Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமாலை மோதல்களில் இரண்டு தரப்பினருக்கும் பலத்த சேதம் - நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 690 ராணுவத்தினர் காயம் 200 ராணுவத்தினரின் சடலங்கள் மலர்ச்சாலையில்:

Featured Replies

நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 690 ராணுவத்தினர் காயம் 200 ராணுவத்தினரின் சடலங்கள் மலர்ச்சாலையில்:

நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 690 ராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு 200 ராணுவத்தினரின் சடலங்கள் பொறளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் மாற்று பாதுகாப்பு ஊடக தகவல் நிலையப் பொறுப்பாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவர்களில் 235 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 85 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 90 பேர் ஜெயவர்த்தன வைத்தியசாலையிலும் 300 பேர் ராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன?? படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.எனினும் இவை குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை இருதரப்பிடமும் உறுதிப்படுத்த முடியவில்லை.

நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 690 ராணுவத்தினர் காயம் 200 ராணுவத்தினரின் சடலங்கள் மலர்ச்சாலையில்:

நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 690 ராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு 200 ராணுவத்தினரின் சடலங்கள் பொறளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் மாற்று பாதுகாப்பு ஊடக தகவல் நிலையப் பொறுப்பாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவர்களில் 235 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 85 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 90 பேர் ஜெயவர்த்தன வைத்தியசாலையிலும் 300 பேர் ராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு??் ஜெயவர்தன மலர்ச்சாலையில் 200 சடலங்கள் குளிரூட்டப்பட்ட நிலையில வைக்கப்பட்டிருப்பதாகவும் மங்கள சமரவீர இன்று சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்..

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் கடும் இழப்பு:

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரண்டு தரப்பினருக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிலாலி மற்றும் முகமாலை பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

53 மற்றும் 55ம் படையணிகளினால் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளை சமாளிக்க முடியாது புலிகள் பின்வாங்கியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 50 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 10 படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 200 இராணுவப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலி வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலான காயமடைந்த படைவீரர்கள் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....=2402&cat=1

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

200க்கும் மேற்பட்ட படையினரின் சடலங்கள் கொழும்பு மலர்ச்சாலையில் - மங்கள சமரவீர

அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட படையினரது சடலங்கள் கொழும்பில் உள்ள ஜயரத்ன மலர்ச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோதல்களில் படுகாயமடைந்த 710 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோரில் 235 கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 85 களுபோவில வைத்தியசாலையிலும், 90 பேர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலும், இராணுவ வைத்தியசாலையில் 200க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை படைவீரர்களது உயிர் தியாகம் செய்யப்பட்டாலும் அரசாங்கம் இந்த முட்டாள்தனமான யுத்தத்தை முன்னெடுப்பதில் உறுதியுடன் இருப்பது வேதனைக்குரியதென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் வடக்கில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்றியதாக அரசாங்கம் பிந்திய செய்திகளை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்கவோ அல்லது வடக்கு மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவோ இந்த யுத்தம் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இந்த யுத்தம் அரசாங்கத்தின் பிழைகளை மூடிமறைப்பதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால், ரொபர்ட் முகாபேயின் சிம்பாப்வே நாட்டைவிட இலங்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் இரகசிய தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.