Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கைக்கு எட்டியும் வாய்க்குக் கிட்டாத இந்தியாவின் நிவாரணப் பொருள்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைக்கு எட்டியும் வாய்க்குக் கிட்டாத இந்தியாவின் நிவாரணப் பொருள்கள்

[22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:00 மு.ப இலங்கை]

யுத்தப் பேரவலத்தில் சிக்கி, சொல்லொணா துன்ப துயரங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி இடங்கொடுக்காத மாதிரியான’ முட்டுக்கட்டைகளினால் முடங்கிப் போய்விடுமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

கொழும்பு அரசு யுத்த வெறித் தீவிரத்தோடு தொடுத்திருக்கும் கொடூரப் போரில் சிக்கி, நாதியற்று, அல்லாடும் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு தமிழகம் கொதித்து எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் விஸ்வரூபம் எடுத்துக் கிளர்ந்ததை அடுத்து, ஈழ மண்ணில் அந்தரிக்கும் மக்களுக்கு நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருட்களையாவது விரைந்து அனுப்பிவைத்து, அவர்களின் வேதனையைச் சற்றேனும் குறைக்கும் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இந்திய மத்திய அரசுக்கு நேர்ந்தது.

யுத்தத்தினால் அவலப்படும் மக்களுக்கான உதவி என்ற பெயரில் உலக நாடுகளிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் திரட்டப்படும் வளங்கள், அதே யுத்தத்துக்காகத் திருப்பப்படும் அபத்த நிலைமை இலங்கையில் நிலவுவது, சர்வதேச தரப்புக்கு புதிய விடயம் அல்ல. நன்கு அறியப்பட்ட விவகாரமே.

எனவே, யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான நிவாரண உதவிப் பொருள்கள் என்றதும், அவை இடையில் வேறு தரப்புகளின் கைகளில் சிக்காமல் இருப்பதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கே அவை விநியோகிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காக, அந்த வழங்கல் பொறுப்பை இந்தியா, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, காரியத்தை ஒப்படைத்தது.

அத்தகைய முடிவை எடுத்த இந்திய ஆளும் தரப்பு, அப்படிப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை இலங்கை ஆட்சிப்பீடத்திடம் நிபந்தனையாக முன்வைத்து அங்கீகாரமும் அனுமதியும் பெற்றுக்கொண்டது.

அதையடுத்தே ஆயிரத்து எழுநூறுதொன் நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருள்களை இந்தியா கப்பலில் கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

அந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டதும், வன்னி மண்ணில் அந்தரிக்கும் தமிழர்களின் அன்றாட வயிற்றுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வேனும் கிட்டும் என்ற நம்பிக்கை உருவானது.

ஆனால் இவ்விடயத்தை ஒட்டி இப்போது கட்டவிழும் சம்பவங்கள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்துவிட்டதை உறுதிப் படுத்துகின்றன.

இந்தியாவின் உதவிப் பொருட்கள் அந்த நாட்டிலிருந்து புறப்பட்டதுமே, வவுனியா ஊடாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் ஓமந்தைப் பாதைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

அந்தப் பாதை நற்றுப் பயன்படுத்தப்பட்டாலும் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும் ாத்தியம் தென்படவேயில்லை. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்வதற்கான புதிய பாதை ஒன்றைத் திறப்பது குறித்து இப்போது கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுவருகின்றன.

அத்தகைய புதிய பாதைக்கான இணக்கம் எட்டப்படுவதும் -

அல்லது, ஓமந்தை ஊடான போக்குவரத்துப் பாதையை தொடர்ந்து திறப்பதற்கான இணக்கநிலையும் -

இப்போதைக்கு நேர்வதற்கான சாத்தியங்கள் தென்படுவனவாக இல்லை.

இதற்குள் இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்களை வன்னி மக்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பை அந்தந்த மாவட்ட அரச அதிபர்களே, அரசின் சார்பில் முன்னெடுப்பார்கள் என்று இலங்கையின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறுகிறார்.

அதுவும் இந்தப் பொருட்களைக் கொழும்பில் வைத்து செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் இந்தியத் தூதுவர் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கின்ற வைபவத்தில் வைத்தே அரசின் உயரதிகாரி ஒருவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவோ, தன்னால் வன்னியில் இனங்காணப்பட்டுள்ள சுமார் இருபத்தியையாயிரம் குடும்பங்களுக்கு இந்தப் பொருட்களைத் தானே நேரடியாக வழங்கும் என்று அடித்துக் கூறுகின்றது.

ஆக, இந்தியா வழங்கும் நிவாரணப்பொருட்களை யார் பொறுப்பேற்று ஈழத் தமிழருக்கு வழங்குவது என்பதிலும் -

இப் பொருட்களை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதிலும் -

பெரும் இழுபறிகளும், முட்டுக்கட்டைகளும் நீடிக்கின்றன.

இந்த நெருக்கடிகள், இழுபறிகள் இப்பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைந்து விநியோகிக்கப்படுவது துர்லபமே என்பதைக் கோடிகாட்டுகின்றன.

வன்னி மக்களுக்கு இந்தியா அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்கள், ‘கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத மாதிரி’, கொழும்பை வந்தடைந்தும், வன்னி மக்களுக்கு கிட்டாமல் சீரழியப் போகின்றனவா என்பதுதான் இப்போதைய கேள்வியாகும்.

உதயன்

இந்தியாவின் உதவிப் பொருட்கள் அந்த நாட்டிலிருந்து புறப்பட்டதுமே, வவுனியா ஊடாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் ஓமந்தைப் பாதைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

இலங்கையில் தமிழகத்தின் நிவரணவுதவிப்பொருட்களுக்கு நடக்கும் கதியை தமிழகமக்களுக்கு உடனுக்குடன் அறியச்செய்து போரட்டங்கள் மூலம் இந்திய தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்... இது ஒரு உலகத்திற்கு ஒரு நல்ல பாடம் சாதரண அப்பாவி தமிழ்மக்களுக்கு உணவு உதவிக்கே இப்படி என்றால் உரிமைகளுக்கு என்ன கதி நடக்கும்? என்பதையை உலகிற்கு தெரிய வைத்து எமது இனவிடுத்லைப்போரட்டம் நியாயம் என்பதை புரியவைக்க வேண்டும்..அத்துடன் உதவிகள் மக்களின் சென்றடையும் வரை போராட்டம்,அழுத்தம் தொடரவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.