Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதி கூட்டும் அனைத்து கட்சி மாநாட்டை ஜெயலலிதா புறக்கணிப்பார்.

Featured Replies

இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்கிழமை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணிக்கப் போவதாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயா நேற்று அறிவித்திருக்கும் அதே சமயம், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க.வாபஸ் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மத்திய அரசின் வலிமையான பங்காளியாக தி.மு.க. உள்ளது. தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றால் இலங்கைத் தமிழர் தொடர்பாக மத்திய அரசு துரிதமாக செயற்படும். இலங்கைத் தமிழர் மீது உண்மையான கரிசனை இருக்குமானால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளை, செவ்வாயன்று இடம் பெறவுள்ள அனைத்துக் கட்சி சந்திப்பில் ஆராயவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தி இந்தியவின் மேற்பார்வையில் சமாதானப் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் அரசியல் நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தீவிரமான கரிசiயை வெளிப்படுத்தி வருகிறன்றனர். அதன் ஓரங்கமாக சென்னையில் மறியல் போராட்டத்தை தடையை மீறி நேற்று நடத்திய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் ஆதரவாளர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க வரும் 14ம் திகதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சித் தலமையில் பெறவுள்ள அனைத்தக் கட்சி தலைவர்கள் கூட்டததை அ.இ.அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க அளித்து வரும் ஆதரவை உடனடியாக திருப்பப் பெறவேண்டும். அப்படிச் செய்தால் மத்திய அரசு மனிதாபிமான அடிப்பiயில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட முன்வரும்.

அதை விட்டு விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. எனவே, இந்தக் கண்துடைப்பு நாடகமான அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று ஜெயா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இலங்கை இராணுவத்தால் இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று ம.தி.மு.க. சார்பில் சென்னையில் அறப்போராட்டம் நடைபெறுகிறது. அறப்போரட்டம் ஆரம்பிக்கும் இடத்தில் அதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்திருந்தனர்

திடீரென்று காவல் துறையினர் வன்முறையாளர்களைப் போல களத்தில் இறங்கி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளையும் சுவரொட்டிகளையும் பதாதைகளையும் கிழித்து எறிந்து அனைத்தையும் கொண்டு சென்று விட்டனர். இதற்குக் காரணம் கேட்டால் மேலிடத்தின் உத்தரவு என்று காவல் துறையினரால் கூறப்படுகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துரை வழங்கப்பட இருக்கிறது என்றவுடன் காவல்துறையினர் மூலம் நடத்தபட்ட இந்தச் சம்பவத்துக்கு கருணாநிதிக்கும் காவல்துறையினருக்கும் முதலில் என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினையை நான் கையில் எடுத்துக் கொண்டதாலும் பல தரப்பில் இருந்து தனக்கு எதிhப்புகள் வந்ததாலும் தற்போது இலங்கைத் தமிழர்கள இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இது ஒரு கண்துடைப்பு நாடகம்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில்; இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய முன்வரவில்லை. இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்யக் கூடிய மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. ஏன் விலக்கிக் கொள்ளவில்லை? உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அப்படிச் செய்தால் தான் மத்;திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட முன்வரும்.

அதை விட்டு அனைத்து கட்சிக் கூட்டம் என்பதெல்லாம வெறும் கண்துடைப்பு நாடகம். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. எனவே, இந்தக் கண்துடைப்பு நாடகமான அனைத்துக் கட்சியிக் கூட்டத்தை அ.தி.மு.க புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

நன்றி தினக்குரல்

அழியும் ஈழத்தமிழரை மையமாக வைத்த நன்றாகத் தான் தமிழக கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. இதைப் புரிந்து கொண்டுதான் தென்னிலங்கை பயங்கரவாத அரசு இவைகளை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்வதில்லை. இந்த சலசலப்புகளையும் கருத்தில் எடுத்துக் கொள்வதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு தமிழன் சேர்ந்தால் ,

ஐந்து கருத்துகள் , ஆனால்

ஒண்டும் முடிவுக்கு வராது .

அரசியலென்றால் இதெல்லாம் சகஜமுங்கோ

அவர்கள் தமது அரசியலுக்காகவோ அல்லது உணர்வின் அடிப்படையிலோ ஈழத்தமிழர் விடயத்தைக் கையில் எடுத்துக் கொண்டாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்பு இருந்த ஈழத்தமிழர் மீதான அனுதாப அலை மீண்டும் தமிழகத்தில் மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது. ஜெலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தாலும் ஈழத்தமிழர் மீதான படுகொலையை நிறுத்த ஆக்க ப+ர்வமான நவடிக்கையை திமுக எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறர்.

திமுக செய்வது போதாது என்பதே வைகோ ஜெயலலிதா போன்றவர்கள் தமது புறக்கணிப்பிற்கான காரணிகளாக சொல்கிறார்கள். இதுவும் கருணாநிதிக்கான ஒரு அழுத்தமாகவே எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இப்பிரச்சனையைக் கையில் எடுக்கும்வரை, அமைதியாக கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி ஐயா அவர்கள், திடீரென்று கூட்டம், கட்சி என்று தொடங்குவது எல்லாம் புரியவில்லை. இந்தப் பிரச்சனையால் கிடைக்கின்ற மக்கள் ஆதரவை தனக்குள் மட்டுப்படுத்தத் தான் இந்த நடவடிக்கையோ புரியவில்லை. இருப்பினும், அனைத்து கட்சிகளும் தமிழ்மக்கள் தொடர்பாக கொண்டிருக்கின்ற கரிசனைக்கு மிக்க நன்றிகள். அந்த அன்பு அரசியலைத் தவிர்த்து, சாகின்ற மக்கள் தொடர்பான உண்மைக் கரிசனமாகவே இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இப்பிரச்சனையைக் கையில் எடுக்கும்வரை, அமைதியாக கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி ஐயா அவர்கள், திடீரென்று கூட்டம், கட்சி என்று தொடங்குவது எல்லாம் புரியவில்லை. இந்தப் பிரச்சனையால் கிடைக்கின்ற மக்கள் ஆதரவை தனக்குள் மட்டுப்படுத்தத் தான் இந்த நடவடிக்கையோ புரியவில்லை. இருப்பினும், அனைத்து கட்சிகளும் தமிழ்மக்கள் தொடர்பாக கொண்டிருக்கின்ற கரிசனைக்கு மிக்க நன்றிகள். அந்த அன்பு அரசியலைத் தவிர்த்து, சாகின்ற மக்கள் தொடர்பான உண்மைக் கரிசனமாகவே இருக்கட்டும்.

:lol:

அரசியலில் ஒரு பிரச்சினையின் வேகத்தைத் தணிக்க இரு வழிகள் உள்ளன‌.

1) விசாரணைக் குழு

2) சர்வகட்சி மாநாடு

இல‌ங்கை அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் இந்த இருவகை சார்ந்தே காணப்படுகின்றன‌. தமிழர் தலைவராம் திரு. மு. கருணாநிதி அவர்களும் இலங்கை அரசு போல ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழராகிய எமக்கு மிகவும் பெருமை சேர்க்கிறது. :lol:

எமது பிரட்சனையில் தமிழகத்தில் இருந்து ஒருமித்த குரல்கள் வரவில்லையாயினும் உரத்த குரல்கள் ஒலிக்கத்தொடங்கி விட்டது. பிரித்த குடும்பம் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சி!

புரட்ச்சித்தலைவி போகவில்லையாயினும், அதே அங்கு எம்மை பாதுகாக்க நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க தூண்டுதலாக இருக்கப் போகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.