Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகத் பெருந்தமிழர் விருதுபெற்ற அறிஞர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்! -தி.க சிவசங்கரன் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் பெருந்தமிழர் விருதுபெற்ற அறிஞர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்! -தி.க சிவசங்கரன் வேண்டுகோள்

உலகப் பெருந்தமிழர் விரு தினைப் பெற்று திரு.தி.க சிவசங்கரன் அவர்கள் ஆற்றிய உரை:

எனக்கு வழங்கபெறும் இந்த விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனது அறுபது ஆண்டு கால இலக்கிய வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறுகளில் இதுவும் ஒன்றாகும்.

1942-ம் ஆண்டில் எனக்கு ஆசானாக அமைந்து, என்னைப் படைப் பாளியாக உருவாக்கி, தமது வாழ்நாளின் இறுதிக்காலம் வரை எனக்கு வழிகாட்டி வந்த அமரர். வல்லிக்கண்ணன் அவர் களுக்கும், தொடக்க காலத்தில் இருந்தே தமிழ் விமர்சனத்துறையில் என்னை ஆற்றுப்படுத்திய பேராசிரியர். அமரர் நா. வானமாமலை அவர்களுக்கும் இவ் விருதைக் காணிக்கையாக்குகிறேன்.

தமிழகத்தில் நெடுங்காலமாகப் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஆறாம் ஆண்டு நிறைவு விழா காணும் உலகத் தமிழர் பேரமைப்பு தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

உலகம் எங்கும் தமிழர்கள் பரவி வாழ்கின்ற இன்றைய சூழ்நிலையில், அவர்களுடைய ஒற்றுமை ஓங்கவும், எல்லாத் துறைகளிலும் அவர்களின் வாழ்க்கை மேம்படவும், பணியாற்றுகின்ற இந்தப் பேரமைப்பின் தலைவர் தோழர். பழ. நெடுமாறன் அவர்களின், தன்னிக ரற்ற, தன்னலமற்ற தமிழ்ச் சமூக நலப் பணிக்கு நான் தலைவணங்குகிறேன். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

தமிழ்த் தேசியம் என்பது, இன் றைய காலகட்டத்தில், ஒவ்வொரு தமிழ னுக்கும் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பாகும்.

என்னுடைய கருத்தில் தமிழ்த் தேசியம் என்பது உலகு தழுவிய புரட்சி கர தேசியமாகும். அது சர்வதேசியத் தோடு பின்னிப் பிணைந்ததாகும்.

சுதந்திரம், ஜனநாயகம், சம தர்மம், போரற்ற பொன்னுலகு இவையே, புரட்சிகர தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியான பண்புகளாகும்.

இந்தத் தத்துவ அடிப்படையில் தான், உலகெங்கும் நடக்கும் தேச விடு தலை இயக்கங்களையும் போராட்டங் களையும் நான் ஆதரிக்கிறேன். வியட்நாம் விடுதலைப் போராட்டம், பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், இவற்றைப் போலவே இலங்கைத் தமிழ் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கள அரசுடன், சமத்து வத்திற்காகவும், சம உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரங்களுக்காகவும், தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும் போராடி வருகிறார்கள். அவர்களது விடுதலைப் போராட்டத்தை, தமிழ் எழுத்தாளன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் நான் ஆதரிக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் போராட்டம் மனித உரிமைகளுக்காகவும் மனித கெளரவத்திற்காகவும், வாழ்விற் காகவும் நடைபெறும் போராட்டமாகும். எனவே, இந்த விடுதலைப் போராட் டத்தை, ஆதரிப்பது நம் அனைவரின் கடமை என்று நான் கருதுகிறேன்.

1983 சூலையில் இலங்கை ஆட்சியாளர்களால் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டது. தமிழ்ப்பண்பாட்டை அழிப்பதற்கான பாசிச அடக்குமுறையின் சின்னம் என்றே இதை நான் கருதுகிறேன். அன்று தமிழ்ப்பண்பாட்டை அழிக்க ஆட்சியாளர்கள் செய்த முயற்சி இன்று ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அழிக்கும் கொடுமையாக நீடித்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு விடிவேது என்ற எண்ணம், தமிழகத்தில் மேலோங்கி நிற்கிறது. ஏனெனில், சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு தமிழக மக்களின் நெஞ்சம் பதைக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்கு வெகுவிரைவில் நாம் முடிவு கண்டாக வேண்டும். இதில் தமிழக, கலை, இலக்கியவாதிகளுக்கும், படைப் பாளர்களுக்கும், இலக்கிய அமைப்பு களுக்கும், ஊடகத்துறையினருக்கும் முக்கிய பங்கிருக்கிறது.

இப்பணியில் இடது சாரி ஜனநாயக சக்திகளுக்கு மாபெரும் கடமை இருக்கிறது. கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பிற அமைப்பு கள் உலகத் தமிழர் பேரமைப்பின் நல் முயற்சிகளுடன் ஒற்றுமையும், ஒருமைப் பாடும் காட்டவேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் உடனடியாகக் காண்ப தற்கும் இலங்கைத் தமிழர்கள் சம உரிமைகளுடன் கண்ணியமாக வாழ்வ தற்கும், மாநில, மத்திய அரசுகளின் வீறுமிக்க நடவடிக்கைகள் தேவை.

இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்ப்பதற்கான இயக்கம், தமிழகத்தில் ஒரு மாபெரும் பேரியக்கமாக எழவேண்டும். இதற்கு ஜாதி, மத, இன கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஒன்றுபட்டுக் கிளர்ந்து எழ வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே

இது மகாகவி பாரதியாரின் மணிவாக்காகும்.

நன்றி! வணக்கம்!

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.