Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூநகரி பாதை விரைவில் திறக்கப்படும் ஆனால் காலவரையறையினை கூறமுடியாது

Featured Replies

புலிகள் தமது இலக்குகளை அடைய முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூநகரி பாதை விரைவில் திறக்கப்படும். ஆனால், அதற்கான கால வரையறையைக் கூற முடியாது என்று ஊடக தகவல்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்வை வழங்கவே யுத்தத்தை நடத்தி வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் கூறியதாவது, எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான வாழ்க்கையையும் சுபீட்சத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காகவே நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி வருகின்றோம். 25 வருடமாக புரையோடிப் போயுள்ள யுத்தத்தை விரைவாக முடித்து ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்தினாலும் கூட அவர்கள் தமது இலக்குகளை அடைய முடியாதபடி கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். இதனால் அவர்களால் பாரிய தாக்குதல்களை நடத்த முடியாதுள்ளது.

ஆசியாவில் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா உள்ளார். பூநகரிப் பாதை விரைவில் திறக்கப்படும். ஆனால், அதற்கான கால வரையறையைக் கூற முடியாது.யுத்தத்தில் நாம் அடைந்து வரும் வெற்றிகளை சிலரால் ஜீரணிக்க முடியாதுள்ளது. எமது தனிப்பட்ட இலாபத்தை விட்டு விட்டு சிந்தித்தால் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொதுக் கொள்கையில் அனைவரும் ஒன்றுபட முடியும்.இலங்கை மாத்திரம் பயங்கரவாத பிரச்சினைக்கு முகங் கொடுக்கவில்லை. இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுத்து, அதற்கெதிரான நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. தற்போது உலகின் அதிகமான கவனம் பயங்கரவாத சவால்கள் மீதும் அதனை ஒழிப்பது தொடர்பிலும் திரும்பியுள்ளது.

எனினும், நாம் அரசியல் தீர்வை புறந்தள்ளவில்லை. ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் இரு தடவைகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எனினும், அவர்கள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டாது போர் நிறுத்த காலத்தில் எமது படையினர் மீது தாக்குதல் நடத்தினர். 200க்கு மேற்பட்ட படையினர் போர் நிறுத்த காலத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேதான் எம்மை மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்தனர்.

வீரகேசரி நாளேடு

எல்லாம் குடுக்கலாம், சாப்பாடே குடுக்கேலாத நிலை எல்லோ வரப்போகுது, அப்ப இவ குடுக்கிறத (சமாதானம், சுபீட்சம்) வித்தும் சாப்பிட ஏலாது.

ஆரார் எங்கெங்க சாகோணும் எண்டு முடிவு செய்துதான் பொன்சேகா மாமா அனுப்பியிருக்கிறார்.

பூநகரி பாதையை ஏ 32 சிறீலங்கா இராணுவத்தினர் மிக விரைவில் கைப்பற்றுவார்கள் எனவும் ஆனால், அதற்கான கால வரையறையைக் கூற முடியாது எனவும் ஊடக தகவல்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்......

கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகளுக்கு தமது இலக்குகளை அடைய முடியாது எனவும் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற து.இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

http://www.tamilseythi.com/srilanka/anura-...2008-11-12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.