Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்தம் பேசும் மஹிந்தவும் அமைச்சர்களும் வன்னி மக்களின் அவலம் குறித்து கவலைப்படவில்லை.

Featured Replies

வன்னிப் பிரதேசம் மீது நடத்தபட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் இரண்டரைலட்சம் வரையிலான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் இந்த நாட்டு ஜனாதிபதியும் அவரது ஆட்சியயில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் அல்ல.

இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் அரசியல் குழு சாhபாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில் வேல் அனுப்பிய அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பவை வருமாறு.

வன்னியில் மேற்கொள்ளபட்டு வரும் யுத்த நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும் மருந்து வகைகளும் அவசியத் தேவையாக உள்ளன. குழந்தைகள் பால் மா இன்றித் தவிக்கினறன. நோயாளர்கள் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

மக்கள் மரங்களின் கீழும் வயல் வெளிகளிலும் காடுகளிடையேயும் தமது அன்றாட வாழ்வைக் கழித்து வருகின்னர். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக உணவையும் மருந்தையும் ஆயுதங்களாக பயன்படுத்துவதை அரசு உடன் நிறுத் வேண்டும். வன்னி மக்களைப் பழிவாங்கும் செயற்hhட்டை உடன் நிறுத்தி அவர்களுக்குரிய அத்தியாவசிய உணவு, மருந்து, பால் மா என்பனவற்றை அவசரமாக அங்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இன்று கிளிநொசிசயைக் கைப்பற்றுவதிலும் வன்னியை மீட்பதிலும் யுத்த முனைப்பாக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் அமைச்சர்களும் அதனை நியாயப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளனர். ஆனால், இது வரையான படை நடவடிக்கைளின் உக்கிரத்தினால் மக்கள் இடம் பெயர்ந்து உணவு, உடை, இருப்பிடமின்றி குழந்தைகளுக்கு பால் கொடுக்கமுடியாமலும் நோயாளர்களுக்கு உரிய மருந்துகள் இன்றியும் நிர்க்கதிக்குள்ளாகி நிற்கின்றனர்.

பௌத்த தர்மம் பேசும் மஹிந்தவும் அமைச்சர்களும் இந்த மனித அவலம் பற்றி அக்கறை காட்டாது இருந்துவருகின்றனர் வன்னிக்குள் பரிதவிக்கும் தமிழ் மக்கள் இந் நாட்டுப் பிரஜைகள் இ;ல்லையா? அவர்களைப் பட்டினி போட்டுப் பழி வாங்க நினைப்பதனை ஜனநாயகம் என்பதா அல்லது பௌத்த தர்மம் எனக் கொள்வதா?

மஹிந்த சிந்தனை என்பது இன்று யுத்த சிந்தனையாகி நிற்பதையே காண முடிகின்றது. எனவே, வன்னி மக்கள்படும் அவலம் நீக்கவென ஊருக்குப் பெயருக்காக ஒரு சில லொறிகளில் குறைந்தளவு உணவப் பொருட்களை அனுப்பாது அம் மக்களுக்குத் தேவைப்படும் போதிய அத்தியாவசிய உணவு, மருந்து வகைகளை அனுப்ப விரைவான நடவடிக்கை எடுக்வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றோம்.

அதே வேளை, கிளிநொச்சியை பை;பற்றவும் வன்னியை மீட்பற்காகவும் நடத்தி வரும் யுத்ததின் மூலம் யுத்தத்திற்கு முழு தீர்வு கண்டுவிட முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

சம்பந்தப்பட்ட தராப்பினர் அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய விரிவான பேச்சு மூலம் உடன்பாடு காணப்படும் நியாயமான அரசியல் தீர்வே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உள்ள வழிமுறையாகும்.

அத்தகைய அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு அவசியமாகின்றது. மட்டுமன்றி நாட்டிற்கும் அனைத்து ஐக்கியப்பட்ட இலங்கையில் பல்லினங்களும் சமாதானம் அமைதியுடன் இணைந்து வாழும் புதிய சூழல் தோன்றும் என எமது கட்சி திடமாக நம்புகிறது. என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

நன்றி சுடர்ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.