Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தை மீள திரும்ப விடுவதில்லை என்பதே தமிழீழ மக்களின் வைராக்கியம்: பா.நடேசன்

Featured Replies

வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் இலங்கை இராணுவத்தினரை மீளத் திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே மக்கள் போராடி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய களநிலைமைகள் மற்றும் அங்குள்ள மக்கள் படும் இன்னல்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ’செய்தி அலைகள்’ நிகழ்ச்சிக்கு கடந்த 9 ஆம் திகதி அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அதில் மேலும் கூறியவை வருமாறு:

கேள்வி: தாயக மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் - குறிப்பாக தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்தும் அவர்களுடைய தற்போதைய நிலைமைகள் குறித்தும் கூறமுடியுமா?

பதில்: எங்களுடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் மன்னாரிலிருந்து தொடர்ச்சியாக அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களாக அல்லாமல் எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாவும் உள்ளனர்.

அரசினுடைய வான்குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், மோசமான பொருளாதாரத் தடைகள், மருந்துத் தடைகள், அத்தியாவசிய உணவுத் தடைகள் போன்ற மிகவும் மோசமான இந்த சூழலில் - எமது மக்களை இயற்கை அனர்த்தமும் பெரிதளவில் பாதித்திருக்கிறது.

இதனால் இடம்பெயர்ந்த மக்களை பாடசாலைகள், ஆலயங்கள், உறவினர்களின் வீடுகள் எனப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களை மீளவும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.

அரசு பாரியதொரு பொருளாதாரத் தடையை எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 400 லொறிகளில் உணவுப் பொருட்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 218 லொறிகளையே அரசு வன்னிக்கு அனுப்பியுள்ளது.

அதேபோல் கடந்த நவம்பர் மாதமும் 400 லொறிகள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வரவேண்டும். ஆனால் 112 லொறிகளுக்கு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும், எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் என்பன இத்தகைய சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீளவும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக - பின் களமுனைகளில் பணி செய்கின்றவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

கே: தாயகத்தில் இத்தகைய அவலங்களைச் சந்திக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை - உதவிகளை - யார் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்?

ப: இந்த மக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் அழைத்துச் சென்று அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றி, அவர்களுக்குரிய உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், சுகாதாரக் கல்வியூட்டல் போன்ற வசதிகளைச் செயது வருகிறது. அது மட்டுமன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தமிழீழ சுகாதார சேவைப் பிரிவு, நலன்புரி அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய மக்களின் தேவைகளை - மிகப்பெரியதொரு மனிதாபிமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த இடத்தில் மிகவும் மனவேதனையுடன் அனைத்துலக சமூகத்திற்கு ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அனைத்துலக நாடுகள் பல தடை செய்திருக்கின்றன. ஆனால், வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்து பார்த்தால் அதனது பணி எவ்வாறானதென்பது அந்த நாடுகளுக்கு தெரிய வரும்.

கே: தமிழக மக்களின் உணவு அவர்களுடைய உதவியாக தாயக மக்களுக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இது தாயக மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?

ப: தமிழக மக்களால் இந்திய மத்திய அரசின் ஊடாக தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பொருட்கள் இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விநியோகம் செய்யப்படுகின்றன.

எனினும், தமிழக மக்களால் அனுப்பப்பட்ட முழு உணவுகளும் இதுவரை இங்கு வந்து சேரவில்லை. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளையும் அரசு தடுக்கின்றது.

கே: வன்னிப்பெரு நிலபரப்பில் தற்போதுள்ள களநிலைமைகள் எந்த அளவில் உள்ளன?

ப: இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர்.

உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை. எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

கே: அரசினால் புலிகளின் தலைமை குறித்தும் புலிகளின் மனவுறுதி குறித்தும் சில விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து புலம்பெயர் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

ப: அரசு அவர்களுடைய ஊடகங்களும் இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது குறித்து எங்களுடைய மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எங்களுடைய மக்கள் நீண்டகாலமாக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களைக் கண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்தபோதும் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புலம்பெயர்ந்துள்ள மக்கள் எந்நேரமும் எங்களைப் பற்றிய சிந்தனையுடனும் பாசத்துடனும் இருப்பதால் இத்தகைய பொய்ப் பிரசாரங்களின் பிரதிபலிப்புக்கள் அவர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், புலம்பெயர் மக்கள் மிகவுறுதியுடன் - ஓர்மத்துடன் - வைராக்கியத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் எமது விடுதலைப் போராட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையிலான திருப்புமுனையை ஏற்படுத்தி அதனூடாக வெற்றிப் பாதையில் செல்வோம் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கே: கிளிநொச்சி தற்போது ஒரு சூனியப் பிரதேசமாகி விட்டது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது?

ப: கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் வயல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரச வான்படையின் குண்டுகளும் எறிகணைகளும் பீரங்கிகளும் இவ்வாறான குடிமனைகளையும் வயல் நிலங்களையும் நோக்கியே ஏவப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய தாக்குதல்களுக்கு இயைபாக்கம் அடைந்து - பழகிப்போய் - மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

கே: விடுதலைப் புலிகள் சில இடங்களில் இருந்து தந்திரோபாய பின்நகர்வை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகின்ற போதும் - புலிகள் பலமிழந்து விட்டனர் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு உங்களது பதில் என்ன?

ப: இவ்வாறான ஆய்வாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாம் எவ்வாறான தந்திரோபாய நகர்வுகளை பின்பற்றி வருகிறோம் என்பதை அவர்கள் பின்னர் அறிவர். தந்திரோபாயங்களை முன்னரே அறிவிப்பது விவேகமான செயற்பாடாக இருக்குமென நான் நினைக்கவில்லை.

கே: தென்பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இராணுவ ரீதியில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டமுடியுமென்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் வெளியிட்டுள்ளனர். இது எதனைக் காட்டுகிறது?

ப: தமிழ் மக்களின் இன அழிப்பைக் கணக்காகக் கொண்டு சிங்கள மக்கள் பிழையான பாதையில் செல்கின்றனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

கே: விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு குறித்து வெளிநாடுகள் எதனையும் வெளிப் படுத்தாதமை எதனைக் காட்டுகிறது?

ப: எங்களுடைய தலைவர் இதனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்துலக சமூகத்திடம் இந்தமுறை மாவீரர் நாள் உரையிலும் எங்களுடைய தடையை நீக்க வேண்டும் - எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளவேண்டும் - என்று அனைத்துலக சமூகத்திடம் கேட்டிருக்கிறார். இங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளையும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அரச வெளியேற்றியதன் பின்னணியில் தமிழ் இன அழிப்பு குறித்து அனைத்துலக சமூகத்திற்கு சிறிது சிறிதாக வெளிப்பட்டு வருவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

கே: அனைத்துலக நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் குறிப்பாக மலேசியாவிலுள்ள தமிழர்கள், தென்னாபிரிக்காவிலுள்ள தமிழர்கள் என உலகெங்கும் உள்ள தமிழர்கள் தற்போது மேற்கொண்டு வரும் உணர்வெழுச்சி போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய நம்பிக்கையை தந்திருக்கிறது?

ப: இது எங்களுக்கு மிகப்பெரிய ஆன்ம பலத்தை தருகிறது. உலகத் தமிழினம் ஒரே காலகட்டத்தில் ஒரே குரலாக - ஒரே ஒழுச்சியாக - ஒரே சக்தியாக ஒன்றுபட்டு நிற்பது எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகின்ற அங்கீகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியானது தமிழ்நாட்டை மட்டுமல்ல. அதையும் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.

அதுபோன்றே வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் வெறுமனே தமிழ்மக்களின் ஆர்ப்பாட்டமாக மட்டுமன்றி எதிர்காலத்தில் அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கப் போகின்றது என்பதையே காட்டுகிறது.

கே: தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்கள் குறித்து என்ன செய்தியைக் கூறவிரும்புகிறீர்கள்?

ப: எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். நிறைவு அளிக்கக்கூடிய வகையில் அவர்களது செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை - உதவிகளை - தொடர்ச்சியாக அந்தந்த நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லி - மிக விரைவாக எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிப்பதற்கான அந்த எழுச்சி நிலையை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.

கே: தமிழ் மக்கள் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

ப: தமிழ்மக்கள் தமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கே: இந்தியாவிற்கு சிங்கள தேசம் நண்பர்களாக இருக்க முடியுமா?

ப: ஒருபோதும் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக உண்மையான நண்பர்கள் நாங்கள்தான் என்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறும் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவின் வரலாற்று நண்பர்கள் தமிழ்மக்கள்தான் என்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.

கே: தமிழ் மக்களுக்கு எதிராக பரப்புரை ரீதியாக அரசு தீவிரம் காட்டுவதாகவும் தமிழ் மக்கள் தரப்பில் பரப்புரை மந்தமாகவே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து?

ப: பொருளாதாரத் தடைகள், இராணுவ நடவடிக்கைகள் என பல தடைகளுக்கு மத்தியில் இருந்தே நாங்கள் இந்த பிரசார வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். எனினும் புலம் பெயர்ந்துள்ள மக்கள் அங்கே எங்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக எடுத்து விளக்கி வருகின்றனர்.

கே: புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு தாயகத்திலிருந்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

ப: புலம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த காலத்தைப் போன்றும் நிகழ்காலத்தைப் போன்றும் எதிர்காலத்திலும் சோர்வடையாது மிகவும் உற்சாகமாக - மிகவும் உறுதியுடன் - தொடர்ந்தும் அந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் நாம் இங்கு இருக்கின்றோம் என்று பா.நடேசன் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.