Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் போர்க் கொள்கையுடன் இணங்கிப் போகும் எதிர்க்கட்சி-- கார்வண்ணன்

Featured Replies

வடக்கில் முன்னெடுக்கப்படும் போர் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வின் நிலைப்பாடு என்ன?

என்ற கேள்வி இப்போது தலை தூக்கியிருக்கிறது. ஒரு புறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டே, மறுபுறத்தில் போரை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஐ.தே.க. இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கத் தரப்பில் இருந்து "போர் தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிப்பீர்களா?' என்று சவால் விடப்பட்டது. ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, தமது கட்சி போரை விரும்பவில்லை என்றும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே தமது கொள்கை என்றும் கூறியிருந்தார்.

இராணுவத் தீர்வில் தமது கட்சிக்கு நம்பிக்கையில்லை என்றும் அமைதிப்பேச்சு மூலமே தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் ஐ.தே.க. இந்தப் போரை மறைமுகமாக ஆதரிப்பதை வெளிப்படுத்துகின்றது. அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்துக்கு மாற்றாக ஐ.தே.க.வின் நிழல் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க கடந்த மாதம் போட்டி வரவுசெலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

அதில் அவர் அரசாங்கத்தின் திட்ட ஒதுக்கீடுகளுக்கு முற்றிலும் எதிர்மாறான யோசனைகளைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் அவர் அரசாங்கத்தின் யோசனையுடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்திருந்தார். அரசின் பாதுகாப்பு ஒதுக்கீடுகளைப் போன்றே நிழல் நிதி அமைச்சரின் ஒதுக்கீடும் அமைந்திருந்தது. இது அரசாங்கத்தின் போர்க்கொள்கையில்தான் ஐ.தே.க.வும் நம்பிக்கை வைத்திருக்கிறதென்பதை எடுத்துக் காட்டியது. போர்நிறுத்தம், சமாதானப் பேச்சு என்று பேசுகின்ற பிரதான எதிர்க்கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாப்பு செலவினத்தோடு ஒத்துப் போயிருக்கிறதென்றால் தற்போதைய அரசாங்கத்தின் போர்க்கொள்கையை ஆதரிக்கிறதென்றே அர்த்தம்.

ஆனால் ரணில் இந்த விடயத்தில் உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வந்தாலும் போர் நிறுத்தம், அமைதித்தீர்வு என்று அவ்வப்போது குறிப்பிட்டே வந்திருக்கிறார். இந்தநிலையில் கடந்தவாரம் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றில் பேசும் போது, "இராணுவ நலன்களை முன்னிறுத்திய திட்டங்களை ஐ.தே.க. எதிர்க்காது எனத் தெரிவித்திருக்கிறார். அதேவேளை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டுக்கு ஐ.தே.க. ஆதரவு வழங்கும் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்துமாறு ஐ.தே.க. கோரிக்கை விடுக்காது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இன்னொரு சிரேஷ்ட தலைவரான ஜோன் அமரதுங்கவும் "போர்நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை ஐ.தே.க. நிர்ப்பந்திக்காது' என்று குறிப்பிட்டிருந்தார். லக்ஷ்மன் செனவிரத்னவோ , "போரைத் தொடருங்கள். ஆதரவு தருகிறோம். பயங்கரவாதத்தை அழியுங்கள். பிரபாகரனைக் கொல்லுங்கள்' என்று சபையில் கர்ஜித்திருக்கிறார். இவையெல்லம் ஐ.தே.க.வும் போர் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நம்பிக்கையில் இருப்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது ஐ.தே.க. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டதானது, அரசாங்கத்தின் போருக்கு முற்றிலும் ஆதரவான நிலைப்பாடே.

போரில் படையினர் அநியாயமாகப் பலி கொள்ளப்படுவதாகவும், உடனடியாகப் போரை நிறுத்தி பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி வந்த ஐ.தே.க.வே இன்று போரை நடத்துமாறு அரசாங்கத்க்கு ஆதரவு வழங்கியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியிடம் இருந்து கிடைத்திருக்கின்ற இந்த ஆதரவு அரசாங்கத்தின் போர்க்கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். போர்நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால் போர்நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டோம் என்ற ஐ.தே.க.வின் நிலைப்பாடு ஒன்றுக்கொன்று முரண்பாடானதாகவே உள்ளது.

போர் வேண்டாம் என்று கூறத் துணிந்த ஐ.தே.க. போர்நிறுத்தத்தை வலியுறுத்த துணிவற்ற நிலையிலேயே இருக்கிறது. 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சந்திரிகா, போர்நிறுத்தம் பேச்சுவார்த்தையை முன்னிறுத்தியே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2001இல் போர்நிறுத்தம் பேச்சுவார்த்தையை முன்னிறுத்தி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் இன்றைய நிலையில் ஒரு தேர்தல் நடந்தால் ஐ.தே.க.வும் சரி, ஆளும்கட்சியும் சரி போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று எந்தத் தரப்புமே முன்னிறுத்தப் போவதில்லை.

காரணம் இரண்டு கட்சிகளுக்குமே இப்போது போர் தேவைப்படுகிறது. போர் மூலம் தீர்வு என்று இரு முக்கிய கட்சிகளும் ஒரே பாதையில் பயணிக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் போர்ச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பலை ஏதும் நிலவ வாய்ப்பில்லை. இந்தக் கட்டத்தில் போரை வெறுக்கின்ற முற்போக்கு சக்திகளை தென்னிலங்கை வாக்காளர்கள் முட்டாள்களாக்கி விடுவர் என்றே ஐ.தே.க. கருத முற்படுகிறது போலும். தேர்தலை முன்னிறுத்தி போர் வெற்றிகளால் ஜனாதிபதி மஹிந்த கட்டியிருக்கின்ற கோட்டையைக் கண்டு பயந்து போய்த்தான் ஐ.தே.க இத்தகைய முரண்பாடான நிலைப்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்தநிலையில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க கடுகண்ணாவையில் நடந்த கூட்டம் ஒன்றில், "படையினர் பிரபாகரனின் தலையை கொண்டு வருகின்ற நாளில் தான் மகிழ்ச்சியடைவோம்' என்று தெ?வித்திருக்கிறார். இவையெல்லாம் தமிழர் பிரச்சினைக்கு ஒரு போதும் அரசியல்வழித் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை தென்னிலங்கை அரசியல் சக்திகள் பயன்படுத்திக் கொள்ளமாட்டாது என்பதையே வெளிப்படுத்துகிறது. இராணுவத் தீர்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படும் பிரதான கட்சிகளும் அதற்குப் பக்கப்பாட்டுப் பாடும் சிறு கட்சிகளும் இருக்கின்ற வரை இலங்கையில் அரசியல்தீர்வுக்கு மட்டுமன்றி அமைதி நிலவவும் சாத்தியமில்லை.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

எந்த சிங்களக்கட்சி என்றாலும் இனப்பற்றும் நாட்டுப்பற்றும் மிககூடியவர்கள்..அத்துடன் தமிழர்களைப்பற்றி, உலகமனிதவுரிமைகளைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு எல்லாம் அக்கரையில்லை என்பது 1948 இற்கு பிறகு தொடங்கி தற்போதுவரை இன்னும் எமது மக்கள் புரியாமல் ஒருவித மாயை உலகில் வாழுகிறார்கள்... நம்பிக்கெட்டது நம்மினம்.. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை...

ரே மூச்சில் எல்லாத்தமிழ்மக்களும் ஒரே நோக்கில் ஒன்றுபட்ட செயல்திட்டங்களை அமுல்படுத்துங்கள்..மீண்டும், மீண்டும் உலகின் கவனத்தை எம்மீது கொண்டு வாருங்கள்..

எமக்கு நடக்கும் கொடுமைகளை ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு கொண்டுவந்து எமது போரட்ட நியாயங்களை தொடர்ந்து விளக்கம் கொடுத்து வாழும் நாடுகளில் பெரும் அழுத்தங்கள் கொடுங்கள் இடைவிடாது...அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது சும்மா சொல்லிவைத்தார்களா?அ

முக்கியமாக சர்வதேச செய்திகளில் அந்த நாட்டு நடக்கும் போரட்டங்கள் வரக்கூடியமதிரி உங்கள் செயற்பாடுகளை கொண்டு செல்லுங்கள் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமையை விளக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிக்கட்சி என்றாலும் அவனுகளுக்கு இருக்கும் ஒற்றுமை அதிகம்

ஆனால் நம்மவர்களிடம்... :wub: ..............??

[ஃஉஒடெ நமெ='முனேவர்' டடெ='Dஎc 8 2008, 11:57 ஆM' பொச்ட்='467084']

எதிக்கட்சி என்றாலும் அவனுகளுக்கு இருக்கும் ஒற்றுமை அதிகம்

ஆனால் நம்மவர்களிடம்... :..............??

[/ஃஉஒடெ]

உண்மை தான் முனிவர் அவர்களே.. நிகழ்காலத்தில் நாங்கள் முடிந்தவிடையங்களை மறந்து ஆக்க பூர்வமாக எமது இனத்தின் வாழ்வா? சாவா? என்னும் போரட்டத்தில் சுதந்திரத்துடன் வாழ்வு என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக தொடராக மேற்கொள்ள வேண்டும்...அதற்கு எமக்கு விடுதலைவேண்டும் என உணர்வுள்ள ஆனால் உறங்கள் நிலையில் மனசோர்வான நிலையில் இருக்கும் எம்மக்களை ஊக்கிவித்து ஒருங்கிணைந்து செயல் படவேண்டும்..எமக்குள் இருக்கும் காக்கை வன்னியர்கள், சுயனலமிகளில் விழிப்பாக இருங்கள் ,ஆனல் கணக்கில் எடுத்து நாம் சோர்வடையக்கூடது. இதுகள் எக்கலத்திலும் இருப்பவை சூடு சுரணை இல்லாதவை.. இவர்கள் எல்லாம் திருந்தப்போவதில்லை.. திருந்தினாலும் அது காலம் கடந்துவிடும்...

உதாரணத்திற்கு பாருங்கள் பொங்கு தமிழ், மாவீரர் நாள்களில் பங்குகொள்ளும் மக்கள், எவ்வளவு மக்கள்?

விரும்பியும் வரமுடியாத சூழ்னிலை.. இவர்களையெல்லாம் கணக்கில் எடுத்தால் இந்த ஒட்டுக்களும் சுய நலமிகளும் சிறு துளி.. மக்கள் சக்தியே மகா சக்தி.. எனவே எமது முழு சக்தியும் எதிரினோக்கியதக இருக்கட்டும்... எம்மக்களை பலப்படுத்துங்கள்.. எதிரி முகமூடி கிழித்தெரியுங்கள்

உங்களாள் ஆயுதமெந்த முடியாது ஆனல் இது முடியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.