Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உனைத்தேடி நான் வருவேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனைத்தேடி நான் வருவேன்....

சிறு கதை.....

பல வருடங்களின் பின் அவன் தாய் நாட்டிற்கு போயிருந்த படியால் அவன் லண்டன் வந்த பின்னர் ஆவணி மாதம் 2003 இல் யுத்த நிறுத்தக் காலத்தில் லண்டனிலிருந்து இலங்கை சென்று பின்னர் யாழ்ப்பாணம், பின்னர் நல்லூர் என்று சென்றடைந்தான் சந்திரன்.

நல்லூர் திருவிழா எல்லாம் அவனின் குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் தான் சிறுவயதில் பார்த்த வல்லிபுரக் கோவிலை பார்க்க ஆசைப்பட அவனின் அக்காவின் மச்சானும்( அக்காவின் புருசன்) வான் ஒன்றை ஒழுங்கு செய்து ஒரு சனிக்கிழமை எல்லோரும் புறப்படத் தயாராயினர்.

சிறுவயதில் தந்தையை இழந்த சந்திரன் தன்னுடன் சேர்த்து பொறுப்பில்லாத மூத்த அண்ணன், பின்னால் மூன்று அக்காமார், கடைசியில் தான் என்ற ஐந்து பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு அம்மா பட்ட கஸ்ரத்தைப் பார்த்து சிறுபிள்ளையாய் இருக்கும் போதே ரத்தக் கன்ணீர் வடித்தவன்... :wub: . தன்னிலே மிகவும் பாசங்கொண்ட தாயின் கண்ணீருக்காய் சிறு வயதிலேயே வெளி நாடு வந்து சேர்ந்தவன்.

பல வருடங்களின் பின் ஊருக்கு திரும்பிச் சென்ற போது இவன் நாட்டைவிட்டு வந்த பின்னர் அவனின் அக்காவுக்குப் பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளும் இவன் கைக் குழந்தையாக விட்டுவிட்டு வந்த இன்னுமொரு அக்காவின் மற்றப் பிள்ளைகள் மற்றும் இவனின் அம்மா, மூத்த அண்ணன், இவனின் அக்காமார் என்று எல்லோருமே இவனில் பாசமழை பொழிந்ததில் திழைத்திருந்தான் சந்திரன்.

மிகவும் சந்தோசமாக சென்ற வண்ணம் இவர்களின் வாகனம் வில்லிபுரக்கோவிலை அடைந்தது. அங்கே கோவிலுக்குள் சென்று தரிசனம் எல்லாம் முடித்த பின்னர் வெளியில் வந்து சமைத்துச் சாப்பிட்ட பின்னர் இனி எங்கே போவது என்று எல்லோரும் யோசிக்க

''..வாங்கோ மாமா மணற்காடு போய் பார்துவிட்டு அங்கால போய் கடலிலும் குளிச்சிட்டு வருவம் என மருமக்கள் கேட்க..''

'' சரி, உங்களுக்கு விரும்பின இடத்துக்கு போங்கோ..'' என்று சொல்லிவிட்டு அவன் வாகனத்தில் உட்காரவும்..

'' தம்பி எனக்கும் அங்கே போகத் தெரியாது, அத்துடன் '' ஆமிக்காம்ப் '' இருக்குது என..'' வாகன ஓட்டுனர் கூறவும்...

'' இல்லையண்ணை இப்ப யுத்த நிறுத்தக்காலம் தானே போகலாம் ஆனால் யாரு உள்ளூர்காரர்களை வழி கேட்டுப் போவம்...'' என அவனின் மச்சான் கூறவும்..

'' என்ன அண்ணை ஏதாலும் பிரச்சனையா வேணுமென்றால் நான் வழி காட்டுறேன் எனக்கு இந்த இடம் அத்துபடி நீங்கள் பயப்பிடாம வாங்கோ...''

என்று கேட்டவண்ணம் சந்திரன் வயது அளவு பெடியன் ஒருவன் வந்து என் பெயர் நிலவன் நானும் இந்த ஏரியா தான் வாங்கோ அண்ணை என்று இவர்களுடன் அவன் வாகனத்தில் ஏறி இவர்களுக்கு தேவையான இடங்களுக்கு கொண்டுபோய் காட்டி கடலிலேயும் குளித்து மிகிழ்ந்து மிகவும் நட்புடன் சேர்ந்து கொண்டான் அந்தப் பையன்.

அவன் விழுந்து விழுந்து செய்த உதவிகளைப் பார்த்து எல்லோரும் மிகவும் மகிழ்ந்து கொண்டனர். உள்ளூர்களுக்கு கூட்டிச் சென்று மீன்கள் கருவாடுகள் அது விற்பவர்களிடம் அடிபட்டு வாங்கிக் கொடுத்து அன்பாலே அவர்களை திகைக்க வைத்து விட்டான். எல்லாம் செய்து முடிந்த பின்னர் திரும்பவும் வல்லிபுரக்கோவிலடிக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டு.....

'' சரி அண்ணை நீங்கள் கவனமாகப் போட்டு வாங்கோ, நீங்கள் திரும்பவும் வந்தால் சந்திப்போம்...'' என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட ஆயத்தமாக சந்திரனின் அம்மா சந்திரனைக் கூப்பிட்டு...

'' தம்பி அந்தப் பிள்ளைக்கு ஏதாலும் காசு கொடுத்து விடு பாவம் எங்களோட இவ்வளவு நேரம் இருந்தது அல்லவா..'' என சந்திரனும் உடனே...

'' நிலவன்..ஒருக்கா நில்லுங்கோ ஒரு அலுவல்..'' என்று அவனைக் கூப்பிட்டு நிறுத்திவிட்டு இந்தாங்கோ என்று மூவாயிரம் ரூபாவை அவனிடம் நீட்டினான்......

''என்ன சந்திரன் நீங்கள்... நான் இதுக்காகவே உதவி செய்தனான் ஒரு '' பிரண்ட்சிப்'' ஆகத்தானே செய்தனான் அதுக்கு நீங்கள் இப்படிப் பண்ணுறீங்கள், இதை முதல் உள்ளே வச்சிட்டு கவனமாகப் போட்டு வாங்கோ...'' என சிரித்துவிட்டு அவன் கிளம்பவும் அவன் சொன்ன வார்த்தைகள் முகத்தில் அறைந்ததாக உணர்ந்த சந்திரன் வெளி நாட்டுக்கு வந்து எங்கள் தமிழீழத்தின் நட்புக் கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமக மறந்து விட்டோம் என நினைத்துக் கொண்ட சந்திரன்....

''மன்னிச்சுக் கொள்ளுங்கோ நிலவன் நான் தெரியாமச் செய்திட்டன், சரி கவனாமா போங்கோ..'' என்று சொல்லவம்..

..'' சரி இனி வரேக்க நீ, வா, போ என்று கூப்பிடு நானும் அப்படியே கூப்பிடுறன் என நிலவன் கூறவும்

''சரியடா கவனமாகப் போட்டுவா என்ன.....! '' என்று சந்திரன் நேரடியாகவே சொல்லிவிட்டு புது நண்பனை பார்த்துச் சிரிக்கவும்... :(

'' லண்டனுக்கு போனால் எங்களையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்... எப்படியோ.. விதியிருந்தா சந்திப்போம் இதே இடத்தில சந்திப்போம்... சரி சந்திரன் நான் போட்டு வாறன்...'' என்று எல்லோருக்கும் கை காட்டிவிட்டு நிலவன் புறப்படவும் இவர்கள் வாகனமும் புறப்பட்டது.

ரயில் பயணங்களைப் போல் புதிதாய் ஏற்பட்ட நட்பு முளைக்க முதலேயே முளையிலேயே முறிந்துவிட்டதை நினைதவனாக வந்து கொண்டிருந்த சந்திரன்.... :)

''அட....கடவுளே நிலவன்ர விலாசத்தை வாங்க மறந்து விட்டேனே...'' :)

என இவன் கவலைப்பட இவனின் அம்மா அந்தத்தம்பி இங்க தானே இருப்பான் அடுத்தமுரை வரும் போது சந்திக்கலாம் தானே என்று அம்மா சமாதானப் படுத்தவும் எல்லாருமாக வீடுவந்து சேர்ந்தனர்.

எல்லா அலுவல்களும் முடித்து லண்டன் வந்து சேர்ந்தவனின் அன்றாட வாழ்க்கை தொடங்கி பல மாதங்கள் உறுண்டோடியது. இந்த நிலையில் நத்தார் திரு நாளுக்கு அடுத்த நாள் ''பொக்ஸிங் டே'' அன்று சந்திரனின் சில சொந்தங்களுடனும் அவனின் நண்பர்களுடனும் ஒரு விருந்துபசாரம் ஒழுங்கு செய்து விருந்துக்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க தொலைக்காட்சிப் பெட்டியை போட்ட சந்திரனுக்கு அப்போது தான் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்தது தெரிந்தது..... ! :(

ஆம், ஆழிப்பேரலை(சுனாமி) அவலம், கொத்துக் கொத்தாக உயிர்கள் எல்லா இடங்களிலும் பறிபோகிக் கொண்டிருந்தது. இலங்கையிலும் பல இடங்கள் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அதில் வடமராச்சியில் ஓர் இடத்தைக் காட்டி இறந்தவர்களளின் உடல்களையும் காட்டி செய்தி சொன்ன போது சந்திரனுக்கு ஓரே அதிர்ச்சி காரணன் அது நிலவனின் சொந்த இடம் அவனும் கடலுக்கு அருகாமையில் தான் வசிப்பதாகச் சொல்லியிருந்தான்.

செய்தி சொன்னவர்களும் பல உயிர்கள் போய்விட்டது முடிந்தவற்றைத்தான் காண்பிக்கிறோம் என்று சொல்லவும் சந்திரனுக்கோ நிலவனின் நினைவு வந்து கொண்டிருந்தது, அவனின் சிரித்த முகம், துடிதுடிப்பான குணம், உதவி செய்யும் மனப் பாங்கும் அவன் இருதியாகச் சொன்ன வார்த்தைகளும் '' லண்டனுக்கு போனால் மறந்து விடுவீர்கள் '' இவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

விருந்துக்கு வந்தோரும் இவ்வளவு உயிர்கள் இறந்து கிடக்க நாங்கள் இப்படிச் சாப்பிடுகிறதா என சாப்பிடவிருப்பமில்லாமல் அரைகுறையாக எழுந்து பின்னர் வீடுகளுக்குச் சென்ற பின்னர் அவனும் நிலவனை நினைக்க கண்களில் தானாகவே நீர் கொட்டியது. அதன் பின்னர் சில நாட்களாக இறந்த நம் உறவுகளுக்காக கவலையுடன் ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு அதன் அலுவல்கள் எல்லாம் செய்த பிறகு மறுபடியும் இவன் நினைத்து மனம் கலங்கிய உறவு நிலவன்.

புதிதாய் முளைத்து பூக்க முதலிலேயே விதியை நம்பி பிரிந்து போன நட்பெனும் சொந்தம் இன்று உயிருடனா..? அல்லது இல்லையா..? இருந்தால் எங்கிருப்பான் உள் நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா..? என்று விடை கிடைக்காத பல கேள்விகளுடன் விதி நிச்சியம் நம்மை மறுபடியும் சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் போகச் சந்தர்ப்பம் வந்தால் வில்லிபுரக் கோவில் வீதிகளிலே போய் நின்று...

'' நிலவா...! நீ எங்கேயடா... இருக்கிறாய் நில...வா..! என்று உரக்கக் கத்தி அழைக்க வேண்டும் நிச்சயம் அவன் வருவான் என்ர நம்பிக்கையடன் இன்றும் நிலவன் உயிருடன் இருப்பான் என்ர நம்பிக்கையிலும் தன் அன்றாட வாழ்க்கையை தொடர்ந்த வன்ணம் செல்லும் இன்னொரு நண்பன் இங்கே...!

இது ஓர் உண்மைச் சம்பவம்..........

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு உலகத்தில் இல்லை இதுவும் மேலான அன்பே நண்பர்கள் இனைய வேண்டுகிறேன்

Edited by puspaviji

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

puspaviji

நீங்கள் சொன்னது போல் நட்பைப் போல எந்த உறவும் இல்லை தான், ஒரு நாள் பழக்கத்திலேயே கண்கலங்க வைத்துவிட்டானே இதைவிட நட்புக்கு என்ன சாட்சி வேண்டும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி .........நான்கு ஐந்து வருட முன் நடந்த கதையை ,நினைவு வைத்து எழுதி இருக்கிறீர்கள். நட்பின் வலி உணர முடிகிறது . நல்ல கதை .அக்கா நிலாமதி j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

எத்தனை வருடங்கள் சென்றாலும் அந்த ஒரு நாளில் ஏற்பட்ட நட்பு இன்று வரை வலியைத் தந்து கொண்டுதான் இருக்கிறது. அவனைக் கண்டால் அளவில்லா மகிழ்ச்சிகொள்லும் காணாவிட்டால் அந்த வலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.