Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு அலையை கருணாநிதியால் கூட இனித் தடுக்கமுடியாது! - அங்கு கிடைத்த பட்டறிவை மஹிந்தவிடம் விளக்கினாராம் ரணில்

Featured Replies

தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சாரால் கூட இனி அதைனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் மஹிந்தவுக்கு, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

தமிழ் நாடடின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்த நிறுத்தம் குறித்து தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாடடில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துளளளார். மஹிந்த கடந்தவாரம் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன் போது தமிழ் நாட்டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் நாட்டிற்கான சமீபத்திய விஜயதின் போது ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்ர்களால் வழிமறிக்கபட்ட சம்பவம் குறித்து மஹிந்த கேட்டறிந்துள்ளார்.

குறிப்பட்ட வீதி மறியல் போரட்டத்தை யார் மேற்கொண்டார்கள்? மற்றும் எவ்வாறான கோஷங்கள் எழுப்பப்பட்டன? போன்ற விவரங்களை மஹிந்தன் தொலைபேசி உரையாடலின் போது கேட்டறிந்துள்ளார்.

மேலும் முக்கியமாக, புதுடில்லயின் மனோ நிலை எவ்வாறு உள்ளது? அரசியல் தலைவர்கள் எதனை வலுயுறுத்தினர்? எனவும் மஹிந்த கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விவராமாக விளக்களித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழ் நாட்டில் இலங்தை; தமிழர் ஆதரவு உணர்வலைகள் தீவிரமடைகின்றன எனவும் தமிழக முதலமைச்சரால் கூட இனி இதனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் கூறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழ் நாட்டில் காணப்படுவது போல புதுடில்லியில் யுத்த நிறுத்தத்திற்கான அழுத்தங்கள் எவையும் காணப்படவில்லயென்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்னியில் இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்புக் குறித்து அதிகம் வலியுறுத்தினார் எனவும் ரணில் மஹிந்தவிடம் தெரிவித்தார்.

நன்றி சுடர் ஒளி.

நரியும், நரபலி மகிந்தனும் சேர்ந்தாலும் இனி

தமிழன், தமிழனுக்காக எழுச்சி கொண்டதை

அடக்க முடியாது. வரும் காலம் சிங்களத்துக்கு:

"அமாவாசை கருக்கலிலே

பெருச்சாளி போனதெல்லாம் வழி".

இதைத்தான் அனுபவம் என்பது ரணில் தமிழ்நாட்டில் அனுபவம் அடைந்துவிட்டார் அடுத்தது மகிந்த ஈழத்தில் படுவார்

தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு அலையை கருணாநிதியால் கூட இனித் தடுக்கமுடியாது! - அங்கு கிடைத்த பட்டறிவை மஹிந்தவிடம் விளக்கினாராம் ரணில்

uthayan.com

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர் வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சரால் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியா தெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்தநிறுத்தம் குறித்து தீவிர அழுத் தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாட்டில் இது கடும் தாக்கத்தை ஏற் படுத் தியுள்ளதாகவும் ரணில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் தொலைபேசியில் உரையாடி னார். அதன்போது தமிழ் நாட் டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

தமிழ்நாட்டிற்கான சமீபத்தைய விஜயத்தின் போது எதிர்க்கட்சித்தலைவர் ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

குறிப்பிட்ட வீதி மறியல் போராட்டத்தை யார் மேற்கொண்டார்கள்? மற்றும் எவ்வாறான கோஷங்கள் எழுப்பப்பட்டன? போன்ற விவரங்களை ஜனாதிபதி தொலைபேசி உரையாடலின் போது கேட்டறிந்துள்ளார்.

மேலும் முக்கியமாக, புதுடில்லியின் மனோநிலை எவ்வாறு உள்ளது? அரசியல் தலைவர்கள் எதனை வலியுறுத்தினர்? - எனவும் ஜனாதிபதி கேட் டுள்ளார். தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விவரமாக விளக்கமளித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலைகள் தீவிரமடைகின்றன எனவும் தமிழக முதலமைச்சரால் கூட இதனைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அறியவந்துள்ளது.

அதேவேளை, தமிழ்நாட்டில் காணப்படுவது போல புதுடில்லியில் யுத்தநிறுத்தத்திற்கான அழுத்தங்கள் எவையும் காணப்படவில்லையென்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்னியில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்புக் குறித்து அதிகம் வலியுறுத்தினார் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.