Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரின் நிலவரம் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

மன்னாரின் நிலவரம் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது - செல்வம் அடைக்கலநாதன்

மன்னாரின் தற்போதைய நிலவரம், மிகுந்த கவலையை தோற்றுவித்திருப்பதாக தெரிவித்து அது தொடர்பான பத்திரிகை செய்தி அறிக்கை ஒன்றினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு:-

மன்னாரில் சமீப காலங்களாக இலங்கை ராணுவத்தினர் தமது செயற்பாட்டை முழு அளவில் விஸ்தரித்திருக்கின்றனர். தினமும் சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், கைதுகள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் நாள்முழுவதும் ஜந்து உந்துருளிகளில் 10 ராணுவத்தினர் முகத்தை மறைத்துக் கொண்டு தலைக்கவசம் அணிந்த நிலையில் அதிவேகமாக மன்னார் நகரின் பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதி வீதிகளிலும் இரவு பகலாக சுற்றித்திரிகின்றனர்.

இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியிருப்பதால் பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளுக்குக்கூட வீட்டைவிட்டு வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ராணுவத்தினர் குழுக்கள் குழுக்களாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் பாதசாரிகள், வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் பயணிப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு உடல் பரிசோதனை, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பரிசோதனை மற்றும் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதனால் வீணான காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அலுவலக கடமைகளுக்காக பயணிப்பவர்கள், வைத்திய தேவைகளுக்காகச் செல்பவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கின்றனர். பல புதிய தடைமுகாம்களும் காவலரண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் அமைந்திருந்த காவலரண் தற்போது விஸ்தரிக்கப்பட்டு முகாமாக மாறியிருக்கின்றது.

இம்முகாமில் இருந்து தலைமன்னார் வீதியில் ஏறத்தாழ 500 மீற்றருக்கு அப்பால் உள்ள புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு அருகில் மற்றுமொரு புதிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இம்முகாமில் இருந்து ஏறத்தள 600 மீற்றருக்கு அப்பால் கடற்படை முகாம் ஒன்றும் அமைந்திருக்கின்றது.

தலைமன்னார் மன்னார் வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மேற்படி இரண்டு முகாம்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் பயணிகள் கூடுதலான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எமில் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீடொன்றும் காவல் முகாமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க மன்னார் நகர சபை செயலாளரின் புதிய வதிவிடத்தை சுவீகரித்துக் கொள்ளும் பொருட்டு படையினர் அதனை பார்வையிட்டு சென்றிருப்பதாகவும் தெரிகின்றது. மட்டக்களப்பு பகுதியில் வைத்தியர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து தமக்கு பாதுகாப்பு இல்லையென கருதி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய ஆறு வைத்தியர்கள் எழுத்து மூலமான அறிவித்தலை உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்து மன்னாரை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதில் நான்கு வைத்தியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும், பேசாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரும், மலேரியா தடுப்பு பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரும் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

இதனால் வைத்தியசாலையின் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் தோட்டவெளி, தாராபுரம் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (18-11-2008) இடம்பெற்றிருக்கின்றது.

மேற்படி பிரதேசங்களில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட கடற்படையினர் பொதுமக்களை வீட்டிற்கு ஒருவரை தவிர மற்றைய அனைவரும் தோட்டவெளி பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு கால்நடையாக சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் அழைத்துச் சென்று முகமூடி அணிந்த தலையாட்டிகளைக் கொண்டு பொதுமக்களை இனங்காணும் நடவடிக்கையைனை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு பிரதேச வாசிகள் ஆண்கள் பெண்கள் என வரிசையாக நிறுத்தப்பட்டு அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சந்தேகத்திற்கு இடமான ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.