Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்:

Featured Replies

சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்:

http://www.globaltamilnews.net/tamil_news....=2748&cat=1

வன்னியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தாழமுக்க நிலையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சிவிலியன்களுக்கு இதன் மூலம் நிவாரணங்களை வழங்க முடியும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அனுபவம் மிக்கதும், பக்கச்சார்பற்றதுமான சில தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தின் தடையினால் வன்னிச் சிவிலியன்களுக்கு உதவ முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25ம் திகதி ஏற்பட்ட கடுமு; மழை வெள்ளத்தினால் சுமார் 60,000 முதல் 70,000 வரையிலான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைப்பதற்கென பெருமளவிலான தற்காலிக கூடாரங்கள் தொண்டு நிறுவனங்களிடம் கைவசம் உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனினும், தொண்டு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இலச்சினைகள் பொறிக்கப்பட்ட கூடாரங்களை வன்னிக்கு அனுமதிக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளமையினால் பெருமளவு கூடாரங்கள் தேங்கிக் கிடப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அரசாங்கத்தின் இவ்வாறான தேவையற்ற கெடிபிடிகளினால் வன்னிச் சிவியலின்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் கண்ணாம்மூச்சி ஆடி வருவதாகவும், இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் அதிகளவில் பலவந்தமாக போராட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன்கள் பலவந்தமாக போராட்டத்திற்கு இணைத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர முடியாமல் தடுப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அரசாங்கம் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்கள் தீவிர இராணுவ பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மன்னார் பகுதியில் உள்ள முகமொன்றில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வன்னிப் பெருநிலப் பரப்பில் சொல்லொன்னா மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிவிலியன்களுக்கு உரிய வகையில் நிவாரணங்கள் அளிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தொண்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.