Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை உயர்வினால் நெருக்கடியை எதிர்நோக்கும் படைத்தரப்பு :

Featured Replies

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை உயர்வினால் நெருக்கடியை எதிர்நோக்கும் படைத்தரப்பு :

http://www.globaltamilnews.net/tamil_news....=2082&cat=1

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் மற்றும் உயிரிழப்புக்கள் காரணமாக இராணுவப் படையினர் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக பிரபல இந்திய ஊடகவிலயாளர் அனுஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வெறும், 5 வீதமான படைவீரர்களே இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 10,136 புதிய படைவீரர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இலங்கை இராணுவப் படையில் சுமார் 140,000 படைவீரர்கள் கடமையாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கை பிரித்தானிய இராணுவப் படையின் ஆளணியைவிட அதிகமானதென்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்புலத்தில் மேலும் இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக செய்தி ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச படையினர் வெற்றிகரமாக முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் ஏன் ஆயிரக் கணக்கான படைவீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக வெற்றிவாகை சூடிவரும் படையிலிருந்து எந்தவொரு இராணுவ வீரனும் தப்பிச் செல்ல முனைவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டு வரும் யுத்தம் தொடர்பான புள்ளிவிபரங்களின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மிகவும் பின்தங்கிய வறிய கிராமங்களில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து பாதுகாப்புத் தரப்பு ஆட்சேர்ப்பு வேட்டையை முடுக்கி விட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த இளைஞர் யுவதிகளே அதாவது வேலைவாய்ப்பின்றி விரக்தியடைந்தவர்களே படைத்தரப்பில் இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஓர் பின்புலத்தில் படைவீரர்களின் அர்ப்பணிப்புத் தன்மை குறித்து சந்தேகம் நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 200,000 தமிழ்ச் சிவிலியன்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும், குறித்த சிவிலியன்களை நாலாபுறமும் வெளியேறுமாறு புலிகள் உத்தரவிட்டால் குறித்த சிவிலியன்களுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னமும், இறுதிப் போராட்டத்திற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை எனவும், எந்த நேரத்திலும் கெரில்லா முறையில் கடுமையான பதிலடி கொடுக்கக் கூடும் எனவும் ஊடகவியலாளர் அனுஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மழைக் காலநிலை, இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை போன்ற காரணிகள் விடுதலைப் புலிகளின் மனோ திடத்தை வலுப்பெறச் செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சண்டைகளில் இறக்கும் இராணுவத்தில் கணக்குகாட்டப்படாதவைகளும் இந்த காணமல் போனவைக்குள் அடங்கும் போல? :lol:

சரியா சொன்னிங்கள், திரும்பி வரேலாத இடதுக்கெல்லே ஓடி போட்டினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.