Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்களை முட்களால் எடுக்க முயலுமா தமிழர் தரப்பு? (ஒருசெய்தி ஆய்வு)

Featured Replies

தமிழர் வாழ் பிரதேசங்களில் சிறிலங்கா அரச படைகளின் தாக்குதல்களானது நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்களின் குடிமனைகளையும், அவர்தம் வாழ்வாதாரங்களையும் இலக்கு வைத்து அழித்தொழிக்கும் செயலில் மட்டுமல்லாது அப்பாவி தமிழ் மக்களின் உயிரையும் பறித்தெடுக்கும் நோக்கில் நடத்திக் கொண்டிருக்கிறது.

இதேவேளை தமிழர் பிரதேசங்கள் முழுமையான பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உணவு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரச படைகளின் விமானத்தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள், ஆழ ஊடுருவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை செய்யவும் இயலாத நிலை காணப்படுகிறது.

அப்பகுதிகளில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்தாபனங்கள் உட்பட மனித நேய அமைப்புகள் அனைத்தையும் சிறிலங்கா அரசு வெளியேற உத்தரவும் இட்டுள்ளது. இச்செயலானது தமிழர் தாயகப் பிரதேசங்களில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசு எத்தனிப்பதையும், அவற்றை சர்வதேசத்தின் கண்களுக்கு தெரிய வருவதை தடுப்பதுவுமேயாகும்.

மனித உரிமைகள் உதட்டளவில் பேசும் மேற்குலகின் மவுனமும், செயல் திறனற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் இயலாமைகளையும் சிறிலங்கா அரசு கணிப்பிட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் அழிப்பில் சிறிலங்கா அரசுடன் இந்திய பிராந்திய வல்லரசு கை கோர்த்திருக்கும் நிலையில், மேற்குலகினதோ, மனித உரிமைகள் அமைப்புகளினதோ அழுத்தங்கள் ஓர் எல்லை வரை என்பதை சிறிலங்கா அரசு நன்கு கணிப்பிட்டிருக்கிறது..

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித அவலங்களை தன்னந்தனியே நின்று தடுக்கும் பொறுப்பு தமிழர் தரப்பின் தலைகளிலேயே வீழ்ந்துள்ளது. இப்பாரிய பொறுப்பை தமிழர் தரப்பு எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது?

இதேவேளை கடந்த காலங்களில் சிறிலங்காவின் தென் பகுதிகளில் நடத்தப்பட்ட பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களை அடுத்து பாரா முகமாக இருந்த சர்வதேசத்தின் பார்வை தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசு செய்த அவலங்களையும் கண்டிக்க முற்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

வரும் நாட்களில் சிறிலங்கா அரசானது தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப் போகும் மனித அவலங்களை, தமிழர் தரப்பு தடுப்பதற்கு “முட்களை முட்களால் எடுக்கும்” தந்திரத்தைப் பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.orunews.com/?p=1931

வெளியில் தெரியவே எட்டு! தெரிய வராமல்?? ... நிறுத்தப்பட வேண்டும்!! நாம் சிறிய இனம்!! எம்மை சிறிது சிறிதாக அழிக்கிறான் எதிரி!!

"குட்டுபவனுக்கு திரும்பக் குட்டு மட்டும், அவனுக்கு அதன் வலி புரியாது" இறுக்கக் குட்டினால் அவனும் குனிவான்!!

இது ஒருசெய்தியின் கருத்தல்ல, உலகில் வாழும் ஒவ்வோர் தமிழனினதும் கருத்து!! உலகு எது பலமாக அடிக்கிறதோ அப்பக்கம் சாரும்!!

வடகிழக்கில் அடிக்கிறமோ இல்லையோ தெற்கில் உதைக்க வடகிழக்கு விடியும்!! சிங்களத்தால் கொல்லப்படும் ஒவ்வோர் தமிழனுக்கும் பதில் கொடுக்கப்பட வேண்டும்!! நாம் முந்தாவிடில் எம்மை எதிரி அழித்து விடுவான்!!

அடியைபோல அண்ணன் தம்பி உதவாது...

சிங்களவனுக்கு வேற மொழிதெரியாது... அடிதான் ஒரேவழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.