Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு:

Featured Replies

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு:

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார்.

நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை.

நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன.

ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு.

அதேபோல் மௌபிம மற்றுமு; சண்டே ஸ்ரான்டர்ட், நமது ஈழநாடு என்று பத்திரிகை நிறுவனங்கள் கூட இக்காலப்பகுதிக்குள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை கொல்லப்பட்ட அல்லது அச்சுறுத்தபட்ட ஊடகவியலாளர்கள் எவரும் யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையோ யாரால் அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதையோ காவற்துறையினர் கண்டுபிடித்ததாகவில்லை.

இந்த வருடம் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் மற்றும் ஜசிகரன் அவருடைய துணைவியார் ஆகியோர் மீதான வழக்கும் முடிந்தளவுக்கு அரச தரப்புக்களால் இழுத்தடிப்பச் செய்யப்பட்டு வருகிறது.

ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது:

அவசரக்கால சட்டத்தின் கீழ் மார்ச் 7 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வகைகப்பட்ட ஊடகவியலாளர் ஜெ. எஸ். திஸ்ஸநாயகம், அரசுக்கு அவதூறு செய்யும் வகையிலும் இன வன்முறைகளை தூண்டுவிக்கும் அல்லது தீவீரப்படுத்தும் வகையிலும் சஞ்சிகைகளை வெளியீடு செய்து கட்டுரைகளை பிசுரித்தமைக்காக பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

தனது நியாயமான கடமைகளை மேற்கொண்டமைக்காக ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்; கீழ் குற்றஞ்சாட்டப்படுகின்றமை இதுவே முதற் தடவையாகும். அதாவது இக்கொடூரமான இரட்டைச் சட்டங்களான அவசரக்கால சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டங்களின் கீழ் சிக்கி தவிக்கும் முதல் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகமாவார். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசு தற்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிப்பது கவலைக்குரிய விடயமாகவுள்ளது என்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் பல்வேறு அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தினால் 2006ல் வெளியிடப்பட்ட நோத் ஈஸ்டன் ஹேரல்ட் (Northeastern Herald) என்ற சஞ்சிகையில் அவரால் பிரசுரக்கப்பட்ட இரு கட்டுரைகள் இன வன்முறைகளை தூண்டுவதாகவும, இது பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ ஓர் குற்றமாக கருதப்படுவதாகவும் மேலும் இச்சஞ்சிகையை வெளியிட அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகளை பெற்று பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அவ்வமைப்புக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இன, பால் வேறுப்பாடுகளுக்கு அப்பால் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தும் உரிமை ஓவ்வொரு பிரஜைக்கும் உள்ளதோடு அவ்வாறு வெளிப்படுத்தும் வேறுப்பட்ட கருத்துக்களே ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும். அரசின் இந்நடவடிக்கை இலங்கை யாப்பின் உறுப்புரை 13 (1) னை புறக்கணிக்கும் ஓர் செயலாகவுள்ளது. இலங்கையில் அவசரக்கால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்; சர்வதேச மனித உரிமைகள் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு ஒவ்வாத அடிப்படையில் உள்ளூர் மற்றும் உலகலாவிய ரீதியில் மனித உரிமை பாதுகாவலர்களாலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களினாலும் பலத்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

அவசரக்கால சட்டத்தின் கீழ் அவசியப்படும் சில ஏற்பாடுகளான தகுந்த சமயத்தில் நியாயமான தடுத்து வைத்தல் கட்டளையை சமர்ப்பித்தல் மற்றும் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர் செய்தல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலேயே ஊடகவியலாளர்களான திஸ்ஸநாயகம், ஜெசீகரன் மற்றும் வளர்மதி அவர்களின் கைதும் தடுத்து வைத்தலும் இடம்பெற்றுள்ளன.

தேவைப்படும் பொழுது இவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும்; சட்டதரணிகளுக்கும் இவர்களை சந்திப்பதற்கு அனுமதியளிப்படவில்லை. திஸ்ஸநாயகத்தின் சட்டதரணிகள் அவரை சந்தித்த இரு தருணத்திலும் ஓர் காவற்துறை அதிகாரி அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

2005ல் இலங்கை பற்றி தனது இறுதி முடிவுகளை சமாப்பித்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சித்திரவதைக்கெதிரான செயற்குழு இவ்வாறான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கு சட்டதரணிகளை இரகசியமாக சந்திக்க அனுமதியளிக்கப்படுவது ஓர் அடிப்படை ஏற்பாடாகும். அத்துடன் தடுத்து வைக்கப்ட்ட மூவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கபடாத காரணத்தினால் அவாகளது உடல்நிலை குன்றி வருகின்றது. மேலும் இம்மூவரில் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. ஜசீகரன் தன்னுடைய காயங்கள் பற்றிய விபரங்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் கூறியதன் காரணமாக பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக ஜூன் 23 அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார். இதன்காரணமாக அவர் பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்ப

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடகவலைப்பின்னல் நிலையம்

மன்னார் நிருபர் - படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளாலர் நிமலராஜன் தொடர்பான சூத்திர தாரிகள் விறைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என மன்னார் தகவல் தொடர்பாடளுக்கான ஊடக வலைப்பின்னல் நிலையம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேசச் செய்தி சேவைக்கான யாழ் மாவட்ட செய்தியாளராக கடமையாற்றிய நிமல் ராஜன் செய்தித் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இரவு வேலையில் அவரது வீட்டில் வைத்து ஆயுத தாரிகளினால் சூட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியளாலர் படுகொலை செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் இடம் பெற்று வருவதால் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஊடகத்துரையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து மட்ட விசாரணைகளும் ஊடகத்துரை சார்ந்தோருக்கு நம்பிக்கையீனங்களை தோற்றுவித்திருக்கின்றது .

ஜனநாயகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை செயலிலக்க செய்வதாக அமைகின்ற இது போன்ற விடயங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என மன்னார் தகவல் தொடர்பாடளுக்கான ஊடக வலைப்பின்னல் நிலையம் மேற்படி அறிக்கையில் கேட்டுள்ளது.

நன்றி வீரகேசரி இணையம்

ஊடகவியலாலர் நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள்.

October 19th, 2008 · No Comments

முன்னால் பிபிசி ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலையை ஈபிடிபி துணை இராணுவக்குழுவானது செய்ததாக சாட்சிகள் தெரிவித்து, அதன் ஆயுததாரிகளில் ஒருவரான நெப்போலியன் என்பவர் கைது செய்யப்பட்டும் இருந்த நிலையில் பிணையில் விடுதலையான சமயம் பிரித்தானியாவிற்கு ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் அனுப்பப்பட்டு அரசியல் தஞ்சமும் கோரியுள்ளார்.

இற்றைவரை ஊடகவியலாளர் நிமல்ராஜனின் கொலை தொடர்பான வழக்கு சிறிலங்காவில் விசாரனைக்கு எடுக்கப்படாமலும், கொலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவுமில்லை. ஈபிடிபி துணை இராணுவக்குழுவின் முதன்மை ஆயுததாரியும் சிறிலங்கா அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா கொலையாளியை இலண்டனில் சந்தித்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் கூட ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையாளியான ஈபிடிபி துணை இராணுவக் குழுவின் ஆயுததாரியான நெப்போலியன் பிரித்தானிய தேசத்தில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் தப்பியுள்ளார். கொலையாளியை தப்ப பிரித்தானியாவும் உடந்தையாகி இருந்தது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு.

இதுவரை கொல்லப்பட்ட அல்லது அச்சுறுத்தபட்ட ஊடகவியலாளர்கள் எவரும் யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையோ யாரால் அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதையோ சிறிலங்கா காவற்துறையினர் கண்டுபிடித்ததாகவில்லை.

ஊடகத்துறையினர் மீது சிறிலங்கா அரச இயந்திரத்தினால் தொடரும் கொலை வெறி அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளனவே தவிர முடியவில்லை.

..... http://www.orunews.com/?p=2292

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.