Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 10/27/2008 - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவருடன் மத்திய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான முழு விபரங்களையும் நான் அவரிற்கு எடுத்துக்கூறினேன். இதன்போது தமிழ் மக்கள் குறித்த மத்திய அரசின் கரிசனை வெளியிடப்பட்டதையும் நான் அவரிற்கு சுட்டிக்காட்டினேன். இது தொடர்பில் அவர் தனது திருப்தியை வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க எம்.பி.க்கள் பதவி விலகும் தீர்மானத்தை கைவிடுவதற்கும் சம்மதித்தார்.

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.

அண்டை நாடென்ற வகையில் இலங்கைக்கு இலகுரக இராணுவ தளபாட உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. இவ்வுதவியின் கீழேயே ராடர் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகளையும் வழங்கியுள்ளோம் எனினும் இலங்கை இராணுவத்திற்கு எந்தவித இராணுவ பயிற்சிகளையும் இந்தியா வழங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலகுரக ஆயுதங்கள் என்றால்... ஆமாம். இவற்றைச் சிங்கள அரசு, காக்கா சுடுவதற்கே பயன்படுத்தி வருகின்றது...

நாம் சிலவற்றை மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்!

1. பல்வேறு நாடுகள் புலிகளின் மேல் தடை கொண்டுவர முக்கிய காரணம் இந்தியா கொடுத்த இராஜதந்திர அழுத்தங்கள்!

2. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை தூக்கி எறிய சிறீலங்கா அரசுக்கு தூண்டுதலும் தைரியமும் கொடுத்தது இந்தியா!

3. மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா வில் ஐரோப்பிய நாடுகள் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தியது இந்தியா!

4. 100 மில்லியன் டொலர்களை வட்டியில்லா கடனாக யுத்தநிதியாக சிறிலங்காவுக்கு வாரி வழங்கியது இந்தியா!

5. GSP+ விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் முரண்டு பிடிக்கும் தைரியத்தை பின்னணியில் இருந்து சிறிலங்கா அரசுக்கு வழங்குவது இந்தியா தான்

6. புலனாய்வுத்தகவல்கள், இராணுவ பயிற்சிகள், இராணுவத்தளவாடங்கள் என்று சிறிலங்காவுக்கு வாரி வழங்குவது இந்தியா

7. மொத்தத்தில் சிறிலங்காவில் நடக்கும் யுத்தத்தையும் தமிழர் படுகொலைகளையும் சிங்கள அரசினூடாக நடத்திக் கொண்டிருப்பது இந்தியாவே ஆகும்.

8. வெளிப்பார்வைக்கு இது சிங்கள அரசு தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதம் போல் தெரிந்தாலும் இது உண்மையில் இந்தியாவே

-> தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் யுத்தமாகும்

மத்தியில் ஆட்சி செய்பவர்கள் மாறினால் ஒழிய, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவின் இந்த தமிழர் விரோதப்போக்கு

மாறப்போவதில்லை என்பதே என் கருத்தாகும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக, பொருளாதரம் பற்றிய அறிவு இல்லாதால் கேட்கின்றேன். ஏன் இத்தனை நாளாகியும், இலங்கை ரூபாவில் மதிப்பிறக்கம் ஏற்படவில்லை. முன்பு இலங்கையில் 2.15 ஆக இருந்த இந்தியப்பணம், 1.76 சதமாகியுள்ளது. கனடாவின் பணம் 104ரூபாவில் இருந்து, 86 ரூபா வரை குறைந்துள்ளது. ஆனால் இலங்கைப் பணம் இவ்வளவு நாளாகியும் பாதிப்பு ஏற்படவில்லை ஏன்?

பணத்தின் நாணயத்தின் மதிப்பீடுகள் இருண்டு வகையாக பார்க்கப்படுகின்றன ஒன்று உள்ளுர் நாணய மாற்றீடுகள் மற்றது உலக நாணய மாற்றீடுகள் இதில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டது காரணம் உலக நாணய மாற்றீடுகள் என்பது கூடுதலாக உலகம் முழுவதும் கவனித்துக்கொண்டு இருப்பது இதை வைத்துக்கொண்டுதான் உலகத்தில் இருக்கின்ற நாணயச்சந்தையை மதிப்பிட்டு முதலீடு செய்கின்றனர் ஆனால் இலங்கையின் நிலையை இலங்கை மத்திய வங்கி சரியாக மதிப்பீடு செய்து வெளியிடுவதில்லை காரணம் இலங்கையின் மத்திய வங்கி அரசாங்கத்தின் முட்டாள்களால் இலங்கையில் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றது அத்தோடு அரசாங்கத்துக்கு தெரியும் தனது உண்மையான நாணய மதிப்பெண் ஆனாலும் இலங்கை என்ற நாடு வெளி நாட்டு பணத்தின் மாயையில் கவிழ்ந்து வாழும் நாடு எனவே அந்த அரசாங்கம் வெளி நாடுகளில் வாழும் மக்கள் அனுப்பும் நாணையத்தின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்யும் பொழுது தான் மீதியாக வெளி நாடுகளிடம் வாங்கும் பணத்தில் குறைத்து கடன் வாங்கவோ அல்லது வெளி நாடுகளின் பணத்துக்கு கூடுதல் பெறுமாணம் கொடுத்தோ அவர்களிடம் கடன் வாங்கி (நாணயத்தை டொலரை ) தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் ஆனால் இவை எவ்வளவு காலம் ஏமாற்ற முடியும் உலக நாடுகள் தற்போது அமைதியாக இருந்தாலும் உலக வங்கியில் இலங்கையின் நாணய மாற்றீடு விகிதம் கணிப்பிடும் பொழுது பல சிங்கள்களை அந்த நாட்டுக்கு கொண்டுவரும் இதனைத்தான் எம்மை போன்றோர் பார்க்க வேண்டும் அப்பொழுது அந்த நாடு பணவீக்கத்தின் மூலம் சின்னா பிண்ணப்படுவதை பார்க்க முடியும் இதன் மூலம் அந்த நாடு இன்னும் பின் தங்கிய நிலைக்கு அதாவது எல்லா நாடுகளாலும் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு பாதாளத்தில் செல்வந்த நாட்டினரின் கைபொம்மைகளாக மாறுவதையும் அம்மக்கள் பட்டினியில் வாழ்வதையும் அரச கருமம் அரசாங்கம் தள்ளாடுவதையும் பார்க்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.