Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசிமேடு, திருவொற்றியூரில் கடல் சீற்றம் - சுனாமி பயத்தில் மக்கள் பதட்டம்

Featured Replies

DN_16-11-08_E1_02-01%20CNI.jpg

காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் நேற்றும் அதிகமாக இருந்தது.

வீடுகளின் மீது அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன.

DN_16-11-08_E1_01-02%20CNI.jpg

சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் கடல் நீர் புகுந்தது.

கரையில் இருந்த கங்கை அம்மன் கோயில் அலையில் சிக்கி தரைமட்டமாகி கிடக்கிறது.

DN_16-11-08_E1_02-02%20CNI.jpg

கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டு, படுமோசமாக காணப்படும் சூரியநாராயணா சாலை.

சென்னை, நவ. 16: திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 25 வீடுகளில் நீர் புகுந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி பரிதவிக்கின்றனர். கரையோரம் இருந்த கங்கையம்மன் கோயில், அலைகளில் சிக்கி தரைமட்டமானது.

திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடலில் சீற்றம் காணப்படுகிறது. காசிமேடு அண்ணாநகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடல் பகுதியில் இருந்து 200 அடி தூரத்தில் உள்ள வீடுகளை கடல் நீர் தொட்டு செல்கிறது. இதனால், கடந்த 3 நாட்களாக பலர் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கு சென்றனர்.

காசிமேட்டில் நேற்று முன் தினம் இரவு 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி, கரையில் 200 மீட்டர் தூரத்துக்கு நீர் புகுந்தது. கரையோரத்தில் இருந்த சிறிய கங்கையம்மன் கோயில் முற்றிலும் பெயர்ந்தது.

திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடலோரப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இப்பகுதிகளிலும் பலமான சூறைக் காற்றுடன், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள 23 மீனவக் கிராமங்களில் புகுந்தது. இதனால், 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளிலும், சாலையோரங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் வீடுகளில் சில இடிந்து விழுந்தன. கடலிலும் அடித்துச் செல்லப்பட்டது. வலைகளையும் கடல் நீர் இழுத்து சென்று விட்டது.

பெரியக்குப்பம், சின்னக்குப்பம், இந்திரா காந்தி குப்பம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க முழு அளவில் பாறாங்கற்கள் போடப்படவில்லை. இதனால், கற்களை தாண்டி 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இதுதவிர, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டிருந்த பாறாங்கற்களை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றதால் சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோயில் அருகே வசித்து வந்த சின்னபொண்ணு, சரோஜா உள்ளிட்ட 25 பேரின் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. அப்பகுதியை சேர்ந்த சாந்தி (50) கூறும்போது, ‘சுனாமி வந்த போது இதே போல்தான் கடல் சீற்றம் இருந்தது. அதனால், மீண்டும் சுனாமி வருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் அரசே வீடு கட்டி தர வேண்டும்' என்றார்.

கடல் சீற்றம் காரணமாக, 3 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அவர்களுக்கு நேற்று வரை உணவு, தங்கும் வசதி உட்பட எந்த உதவியும் கிடைக்கவில்லை.

http://dkn.dinakaran.com/

Edited by vasisutha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.