Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைக் களமாகிறது கிழக்கு: 24 மணி நேரத்தில் 18 பொதுமக்கள் சுட்டுக்கொலை

Featured Replies

மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் பூசகர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரது உடலை இரவு 2 மணியளவில் காவற்துறையினர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவர் மாமாங்கம் சிவ முத்து மாரியம்மன் ஆலைய பூசகரான 38 வயதுடைய கமல்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் பிற்பகல் தொடக்கம் நேற்று அதிகாலை வரையான சுமார் 24 மணித்தியாலத்துக்குள் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

களுவாஞ்சிக்குடியில்

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கல்லடிப்பிள்ளையார் வீதியில், வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் களுதாவளை மகாவித்தியாலயத்தில் சிற்றுண்டிச் சாலை நடத்தி வருபவருமான கணபதிப்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 40), அவரது மனைவி கலாராணி (வயது 35), மகள் தனுஜா (வயது 18), மகன் துஸாந்தன் (வயது 16) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரே சுட்டுக் கொல்லப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது சடலங்கள் நேற்று பிற்பகலே களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர், அவரது மூத்த மகன், உத்தியோகத்தரின் தாய் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர்.

களுவாஞ்சிக்குடி - எருவில் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரான சாமித்தம்பி திருச்செல்வம் (வயது -61), அவரது மூத்த மகன் தி.ஜெயசுதன் (வயது 25), கிராம உத்தியாகத்தரின் தாயான சா.நேசம்மா (வயது 85) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு 7.50 மணியளவில் சென்ற ஆயுததாரிகள் மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் மூவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர் எனக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று களுவாஞ்சிக்குடி மாரியம்மன் கோயில் வீதியில் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் களுவாஞ்சிக்குடிச் சந்தைக் குத்தகைக்காரரான கந்தையா இராசலிங்கம் (வயது 45) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள் இவரை வெளியே அழைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நால்வரினதும் சடலங்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் நேற்றுப் பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரடியனாறில்

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை மற்றும் புன்பாலன்சோலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை புன்பாலன்சோலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இப்பகுதியில் ஆயுததாரிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த விசேட அதிரடிப் படையினர் மேற்கொன்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் என ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கிளைமோர் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலைப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் எம்.குணசேகரன் (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தனது வயலில் உள்ள வாடியில் காவல் கடமையில் இருந்தபோது இனந்தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையில்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என அழைக்கப்படும் பொன்னையா சோதிமுத்து (வயது 29) என்ற பெண்ணே சுட்டுக் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவரது வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் அவரை வெளியில் அழைத்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என வாழைச்சேனைப் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, செல்வநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராஜேந்திர தீபன் (வயது 29) என்ற டிரக்டர் சாரதி கொல்லப்பட்டுள்ளார்.

இரவு 7.15 மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் சென்றனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டார் எனவும், கொல்லப்பட்டவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவில்

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தமிழ் இளைஞர்கள் மூவர் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இப்பகுதியைச் சேர்ந்த குணமணி, சிவநாதன், பிரதீபன் ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தேடுதலில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோதே இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களது சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.

கொல்லப்பட்ட மூவரும் அண்மையில் வவுணதீவு கருணாகுழு முகாமில் கடமையாற்றி பின்னர் தமது சகாக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனவும், இவர்கள் தனிக்குழுவாக இப்பகுதியில் இயங்கிவந்தனர் எனவும் சில தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை - அம்பாறை, ஊரணி - கோமாரி வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையில் நேற்று வைக்கப்பட்டிருந்தன.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமது கட்சி ஆதரவாளர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். தாம் நேற்று மட்டக்களப்புக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலைகள் காரணமாக நேற்று மட்டக்களப்பில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.