Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவும் சரத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும்- சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும்: வைகோ

Featured Replies

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரின் தரைப்படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத் தளபதி எம்மை ஏளனம் செய்ய மத்திய அரசே காரணம் - வைகோ

வீரகேசரி இணையம் 12/8/2008 4:54:51 PM - இலங்கை அரசு, ஏழுகோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தை, அதன் சட்ட மன்றத் தீர்மானத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து எக்காளமிடும் அவமானத்தை இந்திய அரசுதான் ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் பொன் சேகா போன்றவர்கள் தமிழக அரசியல்வாதிகளை ஏளனப்படுத்தி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

''இலங்கைத் தீவில் தமிழ்க் குலத்தையே கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு இராணுவத் தாக்குதல் நடத்தப்படுகின்றது. தமிழர்களைக் கொன்று குவித்து இனப் படுகொலை செய்து வருவதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும், போர் நிறுத் தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தித் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், ''தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது'' என்று இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கொக்கரித்துள்ளார்.

"இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்க வில்லை என்றும், இனியும் கேட்காது என்றும், இது குறித்து இந்தியப் பிரதமர் தம் கருத்தை எங்களிடம் தெரிவித்து உள்ளார்'' என்றும் கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தின் மை உலர்வதற்கு உள்ளாக, புது டெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்துவிட்டு, இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்ஷ, ''போர் நிற்காது'' என்று பேசியது இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.

இந்த வெட்கக்கேடான இழிசெயலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காததால்தான், ராஜ பக்ஷவின் ஏவுதலோடு இராணுவத் தளபதி, தமிழகத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசியுள்ளார்.

சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்டிய போதும், டெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச்சந்தித்த போதும், இவையெல்லாம் கண்துடைப்பு நாடகம் என்றும் இந்திய அரசு போர் நிறுத்தத்தை வற்புறுத்தப் போவது இல்லை என்றும் தெரிவித்தேன்.

தற்போது இராணுவத்தளபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் இழிவு படுத்தி உள்ளமை மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போரை அரசு நடத்துவதற்கு ராடார்கள், ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி, இராணுவ ரீதியான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, இந்தப் போரைப் பின்னால் இருந்து இந்திய அரசு இயக்கி, தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைப்பதால் ஏற்பட்ட அகம்பாவமும் துணிச்சலும்தான் சரத் பொன்சேகாவை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

இந்தியா உலகின் அணு ஆயுத வல்லரசுகளுள் ஒன்று. ஆனால் சுண்டைக்காய் நாடான இலங்கையில் இனவாத அரசு, ஏழுகோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தை, அதன் சட்ட மன்றத் தீர்மானத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து எக்காளமிடும் அவமானத்தை இந்திய அரசுதான் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வெளி விவகார அமைச்சரை டெல்லிக்கு வரவழைத்து, ''போர் நிறுத்தம் செய்கிறாயா? இல்லையா?'' என்று எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்குத் தூது அனுப்பப் போகிறோம் என்று சொல்வதே மானக் கேடாகும்.

''இனியும் பொறுப்பதற்கு இல்லை'' என்று தமிழ் மக்கள் எரிமலையாய்ச் சீறவேண்டிய தருணம் வந்து விட்டது.

இலங்கையில் தமிழ் மக்களைப் படுகொலை செய்து கொண்டே, இந்தியக் கடலிலும் நுழைந்து தமிழக மீனவர்களையும் தாக்கிக் கொலை பாதகம் செய்து கொண்டே இத்தனைக்கும் மேலாக தமிழகத் தலைவர்களைத் துச்சமாகக் கருதி கேலி புரியவும் ஏளனம் செய்யவும், இராணுவத் தளபதி முற்பட்டுவிட்டார்.

இது தமிழ் இனத்துக்கும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம்.

இந்தியப் பிரதமர் உடனடியாக இலங்கை அரசுக்குப் பலத்த கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ஷவும், இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருமாறு இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.

அப்படி மன்னிப்புக் கேட்காவிடில்இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து மத்திய அரசு வெளியேற்ற வேண்டும்.

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்:

இலங்கை அதிபரும், தளபதியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி எதிர்வரும் 10ஆந்திகதி காலை 11.00 மணியளவில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூதரகம் முன்னால் என்னுடைய தலைமையில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழர்களின் மானம் காக்க நடத்தப்படும் இந்த அறப்போரில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.