Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை: யாழ். ஆயர்

Featured Replies

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை: யாழ். ஆயர்

[வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 08:08 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

போர் நடவடிக்கைகள் காரணமாக வன்னிப்பெரு நிலபரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஆயர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, வவுனியா மற்றும் மடு தேவாலயம் ஆகியவற்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் கொழும்பு திரும்பினார்.

அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ஆயர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை தொடர்பாக ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மேலும் தெரிவிக்கையில்,

மனிதநேய தொண்டு நிறுவனங்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறியமை கவலை தருகின்றது. பாதுகாப்பு நெருக்கடிகளினால் மக்கள் பொரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் 50 மைல் தூரம் வரை நடந்து வவுனியாவுக்கு வரமுடியாது. அதற்கான போக்குவரத்து வசதிகள் எதுவும் அங்கு இல்லை. தற்போது போர் நடைபெறுகின்றது.

இந்நிலையில் மக்கள் அங்கிருந்து ஏ-9 பாதை ஊடாக வர முடியாது.

ஆகவே, இடம்பெயர்ந்துள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு அரசாங்கம் தற்போதைக்கு அழைக்க முடியாது.

அதேவேளை, வவுனியாவுக்கு வருகின்ற மக்களுக்கு உரிய தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இராணுவ அதிகாரிகள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களை பராமரிக்கும் பொறுப்பு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராணுவ அதிகாரிகள் என்னிடம் உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் என்னுடன் கலந்துரையாடினர்.

ஆனாலும் மக்கள் தற்போதைய நிலையில் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான நிலைமையில்லை. எனவேதான் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பாதுகாப்புக்களையும் மற்றும் நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் வழங்குவதற்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்களும் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம் கோரிக்கை விடுத்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.