Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது-கர்நாடக போலீஸ் நடவடிக்கை

Featured Replies

muthulakshmi-250.jpg

மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர்.

மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி.

இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடிவாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருமலைக்கூடல் காவல்நிலையத்திற்கு முத்துலட்சுமியை கொண்டு சென்ற கர்நாடகா போலீசார் பின்னர் மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர்.

முத்துலட்சுமி சில வருடங்கள் காட்டில் வீரப்பனுடன் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் வீரப்பன் மீது பதிவான சில கொலை, கடத்தல் வழக்குகளில் முத்துலட்சுமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முத்துலட்சுமி மீது கர்நாடகாவில் 5 வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணைகளில் முத்துலட்சுமி சரியாக ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது மைசூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதையடுத்தே அவரை கைது செய்து அழைத்து சென்றதாகத் தெரிகிறது.

ஆனால், ஒரு பெண்ணை பகலில் கைது செய்யாமல் இரவில் கைது செய்து அழைத்துச் சென்றது கேள்விகளை எழுப்பியுள்ளது.

முத்துலட்சுமி தவிர வீரப்பன் தொடர்பான வழக்குகளில் மேட்டூர், கொளத்தூர், சின்னதண்டா, பெரியதண்டா மற்றும் வீரப்பன் நடமாடிய காட்டுப் பகுதிகளில் வசித்த மலைவாழ் மக்கள் பலர் மீதும் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களைப் பிடித்து ஆஜர்படுத்தவும் மைசூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களைப் பிடிக்க கர்நாடகா போலீசார் இந்தப் பகுதிகளில் சாதாரண உடையில் சுற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதில் சிலரை அவர்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ted-by-kar.html

பாடி.... திறந்த வீடுக்குள் ஏதோ நுளைவது போல் நீங்களும் கண்ட இடமெல்லாம் புகுந்து சாபிடுகின்றீர்கள். ஆனால் எல்லாவற்ரையும் யாழ் இணையத்தில் கக்குவதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

பாடி.... திறந்த வீடுக்குள் ஏதோ நுளைவது போல் நீங்களும் கண்ட இடமெல்லாம் புகுந்து சாபிடுகின்றீர்கள். ஆனால் எல்லாவற்ரையும் யாழ் இணையத்தில் கக்குவதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

அவர் இத் தகவலை இணைத்ததில் ஏதும் தவறிருப்பதாகவோ அல்லது கக்குவதாகவோ தெரியவில்லை. வானம்பாடி தொடருங்கள்!!

பழைய ஆக்கள் கூட பெரிசா ஒண்டும் சொல்லக்காண இல்லை சோழியன் மாமா. இப்ப தினமும் ஒவ்வொரு புதுப்பெயரில ஒவ்வொருத்தரா அவதாரமா வாறீனம். கடைசி வரவு ஏ.கே 47. புதிய உறுப்பினர்கள் சரி.. பலர் சேருறது நல்லம்தானே எண்டு பார்த்தால்.. சேந்து முதலாம் நாளே... கட்டளைகள் அல்லோ போடுறீனம். மோகன் ஒரு எப்பன் ஏமாந்தால் துறப்பை களவாடிக்கொண்டு போயிடுவீனம் போல இருக்கிது. யாழ் நிருவாகம் கூட இப்படி எச்சரிக்கைகள் விடுறது இல்லை. வலைஞன் ஒருத்தர்தான் முந்தி எச்சரிக்கைகள் விட்டது. அதுவும் பல இக்கட்டான நேரங்களில ஓரிருவருக்கு சும்மா போக்குகாட்டினது. ஆனால் இவையள் என்னடா எண்டால்..

மோகனும் இப்ப உதுகள் எல்லாம் வெறுத்துபோய் எதையாவது எழுதட்டும் எண்டு விட்டுட்டார் போல இருக்கிது. கடைசியா இவர் வானம்பாடிக்கு சோககீதம் பாடவேண்டி வரும் எண்டு யாரோ குசியாக எச்சரிக்கை வேற குடுத்தாச்சிது. எழுதுறதும் ஒரு வசனம். அதுவும் எச்சரிக்கையாக வெருட்டலாக அல்லோ எழுதுறீனம். கடவுள் காக்க.

மோகன் யாழ் திறப்பு பத்திரம். இந்தகாலத்தில தலாணிக்கு கீழயும் வைக்க ஏலாது. வங்கியில Security Box ஒண்டை எடுத்து அதுக்க பூட்டி வையுங்கோ. யாழ் திறப்புக்கு Insurance செய்து வைக்கிறது இன்னமும் நல்லது. எண்டைக்கு மோகனிட்ட இருந்து யாழிண்ட துறப்பு களவு போகப்போகிதோ தெரியாது.

என்னவோ நமக்கு என்ன தெருவில போகின்ற பயணிகள் நாங்கள்..

கொஞ்சம் விட்டு பாருங்கள் பாடி எப்படிபட்ட செய்திகள் ஏல்லாம் இணைப்பார் என்று. நெ, அதி, ஆசி, போன்ற இணையத்துக்கு எல்லாம் இணைப்பு கொடுப்பார். முன்னர் கொடுத்தார். .அது மட்டிறுட்தினர்களால் தடை செய்யப்பட்டது. விட்டால் நன்றாய் கக்கி உள்ளவர்களையும் கெடுத்துவிடுவார். என்ன முரளி, சோழியன், பாடி எல்லாம் ஒரு அணியில் திரண்டுவிட்டது போல் தெரிகின்றது. முரளி தமிழை எழுதும் போது சாதாரண உரை நடையில் எழுதுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.