Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் சலசலப்புக்கு இலங்கை அரசு அஞ்சாதாம் - அநுர பிரியதரர்சன

Featured Replies

'இலங்கை அரசுக்கு எதிராகவும், அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளினால் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி இலங்ககைகுக் கவலையில்லை. தமிழ்நாட்டின் இத்தகைய சலசலப்புக்கு இலங்கை அரசு ஒருபோதும் அஞ்சாது.' மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவு நன்றாகவே உள்ளது. மத்தி அரசின் ஆதரவு இருக்கும் அவரை எதற்கும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.' என ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன நேற்று தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு :

இலங்கை அரசு மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ் நாட்டில், இலங்கை அரசுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் பற்றி இந்திய அரசு எமக்கு அறிவிக்கவில்லை. இவை இலங்கை-இந்திய உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு ஒரு போதும் புலிகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு குறியாயிருக்கிறது.

எமக்கும் இந்திய அரசுக்குமிடையில் நல்லதோர் உறவு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்கு பல உதவிகளைச் செய்துள்ளது.

பஙங்கரவாத்திற்கு எதிராகத்தான் நாம் யுத்தம் செய்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. ஆனால், நாம் தமிழ் மக்களை அழிக்கிறோம் என்று தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கூறுகின்றனர். இதில் உண்மையில்iலை.

எனவே, தமிழ் நாட்டில் ஏற்படும் இவ்வாறான சிறுசிறு சலசலப்புகள் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்படமாட்டோம்.

இது இப்படியிருக்க இலங்கையில் சிலர் தேசத்துரோகத்தனத்துடன் செயற்படுகினறனர். குறிப்பாக ஐ.தே.கட்சி தேசத்துரோத்தனமான கருத்துகளைத் தொடர்ந்தும் வெளியிடுகின்றது.

இலங்கை அரசு சர்வ தேச ஒப்பந்தங்கள் 27 ஐ மீறியதனாலேயே ஏற்றுமதிச் சலுகையை மீண்டும பெறுவதில் இலங்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என அக்கட்சியன் எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது பொய். அத்தோடு அரசு யுத்தத்தை விற்றே பிழைப்பு நடத்துகிறது என்றும் அவர் கூறியள்ளார்.

அப்படியெனறால் பயங்கரவாதம் நாட்டில் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் எதிர்கின்றார். எதைச் செய்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே ஐ.தே.க.வின் தி;ட்டம்.

நாம் இந்த தேசத்துரோத்தனமான கருத்துகளையெல்லாம் முற்றாகத் தோற்கடித்து முழு நாட்டிலும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவோம் என்றார்.

நன்றி சுடர்ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.