Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள்: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்திடம் நோர்வே தமிழ் கல்விக்கூடங்கள் வேண்டுகோள்

Featured Replies

எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள்: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்திடம் நோர்வே தமிழ் கல்விக்கூடங்கள் வேண்டுகோள்

[சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 07:15 பி.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள் என்று அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு பிரிவிடம் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பில் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட வளாகங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திரு.திருமலை

தமிழ்நாடு மாநில தலைவர்

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம்

16.10.2008

அன்புடையீர்!

கடந்த புதன்கிழமை தாங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காகப் பாரிய அளவில் ஏற்பாடு செய்து நடத்திய வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் பற்றி அறிந்தோம். நன்றியுணர்வால் விழிகள் கசிகிறது. நெஞ்சு நிறைந்துள்ளது.

நாதியற்று, இராணுவ வல்லாதிக்க அரண்களுக்குள் நசுக்கப்படும் உங்கள் தொப்புள்கொடி உறவுகளின் குரலாக தமிழகத்தில் தாங்கள் ஒலித்தது எமக்கும் எம் தாயக உறவுகளுக்கும் ஒரு தார்மீக பலமாய் வலுச்சேர்க்கிறது.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றுக்கும் அப்பால் மாணவ சமூகம் ஒருசேரத் திரண்டு தமிழ்நாடு முழவதும் தமது எழுச்சியை, சக்தியை ஈழத்தமிழினம் மீதான ஆதரவு அலையாய் வெளிப்படுத்தியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

எம் தேசத்தின் மிக அருகே உள்ள தமிழ்நாட்டு உறவுகள் தம் உடன்பிறப்புக்காகக் குரல்கொடுக்க, போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டார்கள் என்று மீண்டும் ஒருமுறை வலுவாக நிரூபித்துள்ளீர்கள். துளிர்விட்டுள்ள எம் நம்பிக்கை வலுப்பெற வேண்டும்.

எமது சொந்த வாழிடங்களிலேயே தினம்தினம் ஏதிலிகளாக எமது மக்கள் இடம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு சிங்கள இனவாதிகளாலும், அரசாலும் தமிழினம் சாதுரியமாக, சாகடிக்கப்படுகிறது. உலகத்தின் கண்களுக்கு மாயத்திரையிட்டு அங்கு ஓர் இனச்சுத்திகரிப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டு மாணவ சமூகம் என்றவகையில், குறிப்பாக ஈழத்தமிழ் மாணவர்களின் இன்னல்கள் தங்களுக்கு நன்கு புரியும். எம் இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க இனவாத அரசின் முக்கிய குறி எம் மாணவர்களின் கல்வியாகிப்போனது.

ஆண்டாண்டுகளாகப் பேணப்படும் தரப்படுத்தல், யாழ். நூலக எரிப்பு, பாடசாலைகள்மீ தான குண்டுவீச்சு, தமிழ்ப்பாடசாலைகள் சிங்களமயமானமை என்று இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். மரங்களின் கீழ் கல்விகற்ற மாணவர்களும் எறிகணைகளால் விரட்டப்படுகிறார்கள். கல்வி உபகரணத்தடைகள், போசாக்கின்மை போன்றன தொடர்கல்விச் செயற்பாடுகளுக்குத் தடைகளாகின்றன. கல்விச் சமூகத்தைச் சிதைப்பதன் மூலம் எதிரி எம் விடுதலை வீரியத்தை குறைக்க முனைகின்றான்.

தங்களின் இந்த இன உர்வும் ஆதரவு அலையும் தொடரவேண்டும் என உரிமையோடு எதிர்பார்க்கின்றோம். மாணவர் எழுச்சி என்பது மகத்தானது என்பதை உலகம் உணராதது அல்ல. இவ்வாறான பெரிய எழுச்சியின் மாணவர்களை ஒன்றிணைந்து கவனயீர்ப்பை நடாத்திய அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்திற்கும் அதன் தமிழ்நாட்டு மாநில செயற்பாட்டாளர்களுக்கும் எம் தாயக உறவுகள் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்தும், சிறிலங்கா இனவாத அரசின் கோர முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவும், இந்தியா, சிறிலங்காவுக்கு வழங்கும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கவும், தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை எடுத்தியம்பவும் அயராது உழைப்பீர்கள் என நம்புகிறோம்.

-உறவோடும் உரிமையோடும்

தமிழ்மாணவ சமூகத்தின் சார்பில்

அனைத்து அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட வளாகங்கள்,

நோர்வே.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.