Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலையிலிருந்து ஈழத்தமிழினத்தை காக்க, தமிழகத்தின் எழுச்சியை தடுக்க நடாத்தப்படும் போலி நாடகங்களில் ஒன்றே மட்டு ஆர்ப்பாட்டமாகும்: த.வி.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு கடுங்கண்டனம்

Featured Replies

நாளுக்கு நாள் கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரளித்து வரும் கருணா, பிள்ளையான் தலைமையிலான ஆயுத குழுக்கள், இன்று தமிழக அரசிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக சிறிலங்கா அரசால் தூண்டிவிடப்பட்ட நிலையில் ஆயுதமுனையில் மக்களை பலவந்தமாக இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் எனும் நாடகத்தில் பங்கு பெற வைக்கப்பட்டிருப்பதாக த.வி.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு விசனம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிக கொடூரமான இனவழிப்பு போரையும், மனித உரிமை மீறல்களையும் தடுப்பதற்கு தமிழக தலைவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் இந்நிலையில், கிழக்கில் இயங்கும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளான ஆயுதக்குழுக்கள், தமது சுகபோக வாழ்க்கைக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ எனப்பயந்து, கிழக்கு மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி, அவர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி சர்வதேசத்தினை முக்கியமாக இந்தியாவை ஏமாற்ற முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்திரகாந்தன் சந்திரநேரு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டத்தினை நடாத்துவதற்காக, முன்கூட்டியே பொதுமக்களின் வீடுகளுக்கும், அரச, தனியார் அலுவலகங்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் ஆயுதங்களுடன் சென்ற இக்குழுவின் உறுப்பினர்கள், இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் கடுமையாக தண்டுக்கப்படுவர் எனும் தொனியில் எச்சரித்துமுள்ளனர். அத்துடன் அவர்களது அடையாள அட்டைகளை பறித்தும் , வாகன உரிமையாளர்களின் வாகன சாவிகளை பறித்தெடுத்துமுள்ளனர்.

இன்று, தமது அன்றாட ஜீவனோபாயத்திற்கான தொழிலுக்கு சென்றவர்கள், சந்தையில் பொருட்கள் கொள்வனவிற்காக சென்றவர்கள் எல்லோரும் பலவந்தமாக மடக்கிப் பிடிக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசின் பூரண உதவியுடன் வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்களின் விருப்பின்றி பலாத்காரமாக ஏற்றப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள் மிக அஷோகரிய நிலைக்கு தள்ளிய போதும், அனைத்தையும் சிறிலங்காப் படையினர் கைகளை கட்டியவாறு வேடிக்கை பார்த்து நின்றும் உள்ளனர். “எங்களின் கைகளைக் கொண்டே, எங்களின் கண்களைக் குத்துகிறார்கள்” என்ற நிலையே அங்கு காணப்பட்டது.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் “விதைநெல் இலவசமாக தரப்போகிறோம்” எனக்கூறி மக்களை வரவழைத்து விட்டு, அவர்களை ஆயுதமுனையில் பலாத்காரமாக வாகனங்களில் ஏற்றியுமுள்ளனர்.

இலங்கையில் இருந்து சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரான பஸில் ராஜபக்ஸ தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இந்தியா சென்றிருக்கு, நிலையில், தமிழக அரசிற்கும், இந்திய ஊடகங்களுக்கும் ஓர் அழுத்தத்தை கொடுப்பதற்காக,ஆயுதமுனையில் கிழக்கு மக்களைக் கொண்டு ஓர் போலியான ஆர்ப்பாட்டத்தினை நடத்தி, அதனை இந்தியாவிற்கு காட்டும் சிறிலங்கா அரசின் சதித்திட்டமே இவ்வார்ப்பட்டமாகும். சிங்கள மக்களைக் கொண்டு இவ்வாறான ஆர்ப்பட்டங்களை நடத்தினால், அது எடுபடாது என்பதை நன்கறிந்த சிறிலங்கா அரசானது, கிழக்கின் அப்பாவி தமிழ் மக்களை, தமிழ் ஆயுதக்குழுக்களைக் கொண்டே பகடைக் காய்களாக்கியுள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அரசின் சதி வலைக்குள் இந்திய அரசும், தமிழக தலைவர்களும் வீழ்ந்து விடக்கூடாது, இந்தியா சென்றிருக்கும் சிறிலங்காவின் உயர்மட்ட குழுவினருக்கு போதிய அழுத்தங்களைக் கொடுத்து, இதய சுத்தியுடன் காத்திரமான பங்களிப்பை வழங்கி. ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க முன்வரவேண்டும் என தனது அறிக்கையில் த.வி.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு சுட்டுக் காட்டியுள்ளார்.

http://www.orunews.com/?p=2377

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மக்களின் நிலமை இப்படியாயிற்றே :lol::(:(

[விரிக்கப்பட்ட வலைக்குள் மாட்டி விட்டார்கள் கொஞ்சம் விலகினாலும் தங்களின் கழுத்தை நெருக்கிவிடும் நூல்] <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.