Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியைத் தாக்கும் இடைவிடாத பருவ மழையும் படை நடவடிக்கையும்- வன்னியன்

Featured Replies

வன்னிப் படை நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை கடந்த வாரம் வடபகுதி முழுவதும் பருவமழை என்றும் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்து மிகப்பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் இடம்பெயரச் செய்து அல்லல்பட வைத்துவிட்டது.

வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற கடும் மழைக்கு மத்தியிலும் படைநடவடிக்கையானது ஓய்ந்துவிடவில்லை என்பதற்கு வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமானத் தாக்குதல்களும், வன்னியின் மூன்று புறமும் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுத் தாக்குதல்களும் சான்றாகின்றன. இவ்வாறு இடைவிடாத மழையும், படைநடவடிக்கையும் வன்னி மக்களை என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக பாதித்திருக்கின்றது. பருவ காலத்திற்கேற்ற பயிர்ச்செய்கைகள் எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.

இருப்பினும் சில பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட பயிர்கள் வெள்ளப் பெருக்கினால் அழிந்து போயுள்ளன. வன்னிப் போரினால் ஏற்பட்டிருக்கின்ற உணவுப் பற்றாக்குறையின் தாக்கம் எதிர்வரும் புதிய வருடத்திலும் அம்மக்களை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குளங்கள் யாவும் நீர் நிரம்பியிருக்கின்ற போதும் படை நடவடிக்கை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மை பயிர்ச் செய்கைக்கு மிகப்பெரும் தடையாகவுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சியைச் சுற்றியுள்ள குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரம், புதுமுறிப்பு, அடம்பன், அறிவியல் நகர், முறிகண்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பிறைவடிவப் பிரதேசத்தில் இராணுவ முன்னகர்வு காரணமாக இருதரப்பிற்குமிடையில் கடும் சண்டை மூண்டது.

இடைவிடாது கொட்டும் மழைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைக்கு எதிராக புலிகளும் மூர்க்கமான எதிர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். சண்டையின் போக்கு இறுக்கமடைந்திருந்த வேளையில் படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பலர் பலியாக நேரிட்டது. விமானப்படையினர் வீசிய குண்டுகளில் சில வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இக்குண்டுகள் கிளஸ்டர் வகைக் குண்டுகள் என அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட குண்டுகளின் புகைப்படங்களும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன.

எனினும் இதனை இலங்கை அரசு முற்றாக மறுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் வகைக் குண்டுகளை உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப் படுத்துவதற்கும், பயன்படுத்துவதற்கும் உலக நாடுகளால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றும் சில நாடுகள் போரில் இக்குண்டுகளை பயன்படுத்தினாலும் இலங்கையில் இக்குண்டு பயன்படுத்தப்படுகின்றது என்பது உலகளாவிய ரீதியில் உறுதி செய்யப்பட்டால் பெரும் சர்வதேச அழுத்தத்தினை இலங்கையரசு சந்திக்க நேரிடும்.

கிளிநொச்சி, பரந்தனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கைக்கெதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தி கிளிநொச்சியை அண்மிக்காதவாறு தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் முக்கிய இராணுவ நகர்வானது பரந்தனை நோக்கிய TF1 படைப்பிரிவின் முன்னகர்வும், முறிகண்டியூடான 57 ஆவது டிவிசன் படைப்பிரிவின் கிளிநொச்சி நோக்கிய முன்னகர்வும் அமைவதனை அவதானிக்க முடிகிறது. இவ்விரு முனைகளின் முன்னரங்கப் பகுதியில் சீரற்ற காலநிலையிலும் இருபகுதியினரும் தொடர்ச்சியாக முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி வட்டகையில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டிருந்த அதே சமயம் ஏ9 வீதியில் உள்ள கொக்காவில் நோக்கி நகர்ந்த 57ஆவது டிவிசன் படையணி கொக்காவில் சந்திப் பகுதியையும், ஏ9 வீதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் நிலைகொண்டிருக்கும் TF3 படையணியுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் மாங்குளத்திற்கு வடக்கே முறிகண்டிக்கு அண்மை வரையான ஏ9 வீதியின் முழுப்பகுதியும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.

இப்பகுதியிலிருந்து மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் அதாவது முறிகண்டியிலிருந்து பனிக்கன்குளம் வரையான பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி நான்கு அல்லது ஐந்து மைல்கள் நகர்ந்தால் இரணைமடுக்குளத்தின் நீர் பிடிப்புப் பகுதி வந்துவிடும். இதனால் இப்பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிய நகர்வு இனிமேல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறலாம். ஆகவே, கொக்காவில் மற்றும் முறிகண்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கின்ற 57ஆவது டிவிசன் படைப்பிரிவு வடக்கு நோக்கி அதாவது இரணைமடுக் குளப்பகுதியிலிருந்து மேற்காக அறிவியல்நகர் வரையான ஆறு மைல் தூரத்திற்குட்பட்ட ஏ9 வீதியின் இருமருங்கிலும் கிளிநொச்சியை நோக்கி மட்டுமே நகர்வதற்கான புவியியற் சூழல் உள்ளது.

எனவே கிளிநொச்சியில் உள்ள புலிகளின் தெற்கு முன்னரங்க நிலைகளில் வரும் வாரங்களில் கடுமையான சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கடந்த வாரம் வவுனியா வடக்கு பிரதேசம் முழுவதும் இருபகுதியினரும் அற்ற சூனியப்பிரதேசமாக இருந்த நிலை மாறி, கடந்த நான்காம் திகதி ஓமந்தையிலிருந்து புளியங்குளம் வரையான பகுதிக்கு இராணுவத்தினர் பிரவேசித்திருப்பதனால் ஏ9 வீதி வவுனியாவிலிருந்து புளியங்குளம் வரை இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டினுள் சென்றிருக்கிறது.

அத்தோடு கடந்த ஐந்தாம் திகதி காலை ஏ9 வீதியின் மேற்குப் புறத்தில் நிலை கொண்டிருந்த TF2 படைப்பிரிவு கனகராயன்குளம் நோக்கி நகர்ந்து சென்று அங்குநிலைகொண்டு மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள TF3 படையணிகளுடன் இணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். இதன் மூலம் வவுனியாவிலிருந்து கொக்காவில் வரையான ஏ9 வீதியில் புளியங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய ஒரு பகுதி மட்டுமே இப்பத்தி எழுதப்படும் வரை சூனியப்பகுதியாகவுள்ளது.

ஆகவே, மொத்தத்தில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான கிட்டத்தட்ட 46 மைல் நீளமான ஏ9 வீதியில் 39 மைல் தூரம் வரை இராணுவப்பிடிக்குள் சிக்கிவிட்டது. மேலும் நெடுங்கேணிப் பகுதியில் சூனியப்பிரதேசமாக இருந்த ஒதிய மலை, பெரியகுளம், பழம்பாசி, ஆகிய பகுதிகளை நோக்கி நகர்ந்த 59ஆவது டிவிசன் படையினர் இப்பகுதிகளுக்குள் நுழைந்து நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு வவுனியா வடக்குப் பிரதேசச் செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள் யாவும் புலிகள் தாமாகப் பின்வாங்கிச் சென்றுவிட்ட நிலையில் எவ்வித சண்டைகளுமின்றி படையினர் படிப்படியாக நகர்ந்து தமது நிலைகளை நிறுவி வருகின்றனர்.

இப்பிரதேசத்தினுள் இடம்பெயராது வாழ்ந்த சில நூற்றுக்கணக்கான மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் அழைத்துச் சென்று செட்டிகுளம் மினிப்பாம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியான பின்வாங்கல்களுக்கு அல்லது விட்டுக் கொடுப்புக்களுக்கு ஒரு எல்லையை அல்லது வரையறையை புலிகள் இயக்கம் வைத்திருக்கும். அவ்வாறான எல்லைக் கோடுகளை படையினர் அண்மித்துவிட்டனர் என்றே கருதப்படுகிறது

இன்னும் பின்வாங்கி ஒதுங்கப் பல இடங்கள் உள்ளன.

இந்தவேளையில் மென்மேலும் போர்மேகம் வன்னிநோக்கிக் கவிழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய உண்மை நிலை.

என்ன பு*** வன்னியை சுழ இருக்கு?

எழுதுறாங்க நல்ல ஆய்வு கட்டுரை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.