Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்களே இல்லாத கிளிநொச்சியில் திடீரென முளைத்த ஒன்றரை லட்சம் பேர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களே இல்லாத கிளிநொச்சியில் திடீரென முளைத்த ஒன்றரை லட்சம் பேர்!

[29 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:55 மு.ப இலங்கை]

‘ஆட இயலாதவன் மேடை சரியில்லை என்றானாம்!’ - எனக் கூறுவார்கள்.

கிளிநொச்சியைப் பிடிக்கும் மூர்க்கத்தில் இருக்கும் இலங்கை அரசுத் தரப்பும் அது தாமதமாவதன் காரணமாக - தமது இயலாமை காரணமாக - அப்படித்தான் விளக்கம், வியாக்கியானம் கூறுகின்றது போலும்.

கடந்த செப்டெம்பரில் தமது அலரிமாளிகை இல்லத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதத்தில் அரசுப் படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடும் எனத் தாம் எதிர்பார்க்கின்றார் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் மிச்சம் இருக்கின்றன. ஆனால் ஜனாதிபதியின் நம்பிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் தென்படவேயில்லை.

ஆனால் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக அரசுத் தரப்பில் ‘பொறுப்பான’ நிலைகளில் இருப்போர் கூறும் விளக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானவையாகவும் குளறுபடியானவையாகவும் இருப்பது விசனத்துக்குரியது.

ஈழத் தமிழர் தாயகத்தின் மையநிலமான வன்னிப் பெரு நிலப்பரப்பு மீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் - ஈவிரக்கமற்ற - கொடூரப்போர், அங்கு ஏற்படுத்தியிருக்கும் மனிதப் பேரவலம், தமிழகத்தில் சிந்தனைக் கிளர்ச்சியைத் தட்டி எழுப்பி, பெரும் உணர்வெழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்திருக்கும் தமிழகத்தையும், அதற்கு இயைந்து செயற்பட வேண்டியிருக்கும் இந்திய மத்திய அரசையும் சமாளிப்பதற்காக, புதுடில்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பஸில் ராஜபக்ஷ அங்கு கிளிநொச்சி நிலைமை குறித்து ஒரு கருத்தை முன்வைத்தார்.

கிளிநொச்சியை இதோ பிடித்துவிடுவோம் என்று கொழும்பின் அரசியல் தலைமை கட்டியம் கூறிய சமயத்தில் ஒக்டோபர் கடைசியில் புதுடில்லியில் வைத்து இக்கருத்து வெளியிடப்பட்டது. கிளிநொச்சியைக் கைப்பற்ற அரசுப் படைகள் முயன்றால் மனிதப் பேரவலம் நேரும் என்று தமிழகத்திலிருந்து கோபக்குரல் எழுந்த பின்னணியிலேயே, அதை சமாளிப்பதற்கு இந்தக் கருத்தை எடுத்து விட்டார் பஸில்.

"கிளிநொச்சியில் இப்போது (ஒக்டோபரில்) எவருமில்லை. அப்பகுதி மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஆழமாக உள்ளே சென்று விட்டார்கள். எங்களது சூட்டு இலக்குகளில் இருந்து அவர்கள் தள்ளிப் போய்விட்டனர்.

"கிளிநொச்சி மருத்துவமனையைத் தவிர அங்கு வேறு அரச அலுவலகம் ஏதும் இயங்கவில்லை. மருத்துவமனை கூட அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது.

"கிளிநொச்சியிலிருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்துவிட்டனர். கிளிநொச்சியில் இனி யாரும் மிச்சமிருந்தால் அவர்கள் விடுதலைப் புலிகள்தாம்." - இப்படித்தான் புதுடில்லியில் வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது தம்பியும் எம். பியுமான பஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அதாவது -

கிளிநொச்சி மீதான படை நடவடிக்கைகளில் இனி யாராவது கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டால் - காயமடைந்தால் அல்லது கொல்லப்பட்டால் - அவர்கள் நிச்சயமாக விடுதலைப் புலிகளே தவிர வேறு யாருமல்லர் என்பதை முற்கூட்டியே இந்தியாவில் வைத்தே தெரிவித்து விட்டுத்தான் அங்கிருந்து பஸில் புறப்பட்டார்.

ஆனால் கிளிநொச்சியைப் பிடிக்க இரண்டு மாதங்களாகப் படையினர் எடுத்த பகீரதப் பிரயத்தனம் இன்னும் வெற்றியளிக்காத நிலையில் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இப்போது புதிய கதையை அவிழ்த்து விடுகின்றார்.

"புலிகளிடம் சிக்குண்டு கிளிநொச்சியிலும் அதைச் சுற்றியும் இன்னும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் உள்ளனர். அந்த மக்களுக்கு ஏதும் நேரக் கூடாது என்ற கடும் உத்தரவு படைகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் கிளிநொச்சியை நோக்கிய படை நகர்வு மிக மந்தமாக இருக்கின்றது." - என இப்போது கூறுகின்றார் ரம்புக்வெல.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி இதோ அரசுப் படைகளிடம் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டபோது "கிளிநொச்சியில் பொதுமக்களே இல்லை, அப்படி இருந்து யாரும் யுத்தத்தில் அங்கு பாதிக்கப்பட்டால் அவர்கள் புலிகளே தவிர வேறு ஆட்கள் இல்லை" என ஜனாதிபதியின் விசேட தூதுவர் - அதுவும் புதுடில்லியில் வைத்து - வெளிப்படையாகக் கூற -

இப்போது கிளிநொச்சி நோக்கிய பெரும் எடுப்பிலான படை நகர்வு ‘தள்ளாடுகின்ற’ போது, அதைச் சமாளிப்பதற்கு கிளிநொச்சியிலும் சுற்றுப் பிரதேசத்திலும் இன்னும் ஒன்றரைலட்சம் மக்கள் சிக்குப்பட்டிருக்கின்றார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.