Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தர் தரித்து நிற்பது, வெற்றியின் விளிம்பிலா..? அல்லது தோல்வியின் தொடக்கப் புள்ளியிலா?

Featured Replies

கடந்த செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திருமலைத் துறைமுகம். தமிழீழத்தின் தலைநகரும்,

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழும் திருக்கோணமலையின் கடற்படைத்தளம், துறைமுகம் மீது வான் தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகள்.

வழமைபோல், சேத விபரங்களை குறைத்துக் கூறும் அரச படைத்துறைப் பேச்சாளரின் கஞ்சத்தனம், மறுபடியும் வெளிப்பட்டது. இந்த வருடம் மே மாதமும், கடற்புலிக் கொமாண்டோக்களால், திருமலைத் துறைமுகத்தில் அழித்துதொழிப்புத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது, நினைவிருக்கலாம். எம்.வி.இன்வின்சிபிள் என்கிற `வெல்ல முடியாத' (Invicible) துருப்புக்காவி சரக்குக் கப்பல், துறைமுகத்தில் தரித்து நின்றவேளை, கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டு, குடாநாட்டிற்கான இராணுவ வழங்கல்கள் தடுக்கப்பட்டன.

வன்னி பிரதேசமெங்கும் தினக்குண்டு வீச்சு நடாத்தும் சிங்களத்தின் நடவடிக்கை தொடரும் பொழுதே, வான்புலிகளின் அதிரடித் தாக்குதல் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் நடாத்தப்பட்டுள்ளது. `நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை, எமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்' எனப் புரட்சியாளன் மாவோ தெளிவாகக் கூறியுள்ளார். நீண்டு செல்லும் துயர் சுமக்கும் கணப் பொழுதுகள், நீதியின் முன் அநாதரவாகக் கை விடப்பட்ட குரலற்ற மனிதர்களான வன்னி மக்களைச் சூழும் வேளையில், உலகை நோக்கி கிளிநொச்சி மையத்திலிருந்து மக்களின் உரத்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கண்மூடி விழித்திருக்கும் சர்வதேசத்தை நோக்கி, தாமும் இப் பூவுலகின் மானுடப் பங்காளர்கள் என்பதை நினைவு படுத்தியுள்ளார்கள் கிளிநொச்சி மக்கள். வானமே கூரையாக, மரநிழலில் ஆறுதலடையும் மக்கள் தலை மீதும் குண்டு வீசுகிறது சிங்களம். வன்னி மக்களின் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்குப் புலிகளோடு யுத்தம் புரிவதாக, சர்வதேசத்திற்கு தன்பக்க நியாயத்தை கூறும் மகிந்தர், கிளிநொச்சியில் ஒன்றுகூடும் மக்களின், தன்னெழுச்சிக் குரலையும் செவிமடுக்க வேண்டும். மகிந்தரைவிட, சர்வதேசமே இம் மக்கள் குரலைப் பதிவுசெய்து, சரியான பாதையைத் தீர்மானிக்க வேண்டும்.

அதேவேளை, மகிந்தரால் மீட்டெடுக்கப்பட்ட கிழக்கில்தான், திருமலைத் துறைமுகமும் இருக்கிறது என்பதனை காந்திதேசத்து அரசியல் ஆய்வாளர்கள் உணர்தல் வேண்டும். வெற்றியின் விளிம்பில் தரித்து நிற்பதாகக் கூறும் மகிந்தர், தோல்வியின் தொடக்கப் புள்ளியில் காலடி எடுத்து வைத்துள்ளாரென கொழும்பு அவதானிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இராணுவத்தின் வசமிருக்கும் பல்குழல் எறிகணை செலுத்திகள், நீண்ட தூர வீச்சுக் கொண்ட ஆட்டிலெறிகள், கீபீர், மிக்ரக மிகையலி விமானங்கள், இந்தியா வழங்கிய குருட்டு இராடர்கள், புலனாய்வுப் பிரிவுகள் வழங்கும் செய்மதிப்படங்கள் இவையனைத்தும், ஆக்கிரமிப்பாளனின் நகர்வுகளை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லாது.

படைபலம் சமனற்ற நிலையில், மக்கள் சக்தியே விடுதலைத்தனத்தின் மூல சக்தியாக இருக்குமென்பதே வரலாறு. எமது தேசியத் தலைவரால் முன்னோக்கி நகர்த்தப்படும் இவ் விடுதலைப் போரில் ஈட்டப்பட்ட சமர் வெற்றிகள் யாவும், மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் நிதர்சனமாகியுள்ளதை வரலாறு பதிவாக்கியுள்ளது. மக்களுக்காக, மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களே வெற்றி பெற்றிருக்கின்றன. அம் மக்களே தமக்கான தலைமைத்துவத்தையும் தலைவனையும் உருவாக்குகின்றார்கள். ஆகவே போராடும் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்திட முனையும் ஆக்கிரமிப்பாளனின் சர்வதேச, உள்நாட்டு சதிவலைப் பின்னல்களைக் கிழித்தெறிந்து, தெளிவான, சரியான பாதையில் அவ் வினத்தினைக் கொண்டு செல்லும் உறுதிமிக்க தலைவனை, தமிழினம் பெற்றிருக்கிறது.

இத்தகைய தலைவனின் பின்னால் உறுதிபட அணிதிரண்டிருக்கும் தாயக, புலம்பெயர் தமிழ் மக்களின் உளவுரணை சிதைப்பதற்கு, சிங்களம் மேற்கொள்ளும் உளவியல் சமரும் உச்சநிலையை எய்தியுள்ளது. மன்னாரில் ஆக்கிரமிக்கப்பட்ட சில பிரதேசங்களைத் தமது அரசியல் இலாபத்திற்கும், அதேவேளை தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கவும், மகிந்தரின் பரப்புரையாளர்கள் மிக நுட்பமான வகையில் பயன்படுத்துகிறார்கள். வன்னி மேற்கிலிருந்து உள்ளக இடப் பெயர்விற்குள்ளான தமிழ் மக்கள், தமது பிரதேசத்தை நோக்கி நகரவில்லையென்கிற கவலையும் அரசிற்கு உண்டு.

அவ்வாறு இடம்பெயர்ந்திருந்தால், அதை வைத்துப் பெரும் பிரச்சாரப் போரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பார் மகிந்தர்.மாகாணசபை தேர்தல்வரை உச்ச நிலையடைந்திருந்த மகிந்தரின் களமுனை வெற்றிப் பிரச்சாரங்கள், இனி வேறுவிதமான வடிவங்களை உருவேற்றி வெளிப்படப் போகின்றன.யுத்த தீர்விற்கான அங்கீகாரத்தை சிங்கள மக்கள் தமக்கு வழங்கியுள்ளதாகக் கூறும் அரசு பொதுத் தேர்தலொன்றிற்கான புதிய யுத்த வியூகங்களை வகுக்க முனைவார்கள். இவை தவிர, அதி தீவிர இனவாதம் பேசும் சிங்கள அணிகள், எதிர்க்கட்சியில் வீற்றிருக்காமல் இனிமேல் தன்னுடன் மட்டும் இணைந்திருக்க வேண்டுமென்கிற புதிய இனவாத அரசியல் கோட்பாட்டையும் மகிந்தர் நிறுவ முயற்சிப்பார்.

ஆகவே சிங்கள அரசியல்வாதிகளும், பிராந்திய அரசுகளும் தமது நிகழ்ச்சி நிரலிற் கேற்ப நகரும் வண்ணம், காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது மகிந்த அரசு. அதேவேளை விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தப் புறப்பட்ட இந்தியா, சிங்களத்தின் சிங்கக் குகைக்குள் சிக்கும் நிலையும் உருவாகுகிறது. சீனாவைக் காட்டி, இந்தியாவிற்கு குறளிவித்தை காட்டுகிறார் மகிந்தர். மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இந்தியா குறித்து எழுதிய விடயமொன்றை நினைவுபடுத்துவது தற்போது பொருத்தமாக அமையலாம்.

`சிங்கள ஆட்சியாளர்களால் தமிழீழ மக்கள் ஒடுக்கப்படுவதும், கொன்றொழிக்கப்படுவதும் இந்தியாவின் பெயரால்தான். தமிழீழ மக்கள் இரத்தம் சிந்துவதும், செத்து மடிவதும், துயரப்படுவதும் இந்தியாவிற்காகத்தான். இது ஒரு புரியப்படாத உண்மை. இனிமேலாவது புரிந்தேயாக வேண்டிய உண்மை இது.'

- இதயச்சந்திரன்

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இந்தியா குறித்து எழுதிய விடயமொன்றை நினைவுபடுத்துவது தற்போது பொருத்தமாக அமையலாம்.

`சிங்கள ஆட்சியாளர்களால் தமிழீழ மக்கள் ஒடுக்கப்படுவதும், கொன்றொழிக்கப்படுவதும் இந்தியாவின் பெயரால்தான். தமிழீழ மக்கள் இரத்தம் சிந்துவதும், செத்து மடிவதும், துயரப்படுவதும் இந்தியாவிற்காகத்தான். இது ஒரு புரியப்படாத உண்மை. இனிமேலாவது புரிந்தேயாக வேண்டிய உண்மை இது.' :rolleyes::huh::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த செவ்வாயன்று (30-9-2008) திருமலைத் துறைமுகத்தின் மீது புலிகள் குண்டு வீசினரா?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: புனிதன்,

இக்கட்டுரை எழுதப்பட்டு பல நாட்களாகி விட்டன. ஆனால் இணைப்பதற்குத்தான் சற்றுப் பிந்திவிட்டது என்று நினைக்கிறேன் !!!!!!!

  • தொடங்கியவர்

:rolleyes: புனிதன்,

இக்கட்டுரை எழுதப்பட்டு பல நாட்களாகி விட்டன. ஆனால் இணைப்பதற்குத்தான் சற்றுப் பிந்திவிட்டது என்று நினைக்கிறேன் !!!!!!!

பரவாயில்லை விடுங்கோ ஆறுதலாய் வாசிப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.