Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜப்பானில் புகலிடம் கோரும் இலங்கையர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

“மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் அகதிகளுக்குப் புகலிடம்வழங்கும் திட்டம் 1982ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கூடுதலானவர்கள் புகலிடம்கோரி விண்ணப்பித்த ஆண்டாக 2008ஆம் ஆண்டு கருதப்படுவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை இந்த வருடமே முதன்முறையாக 1000ஐத் தாண்டியிருப்பதாகத் தெரிவிக்கும் அந்த நிலையம், இதற்கு அடுத்த கூடுதல் எண்ணிக்கையாக 2006ஆம் ஆண்டு 954 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

ஆசியப் பிராந்திய நாடுகளில் நிலவிவரும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாமெனவும், இந்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள ஜப்பான் முயற்சிப்பதும், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா தனது குடிவரவுச் சட்டத்தில் கடும்போக்கினைக் கடைப்பிடிப்பதும் ஜப்பானில் அகதிகளாகப் புகலிடம்கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

1996ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம்வரை சராசரியாக புகலிடம் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 147ஆகக் காணப்பட்டதாகவும், இந்த வருடம் ஒருபோதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதாகவும் அகதிகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் தன்னார்வ அமைப்பு கூறுகிறது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் அகதிகளாகப் புகலிடம் வழங்குமாறு கோரி 975 பேர் டோக்கியோ பிராந்திய குடிவரவுத் திணைக்களத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும், இதனைவிட நயாகோ மற்றும் ஒசாகா ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய குடிவரவுத் திணைக்களங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும

ஜப்பானில் அகதிகள் அந்தஸ்து கோரி விண்ணப்பிப்பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக அங்குள்ள அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களில் இலங்கையர்களின் விண்ணப்பங்களும் அடங்கும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் அகதிகள் அந்தஸ்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடந்த செப்டெம்பர் வரை இவ்வாண்டில் 1015 பேரின் அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

2006 இல் 954 விண்ணப்பங்கள் கிடைத்தன. மியன்மார், துருக்கி, நேபாளம், எதியோப்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரஜைகள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், இலங்கை, நேபாளம், எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நிலைமை காரணமாக அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். டோக்கியோவில் இயங்கும் அகதிகளுக்கான ஜப்பான் சங்கம் ஜப்பானில் அகதி அந்தஸ்துகோருவதை ஆதரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என்பன பயங்கரவாத பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்துவதால் அகதி அந்தஸ்து பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளதாலேயே இவர்கள் ஜப்பானில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 1500 அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் குடிவரவு அதிகாரிகளால் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருடாந்தம் 45 பேருக்கு மட்டுமே ஜப்பானில் அகதி அந்தஸ்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.