Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் மனிதப் பேரவல நெருக்கடி; இணைத் தலைமைகள் அவசர கூட்டம் அடுத்த வாரம் நியூயோர்க்கில் நடத்த ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில், குறிப்பாக வன்னியில், மனிதாபிமான விவகாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன எனக் கருதும் இணைத்தலைமை நாடுகள், அவை குறித்து ஆராய்வதற்காக அவசரக் கூட்டம் ஒன்றை அடுத்த வாரத்தில் நியூயோர்க்கில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இந்தக் கூட்டம் அவசர அவசரமாக அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயற்பட்ட சர்வதேச உள்நாட்டுத் தொண்டர் அமைப்புகள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களை குறுகியகால அறிவித்தலோடு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றிய கொழும்பு அரசின் நடவடிக்கையாலும்

அப்பிரதேசங்களில் வெடித்திருக்கும் கொடூர யுத்தத்தாலும் மனிதப் பேரவல நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இணைத்தலைமைகளில் சில தரப்புகள் கருதுவதால், அவற்றின் அழுத்தத்தின் பேரில் இவ்வளவு அவசரமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு உதவி வழங்குவது பற்றி ஆராய்வதற்காக 2003 இல் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில், அதன் இணைத் தலைமைகளான ஜப்பான், நோர்வே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவத்தை தற்போது அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரான்ஸ் பிரயோகித்து வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அழுத்தம்

இந்த நான்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் பேரிலேயே இம்முறை கூட்டம் இவ்வளவு அவசர அவசரமாக அழைக்கப்படுகிறது எனத் தெரிகிறது.

ஏற்கனவே வன்னியில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளால் சுமார் இரண்டு லட்சம் பேர் ஏதிலிகளாகித் தவிக்கையில் மேலும் தீவிரமடைந்துவரும் யுத்தத்தால் புதிதாகப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் ஏதிலிகளாக மாறும் ஆபத்து நீடிக்கையில்

வன்னியிலிருந்து மனிதநேயத் தொண்டுப் பணியாளர்களைக் குறுகியகால அறிவிப்போடு அரசு வெளியேற்றியமை வன்னியில் மிக மோசமான மனிதப் பேரவல நிலைமையை ஏற்படுத்தும் என்று இணைத் தலைமைகளுள் சில கருதுகின்றன எனக் கூறப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே மேற்படி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

நியூயோர்க்கில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஜப்பான் சார்பில், இலங்கைக்கான அதன் விசேட சமாதான தூதர் யசூஷி அகாஷி கலந்துகொள்வார் எனத் தெரிகின்றது.

மற்றைய மூன்று தரப்புகளின் சார்பிலும் யார்,யார் பங்கு பற்றுவார்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை.

uthayan.com

சமாதானமும் நாறி ஒப்பந்தமும் கிழிச்சாச்சு... உந்த இணைத்தலமை இப்பவும் என்னத்துக்கு கூடுவான்?... உதுக்குத்தானே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூடமெண்டு ஒண்டு இருக்கு அதோட போய்ச்சேர வேண்டியானே....

உந்த கிழட்டு அக்காசி என்னத்துக்கு ?... இந்தக்கூட்டம் வன்னிமக்களின் அவலத்துக்கு நையாண்டியா?...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.