Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் போரினால் அவலப்படும் மக்களை சந்தித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் போரினால் அவலப்படும் மக்களை சந்தித்த யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் அடிகளார்.

ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [கோபி]

கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி சென்று அங்கு இடம்பெயர்ந்து இன்னலுறும் மக்களையும், தொண்டு பணிபுரியும் குருமார்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுபையப்பர் ஆலயத்தில் தங்கியிருந்து, மக்களுக்கு இறை ஆசிவேண்டி விசேட திருப்பலியை ஆயர் ஒப்புக்கொடுத்துள்ளார்.

இதேவேளை வன்னிப்பிரதேசத்தில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை காரணமாக அந்தப் பகுதியில் பேரவலம் ஏற்பட்டிருப்பதாகவும், அங்கு மூன்றிலிரண்டு பங்கு மக்கள் தமது சொந்த வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து, சொத்துக்கனை இழந்து, நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடப்பெயர்வு மற்றும் யுத்தச் சூழ்நிலை காரணமாக 173 பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை இழந்துள்ளனர். இந்த மாணவர்கள் தற்காலிகக் கொட்டில்களிலும் மர நிழல்களிலும் கல்வி கற்க நேர்ந்திருக்கின்றது.

வன்னியில் பெரும்பான்மையான குடும்பங்கள் அரசினாலும் உலக உணவுத் திட்டத்தினாலும் வழங்கப்படுகின்ற நிவாரணத்தை மட்டுமே நம்பி வாழவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உணவைத தவிர ஏனைய இதர தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலை உள்ளனர். இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களில் 50 வீதத்தினருக்கும் மேற்பட்டவர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை வசதிகள் கிடையாது. எனினும் வயிற்றோட்டம் மலேரியா போன்ற நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரையில் 22 பேருக்கு மலேரியா நோய் ஏற்பட்டிருப்பதாக இரத்த பரிசோதனை மூலமாகக் கண்டறியப்பட்டிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உயிர்க்கொல்லி நோயாகிய மலேரியா நோயை இலங்கை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்த போதிலும், வன்னிப்பகுதியில் நிலவுகின்ற போர்ச்சூழல் மற்றும் பொது சுகாதார சேவைகளில் அந்தப் பிரதேசத்தின் மீதான அரசாங்கத்தின் கவனம் உரிய முறையில் செலுத்தப்படாமை போன்ற காரணங்களினால் மலேரியா நோய் பரவாமல் தடுப்பதற்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மலேரியாவைப் பரப்புகின்ற நுளம்புகளை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தினை வன்னிப்பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

pathivu

திரும்பி யாழ்ப்பாணம் போக வேணும்... அங்கு இருக்கும் மன நோயாளருக்கு அடிகளார் பலியாகாமல் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஆயர் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக பாக்கிஸ்த்தானிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறதாம். இதை உண்மை என்று நம்பி இங்கு சிட்னியில் உள்ள புலி எதிர்ப்பாளர்கள் (இவர்கள் 15 - 20 ஆண்டுகளிற்கு முன்னர் இங்கு வந்து வீடு வாசல் என்று செட்டில் ஆகி , இனி என்ன செய்யலாம்? என்று யோசித்து புலிக்காய்ச்சல் பற்றிக் கொண்டவர்கள்)தமக்குள் பரப்பி வந்த மின்னஞ்சல் ஒன்று தவறி எனக்கும் கிடைத்திருந்தது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பிலிருந்து பெறப்பட்ட செய்தியை புலிக்காய்ச்சல் கொண்ட டமிலர் சிலர் தமக்குள் வெகு உற்சாகமாக பரப்பி வருகிறார்கள்.

பாக்கிஸ்த்தான் காரன் கவலைப்படும் அளவுக்கு எமது நிலை போய் விட்டது ? பத்து நாளைக்கு ஒரு முறை எம்மை வேரறுக்க கப்பல் கப்பலாக ஆயுதம் கொடுக்கும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத நாடு வன்னியில் உள்ள மக்கள் பற்றிக் கவலைப்படுகிறதாம், அதை இங்குள்ள பரதேசிகள் செய்தியென்று துக்கிக் கொண்டு நாய் படாத பாடு படுகுதுகள். எங்கேயோ இருந்து எம்மை அழிக்க துணைபோகும் பாக்கிஸ்த்தான் காரனை நம்பும் இந்த புலிக்காய்ச்சல் பரதேசிகள் எமது மக்களையோ அல்லது புலிகளையோ நம்பத் தயாரில்லை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.