Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் பதிலடி பலம் உள்ளது: ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடஇலங்கையில் நடக்கும் போரில் புலிகள் தரப்பு 13 ஆண்டுகளில் மிகப்பெரிய தோல்வியைக் காணப்போகிறது என்று பரவலாகத் தெரிவிக்கப் படுகிறது.

ஆனாலும் புலிகளிடம் மீண்டு எழுந்து பதிலடி கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி ராணுவ வசம் வரப்போகிறது.

இருந்தாலும் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டு தற்கொலை யாளிகள் புலிகளிடம் இன்னும் இருப்பதாகப் பெயர் கூற விரும்பாத அந்த தற்காப்பு ஆய்வாளர் குறிப்பிட்டார்.

தங்களால் தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியும் என்பதை புலிகள் கடந்த காலத்தில் நிரூபித்துக் காட்டி உள்ளனர் என்றார் அவர்.

“சென்ற 1995ம் ஆண்டு யாழ்ப்பாண தீபகற்பத்தை அரசாங்கப் படையினர் கைப்பற்றினர்.

“ஆறே மாதங்களில், முல்லைத்தீவில் உள்ள ராணுவத் தளத்தைத் தாக்கி 1,200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைப் புலிகள் கொன்றனர்,” என்பதை எடுத்துக்காட்டாக அந்த ஆய்வாளர் குறிப்பிட்டார் என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கமும் அடுத்த ஆண்டு தற்காப்புச் செலவுகளுக்குச் சாதனை அளவாக 177 பில்லியன் ரூபாய் (1.6 பில்லியன் டாலர்) ஒதுக்கி, அடுத்த ஆண்டும் கடும் சண்டைக்குத் தயாராகி வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையே ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தாலும் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடையும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அரசாங்கப் படையினர் ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய தாக்குதல் இப்போது கிளிநொச்சி நகரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வன்னியை நோக்கி பற்பல முனைகளில் நெருங்கிக் கொண்டிருக்கும் ராணுவப் படையினர் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றினால், புலிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்திடமிருந்து வன்னியைக் கைப்பற்றிய புலிகள், கிளிநொச்சியைத் தங்கள் தலைநகராக்கிக் கொண்டனர்.

சென்ற 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம், யாழ்ப் பாணத்தின் வடக்குத் தீபகற்பத்தைப் பறிகொடுத்ததே புலிகள் ஆகக் கடைசியாகச் சந்தித்த பின்னடைவாகும்.

ராணுவம் சிறு சிறு குழுக்களை பரந்த அணுகுமுறையில் ஈடுபடுத்துவதே வட இலங்கையில் அதன் இப்போதைய வெற்றிக்குக் காரணம் என்கிறார் இலங்கையின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் விபுல் பொதிஜு.

இதற்குமுன் கிளிநொச்சியைக் கைப்பற்ற பெரும் படைகளை ராணுவம் அனுப்பியது.

ஆனால் வெடிகுண்டு தற்கொலையாளிகளைப் பயன்படுத்தி ராணுவப் படையினரின் முயற்சியைப் புலிகள் முறியடித்தனர்.

இதற்கிடையே “விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான கிளிநொச்சியை நெருங்கி விட்டோம். எந்த நேரத்திலும் இலங்கை ராணுவம் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து மீட்கும்,” என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வேளையில் இந்த ஆண்டு மட்டும் 7,000 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700 ராணுவ வீரர்கள் தங்களது தரப்பில் உயிர் இழந்ததாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இவை இப்படி இருக்க, இலங்கை பிரச்சினை தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்,” என்று அறிக்கை ஒன்றில் நேற்று அவர் சொன்னார்.

அதிமுக தலைவி ஜெயலலிதாவும் இந்திய அரசாங்கம் இலங்கை பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

http://tamilmurasu.tamil.sg/node/1399

எங்கோ இருப்பவர்கள் எல்லாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, வரவிருப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் ஒரே சலிப்புடையவர்களாகவே காணப்படுகிறார்கள். தோல்விகளை இவர்கள் ஒருநாளுமே சந்தித்ததில்லையா?

இறைவன்

எவ்வளவோ வலை தளங்கள் தமிழர்களுடையது இருந்தாலும் இந்த வலைதளங்களில் அதிகமான செய்திகள் சிங்கள வலைத்தளங்களில் இருந்து ழொழி பெயர்க்கப்படுவது தான் காரணம்.இது போதாது என்று பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் வேறு.அவர்கள் யார் சுட்டு கொல்லப்பட்டாலும் புலிகள் தான் காரணம் என்று சொல்வார்கள்.ஆனால் நம்முடைய தளங்கள் அடையாளம் தெரியாத நபரினால் என்று சொல்வார்கள்.ஏதோ பாதுகாப்பமைச்சு விசாரணை நடத்தியதன் பின் சொன்னது என்று நினைக்கின்றார்களோ தெரியாது.

சமீபத்தில் நடந்த கடற்சண்டையில் கூட தங்களுக்கு எந்த சேதமும் இல்லை புலிகளுடைய கலங்கள் தான்

மூழ்கடிக்ப்பட்டது என்றார்கள்.ஆனால் அடுத்த தினத்தில் கடற்படையினரின் 4 சடலங்கள் கரைசேர்ந்திருந்தது.இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை.

அந்த மாதிரி சிறு சிறு விடயங்களை சிங்களவர்கள் பெரிதாக பிரச்சாரம் செய்கின்றார்கள் அதனால் தான் நாம் சலிப்படைங்திருக்கின்றோம்.அத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.