Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு...

Featured Replies

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

ஏணையில் உறங்கும்

பச்சிளம் குழந்தையைக்கூட

ஏவுகணை வீசி

கொல்லும் எதிரிகளே

உங்கள் உலக சாதனையை

அம்மணமாய் நின்று கொண்டு

உலகம் வாழ்த்தட்டும்

எங்கள் வலிகள்

உங்களுக்கும் புரியவில்லை

இன்னும் இந்த

உலகத்திற்கும் புரியவில்லை

மனிதம் தொலைத்து

வெறிபிடித்த மிருகங்களாய்

கொடிய முகம்

கிழித்து வாருங்கள்

எங்கள் எல்லைகள் எங்கும்

உங்களுக்காய்

மரணக்குழிகள் காத்திருக்கிறது

எங்கள் குருதி உறைந்த

செம்மண் பூமி எழுந்து

உங்களைத் திண்டு விழங்கும்

வெறும் எலும்புக் கூடுகளாய்

உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி

உங்கள் வீட்டின் முற்றத்திலே

கொண்டுபோய் கொட்டுவோம்

கனரக வண்டிகள்

சுவர்களை உடைக்க

பறந்திடும் விமானங்கள்

பச்சைக்காடுகளை அழிக்க

குண்டு மழையிலே

எங்கள் மண் குளிக்கிறது

எங்கள் எல்லைக்குள்

எந்த இடத்திலே

நீஙகள் முன்னேறி வந்தாலும்

அந்த இடமே

உங்களின் சுடுகாடாய் மாறும்

இத்தனை ஆண்டுகளாய்

உங்களால் நாங்கள்

இழந்த உயிர்களுக்கும்

உறவுகளுக்கும்

எவரிடமும் கணக்குகளில்லை

அடக்கி ஆழ்வதற்காய்

ஆயுதம் தூக்கியவர்கள் நீங்கள்

எங்களை காப்பதற்காய்

ஆயுதம் தூக்கியவர்கள் நாங்கள்

நாங்களும் நீங்களும்

ஒரே காற்றை சுவாசித்தாலும்

ஓரே நீரைக் குடித்தாலும்

உங்கள் பூமிக்கும்

எங்கள் பூமிக்கும்

எத்தனை வேற்றுமைகள் பாருங்கள்?

புத்தரின் பெயரைச்

சொல்லிச் சொல்லியே

எங்கள் புன்னகைகள்

பறிக்கப்படுகிறது

புன்னகைகள் பறிபோனாலும்

எதிரிகளாக வந்து நீங்கள்

மரணக்குழியில் விழுகிற போது

தமிழராகவே நிமிர்கிறோம்

விடுதலை நெருப்பில்

வெந்து கொண்டிருந்தாலும்

எங்கள் வேர்கள் கருக

நாங்கள் விடமாட்டோம்!

கண்ணீரைத் துடைப்பதற்கு

நாங்கள் வைத்திருப்பது

கைக்குட்டைகள் அல்ல

கைத்துப்பாக்கிகள்!

வசீகரன்

நோர்வே

14.12.08

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

கண்ணீரைத் துடைப்பதற்கு

நாங்கள் வைத்திருப்பது

கைக்குட்டைகள் அல்ல

கைத்துப்பாக்கிகள்!

வசீகரன்

நோர்வே

14.12.08

நெஞ்சைத் தொடுகின்ற யதார்த்தம்...!

மிகவும் அழக்கான கவிதை வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

உங்களுடைய கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நிருயா.

ஒரு இளைய படைப்பாளனாக இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை கவிதை வரிகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்ற யாழ்கள உறவுகளின் உற்சாகமூட்டும் கருத்துகளால் நாங்கள் வாழும் காலத்தில் எங்களுக்கு நிகழ்கின்ற வலிகளின் உச்சத்தை வரலாறாக வடித்து, அடுத்த சந்ததிக்கு நகர்த்த வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை பிடிச்சிருக்கு....வாழ்த்துக்க

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நான்கு வரிகளும் நம்பிக்கையின் வரிகள். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

புன்னகைகள் பறிபோனாலும்

எதிரிகளாக வந்து நீங்கள்

மரணக்குழியில் விழுகிற போது

தமிழராகவே நிமிர்கிறோம்

விடுதலை நெருப்பில்

வெந்து கொண்டிருந்தாலும்

எங்கள் வேர்கள் கருக

நாங்கள் விடமாட்டோம்!

கண்ணீரைத் துடைப்பதற்கு

நாங்கள் வைத்திருப்பது

கைக்குட்டைகள் அல்ல

கைத்துப்பாக்கிகள்!

வசீகரன்

நோர்வே

14.12.08

[size="3"]தமிழன் எதை இழந்தாலும் நம்பிக்கைஎன்னும் ஆணிவேரை இழக்க மாட்டான். உரிமைகள் போகலாம், உடமைகள் போகலாம், உயிர்களும் போகலாம். எங்கள் ஈழ உணர்வுகள் சாவதில்லை. பிறப்பொடு வந்தது மண்ணுக்காய் மடியும் வரை துடித்துக்கொண்டே இருக்கும் என்கின்ற களப்போராளியின் துணிச்சலை சொல்லி நிற்கின்றது ஒவ்வொரு வரிகளும்..

இடத்தைப் பிடித்துவிட்டோம் என்று சொல்லிச்சொல்லி வென்றதாய்ப்போலி முகம் காட்டும் சிங்களத்துக்கு ''வெற்றி என்றால் என்ன? என்று பாடம் கற்பிக்கப்படும்.

அண்ணா,

உங்கள் வரிகள் எல்லாமே ஈழ உணர்வலையின் உயிர் மூச்சு.

  • தொடங்கியவர்

புதிய மனிதனுக்கும், புலவர் அவர்கட்கும், அன்பிற்குரிய தமிழ்த்தங்கைக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

இந்த வரிகள் பிடித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினீர்கள். மிகவும் உற்சாகமாக அடுத்த கவிதை எழுதத் தொடங்கிவிட்டேன்.

ஒவ்வொரு கிழமையும்(ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரும்) ஒரு கவிதை எழுதவேண்டும் என்ற புத்துணர்வோடு எழுதுகின்றேன். ஈழத்தமிழ் உறவுகளின் வலிகளை வார்த்தைகளுக்குள் சுருக்கி வடித்தெடுத்து உலகத்தின் விளிம்புகளெங்கும் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் கருவாகியுள்ளது.

இங்கே எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் உருவாகி வருவது பெரு மகிழ்ச்சி தருகிறது. யாழ்களத்தை நிர்வகித்து, எந்தச் சிரமங்களையும் தன் தோள்களில் சுமக்கின்ற மோகன் அண்ணாவிற்கு எங்கள் தேசம் தன் வரலாற்றில் ஒர் நிரந்தர இடத்தை ஒதுக்கும். என்றும் எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் மோகன் அண்ணா. எந்தத் தடை வரினும் யாழ்களத்தினை நிறுத்த எண்ணாதீர்கள். ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

வசீகரன்தான் தமிழ்வானமா?

தொடர்ந்து தாருங்கள் உங்கள் படைப்புகளை....... சரியான வகையில் ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உண்மையான விமர்சனங்களை நாம் முன் வைக்கும் போது சிறந்த படைப்பாளிகள் இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைவார்கள். தொடர்ந்து வரும் காலங்கள் யாழின் படைப்புக் களம் சிறந்த விமர்சகர்களை கொண்டதாக அமைய வாழ்த்துகள்.

ஆ.... என்ன நம்ம வாலை யாராவது பறித்துவிட்டார்களா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய மனிதனுக்கும், புலவர் அவர்கட்கும், அன்பிற்குரிய தமிழ்த்தங்கைக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

இந்த வரிகள் பிடித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினீர்கள். மிகவும் உற்சாகமாக அடுத்த கவிதை எழுதத் தொடங்கிவிட்டேன்.

ஒவ்வொரு கிழமையும்(ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரும்) ஒரு கவிதை எழுதவேண்டும் என்ற புத்துணர்வோடு எழுதுகின்றேன். ஈழத்தமிழ் உறவுகளின் வலிகளை வார்த்தைகளுக்குள் சுருக்கி வடித்தெடுத்து உலகத்தின் விளிம்புகளெங்கும் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் கருவாகியுள்ளது.

இங்கே எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் உருவாகி வருவது பெரு மகிழ்ச்சி தருகிறது. யாழ்களத்தை நிர்வகித்து, எந்தச் சிரமங்களையும் தன் தோள்களில் சுமக்கின்ற மோகன் அண்ணாவிற்கு எங்கள் தேசம் தன் வரலாற்றில் ஒர் நிரந்தர இடத்தை ஒதுக்கும். என்றும் எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் மோகன் அண்ணா. எந்தத் தடை வரினும் யாழ்களத்தினை நிறுத்த எண்ணாதீர்கள். ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

வசி அண்ணா,

எந்த முகூர்தத்தில் இந்தக்கவிதை எழுதத்தொடங்கினீர்களோ....'வந்த எதிரிக்கு பாடை கட்டிவிட்டார்கள் நம் வேங்கை வீரர்கள்".

உள்ளச்சுத்தியுடன் உணர்வுபூர்வமாகவேண்டப்படும் உண்மைக்கு எப்போதும் வெற்றிதான்.

தொடர்ந்து எழுதுங்க அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.