Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மக்களுக்கான நிவாரண விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு அவசியம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்து பத்து நாட்களாகியும் அவை வன்னி மக்களைச் சென்றடையவில்லை. இதனால், அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிச்சமாகியுள்ளது. எனவே, வன்னி மக்களுக்கான நிவாரண விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு அவசியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கம் தமிழர்களை மட்டுமல்ல, இந்தியாவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்து மக்களின் உணர்வுகளை உக்கிரமடையச் செய்யும் நடவடிக்கையானது இலங்கை அரசாங்கத்துக்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா தமிழக மக்களிடமிருந்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னித் தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள 1680 மெற்றிக் தொன் அத்தியாவசிய மற்றும் உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் 80 ஆயிரம் நிவாரணப் பொதிகள் இன்னும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க களஞ்சிய அறையிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: யுத்தமே தீர்வு என்ற இறுமாப்பில் அரசாங்கம் அப்பாவித் தமிழர்களை பலியெடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம் வடக்கிலே வன்னித்தமிழர்களை அவல நிலைக்குள் தள்ளி பாதகமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றது.

அந்த மக்களின் தேவைகள் உணரப்படவில்லை. அரசாங்கம் அனுப்புவதாக கூறுகின்ற நிவாரணப் பொருட்கள் அவர்களின் துயர்களைத் துடைப்பதாகவும் தெரியவில்லை. உணவுக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் அல்லாடும் வன்னித் தமிழர்களின் நிலைமைகளை வெளிப்படுத்தாமல் சகல தேவைகளும் நிறைவேற்றப்படுவதõக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பருவ மழையால் வெள்ளத்துக்குள் சிக்குண்டு தவிக்கின்றனர். எமது தமிழினத்தின் துயர் துடைப்பதற்கென இந்திய மத்திய அரசிடமிருந்தும் தமிழக உறவுகளிடமிருந்தும் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் 10 நாட்கள் கடந்த நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலைலேயே இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்தியப் பெருந்தன்மையில் கிடைத்த நிவாரணப் பொருட்கள் அந்த மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் கூட இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்கின்றது.

இந்த நிவாரணப் பொருட்கள் எப்படியும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையப் போவதில்லை என்பது மட்டும் தற்போது புலப்பட்டிருக்கின்றது. இந்திய அரசாங்கம் ஐ.சி.ஆர்.சி.யிடம் ஒப்படைத்த நிவாரணப் பொருட்களை அந்த அமைப்பு எடுத்துச் சென்று விநியோகிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்காதிருப்பது தமிழ் மக்களின் மீதான அக்கறையீனத்தையே காட்டுகின்றது. இந்தியா தமது நிவாரணப்பொருட்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் பட்சத்தில் அது குறித்த மக்களைச் சென்றடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இந்தியாவிடம் கூறியிருந்தது.

எமது சந்தேகம் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது. இலங்கையில் இருக்கும் எந்த ஒரு தமிழ்க் குடிமகனுக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. தற்போது ஐ.சி.ஆர்.சி. களஞ்சிய அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் நிவாரணப் பொதிகளும் இந்தியாவில் இருந்து வந்தவை என்பதை மறைக்கும் விதமாக அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக தெரிய வருகின்றது. எனவே இந்த நிவாரணங்கள் எமது மக்களை சென்றடையும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

இந்த விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்மையாக அமையப் போவதில்லை. தமிழகம் மீண்டும் தனது உக்கிர நிலையை அடையும் ஒரு செயற்பாடே இதுவாகும். "அரசினூடாக' என்ற எந்த நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடையப் போவதில்லை. எனவே இந்தியா இது விடயத்தில் உடனடியாக தலையிடவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். 1680 மெற்றிக் தொன் நிவாரணப் பொருட்களும் வன்னி மக்களுக்கு கிடைக்கும் வகையில் வழிகளை அமைத்துக் கொடுக்கவேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும்.

இது விடயத்தில் இந்தியா சமயோசிதமாக நடந்து கொள்ளாவிட்டால் நிவாரணம் அனுப்பியதற்கான பலாபலன்கள் இல்லாது போய்விடும். மீண்டும் மீண்டும் நாம் இந்தியாவை வலியுறுத்தும் விடயம் தான் இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபடுகின்றது. ஆயுத முனையில் யுத்த முனையில் தமிழர்கள் அழிக்கப்டுகின்ற அதேவேளை பட்டினிக்கு உட்படுத்தியும் கொலை செய்து கொண்டுமிருக்கின்றது என்பதாகும். இந்தியாவின் நேரடி தலையீடு இல்லாது இலங்கையில் தமிழருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.