேண்டி உயர்நீதிமன்றத்தின் வாசலைத் தட்டி ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதோ சிலருக்கு கட்டுப்பாடுகள், மட்டுப்படுத்தல்களுடன் கூடிய சொற்ப நியாயம் கிட்டும் சாத்தியம் தென்படுகிறது. அலைந்த அலைச்சலுக்கு முழுப் பயன் கிட்டாமல் போகலாம். ஆனால், ஆகக் குறைந்தது அந்தப் பல்லாயிரம் மக்களின் அவலம், உலக சமுதாயத்தின் செவிப்பறையில் வீழ்வதற்கான வாய்ப்பையாவது அந்த வழக்குத் தராமல் விடவில்லை.

யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல விரும்புவோர் அதற்காகப் படையினரின் பயண அனுமதிக்காக மாதக் கணக்கில் காத்துத் தவம் கிடக்கின்றனர். பலர் அனுமதியே பெறமுடியாது அல்லற்படுகின்றனர். அப்படி அனுமதி பெறுவதற்கு ஏகக் கெடுபிடிகளுடன் கூடிய பல்வேறு நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவேண்டியிருக்கின்றது.

இலங்கையின் வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத இந்தக் கெடுபிடிகள், யாழ். குடாநாட்டில் திறந்த சிறைச்சாலையில் வாடுகின்ற யாழ்.குடாநாட்டு மக்கள்மீது விதிக்கப்பட்டிருப்பதை இதே பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்த அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்ய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தயாராகி வருகின்றார்.

இந்த வழக்கின் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு நீதி கிட்டாமல் கூடப் போகலாம். ஆனால் குறைந்த பட்சம் குடாநாட்டு மக்களின் அவலம் விசனம் சர்வதேச சமூகத்தின் காதிலும் தென்னிலங்கையின் செவிப்பறையிலும் விழுவதற்காவது ஒரு சந்தர்ப்பம் கிட்டும்.

இதேபோல, கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு எதிரான வழக்கிலும்

தலைநகரிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் வகை தொகையின்றிக் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கிலும்

உயர்நீதிமன்றத்தின்மூலம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் நீதி, நியாயம் கிடைக்கவும், மேற்படி அநீதி அளவு மீறித் தொடர்வதைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்புக் கிட்டியமையை மறுப்பதற்கில்லை.

அதேபோன்ற ஒரு விடயம்தான் இந்த "வெள்ளைவான்' மூலம் ஆட்கள் கடத்தப்படுவதும் அவர்கள் காணாமற் போகச் செய்யப்படுவதுமான பிரச்சினையாகும்.

வெள்ளைவானில் "இனந்தெரியாதோரால்' கடத்தப்பட்ட பல நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயிருக்கின்றனர். ஆனால் பின்னர் சிலராவது அரசின் தடுப்பு முகாம்களிலோ அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைக் கூடங்களிலோ இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.