Jump to content

இலங்கை தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து அரவாணிகள் உண்ணாவிரதம் மற்றும் ஒப்பாரி போராட்டம் நடத்துக்கின்றனர்.

இதுகுறித்து அரவாணிகள் ஒருங்கிணைப்பு அமைப்பை சேர்ந்த பிரியாபாபு, கவுரி, ரம்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இலங்கையில் போரை நிறுத்தவும், தமிழர்கள் படுகொலையை தடுக்கவும் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி சென்னையில் 8ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரவாணிகள் அமைப்புகளும் இணைந்து நடத்துகின்றன.

சமூகத்தில் நிராகரிப்பும், அங்கீகாரமும் கிடைக்காததின் வலி என்ன எனபது அரவாணிகளுக்கு தெரியும். இலங்கையில் அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டும், அங்கீகாரம் மறுக்கப்பட்டும் உள்ள தமிழர்களின் வலியை எங்களால் உணர முடிகிறது.

இதுவரை எங்களுடைய பிரச்சினைக்காக தனித்தனியாக போராடி வந்த நாங்கள், பொதுப்பிரச்சினைக்காக இப்போது போராடுகிறோம் என்றனர்.

Thanks: nakheeeran

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.