Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டிச.4-ல் பிரதமரை சந்திக்கிறார் கருணாநிதி

Featured Replies

சென்னை

இலங்கை பிரச்னை தொடர்பாக வரும் 4 ஆம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்திப்பது என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கை விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்தும்இ இதுவரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், தமிழக எம்பி-க்கள் ராஜினாமா செய்வது என்ற கெடுவுக்கு பின்னரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதது குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இன்றைய கூட்டத்தில்இ இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவுள்ளது.

அதற்கு முன்பாக வரும் 28 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் குழு பிரதமரை சந்திப்பது என்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், அதன் தலைவர் கோ.க. மணி, காங்கிரஸ் கட்சி சார்பில் சுதர்சனம் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

அதிமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியன இக்கூட்டத்தை புறக்கணித்தன.

நன்றி : யாகூதமிழ்(மூலம் - வெப்துனியா)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை பெரிசா கிழிக்கபோயினம் எண்டு பாப்பம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர் வெளியேற்றம்: ஆதாரம் இதோ...!?

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை வெளியேறும்படி நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதற்கு எதிராக இலங்கை அகதிகளை வெளியேறும்படி காவல்துறை மூலம் மத்திய அரசு அனுப்பிய உத்தரவு ஆதாரம் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்து வரும் போரை உடனே நிறுத்தவேண்டுமென்று தமிழகமே கூறிவருகிறது. தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்திலும் இதனை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக இலங்கை அரசிடம் போரை நிறுத்தவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஒருவாரத்திற்குள் வெளியேற வேண்டுமென்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிர்ச்சி தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டார்.

ஆனால் அப்படி எதுவும் அகதிகள் வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிடவில்லையென்றும் இவ்வாறு ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவது தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என்றும் முதல்வர் கருணாநிதி மறுப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு இதுதொடர்பாக அனுப்பிய நோட்டீஸ் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கோதார் வாயலில் வாழும் இலங்கைத் தமிழர் வசந்தன் என்பவருக்கு கடந்த 27ந் தேதி நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து வெளியேறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை சேப்பாக்கத்திலுள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தாங்கள் தங்களை முகாம்சாராத அகதியாக பதிவு செய்துள்ளீர்கள். பதிவு எண் எப்ஐ/238/எஸ்எல்டி/என்எல்ஜி/2008. அகதிகள் மறுவாழ்வு ஆணைய கடிதம் எண் சி3/1879/2008 தேதி 8.2.2008 தங்களுக்கு 14.2.2008 வரையான குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தீர்கள்.

மேலும் 10.3.2009 வரை இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி தங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. தாங்கள் இந்தியாவில் தங்குவது விரும்பப்படவில்லை ஆதலால் இந்த நோட்டீஸ் காணப்பட்ட தேதியிலிருந்து ஒருவாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.