Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதல்களுக்கு இலக்காகும் காஸாவும் கிளிநொச்சியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்களுக்கு இலக்காகும் காஸாவும் கிளிநொச்சியும்

[30 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 11:05 மு.ப இலங்கை]

பாலஸ்தீன தேசம் மீது மிகக் குரூரமான தாக்குதல்களை கொடூரமாக ஆரம்பித்திருக்கின்றது இஸ்ரேல்.

மத்திய கிழக்கில், பாலஸ்தீன மக்களைத் துரத்தியடித்து, ஆக்கிரமித்த பிரதேசத்திலே இஸ்ரேல் தேசம் உருவாகிய பின்னர் - இந்த அறுபது ஆண்டு காலத்திலே - மிக மோசமான இரத்தக் காட்டாறு ஓடிய நாட்களாக கடந்த ஓரிரு தினங்கள் அமைந்திருக்கின்றன. நேற்று முன்தினம் மாத்திரம் நூற்றுக்கு மேற்பட்ட பறப்புகளை மேற்கொண்டு, காஸா முனை மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மாரி பொழிந்ததில் குறைந்தபட்சம் முந்நூறு பேர் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் அங்கங்கள், அவயவங்களை இழந்து படுகாயமடைந்திருக்கின்றனர்.

இஸ்லாமிய ஹமாஸ் இயக்கப் போராளிகள் நடத்திய றொக்கட் தாக்குதல்களுக்குப் பதிலடி என்ற பெயரில் ஸியோனிய வாதிகளின் பயங்கரவாதம் மூர்க்கமாகக் கட்டவிழ்கிறது. அதைப் பார்த்து வாளாவிருக்கின்றது சர்வதேச சமூகம்.

விடுதலை தேடும் நீதி,நியாயத்தோடு, தேசியங்கள் நடத்தும் போராட்டங்களைப் ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தி ஒதுக்கும் சர்வதேசம், யுத்தம் என்ற பெயரில் இஸ்ரேல் புரியும் எல்லை கடந்த பயங்கரவாதத்தைக் கண்டிக்கவோ, தடுக்கவோ செய்யாமல் பார்த்திருப்பது வேதனைக்குரியது; கண்டனத்துக்குரியது.

தன்னுடைய தேசத்தில் இனவாதம், மதவாதம் பேசி அதன் மூலம் செல்வாக்கையும் வாக்குப் பலத்தையும் தக்கவைத்துப் பெருக்கிக் கொள்ள முயலும் அரசியல் தலைமைகள், தமது நாட்டின் பெரும்பான்மைத் தேசியத்திடம் சிக்கி அல்லலுறும் சிறுபான்மைத் தேசியங்களை மேலும் மேலும் வருத்தி, நலிவுறச் செய்து, மண்டியிட வைப்பதன் மூலம் தம்முடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயல்கின்றன.

இலங்கையில் ஈழத் தமிழரையும், தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்தும் அவர்களது மன அவாவையும் கருவோடு நசுக்குவதன் மூலம் பௌத்த - சிங்களப் பேரினவாதிகளிடம் ‘நல்ல பிள்ளை’ பட்டம் வாங்கி, அதன் மூலம் தமது அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் அரசியல் தலைமைகள், இங்கு அதற்காகப் பேரினவாதத்தை அரவணைத்து நிற்கின்றன. அதன் விளைவாகத் தமிழர் தேசம் மீது கொடூர யுத்தம் ஒன்று இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

பாலஸ்தீனத்தின் காஸா நிலப்பரப்பு மீது இஸ்ரேல் இன்று தொடுத்திருக்கும் கொடூர யுத்தமும் கூட இத்தகைய பின்னணியைக் கொண்டதுதான்.

இஸ்ரேலில் அடுத்த பொதுத்தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்கு இன்னும் ஆறு வாரங்கள் கூட இல்லை.

இடதுசாரிப் போக்குடைய எதிர்க்கட்சியான லிக்கியூட் கட்சி இத் தேர்தலில் வெற்றிபெறும் எனத் தற்போதைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அது, ஆளும் தரப்பின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றது.

எப்படியும் இஸ்ரேலிய மக்களைத் தம்பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் ஆளும் தரப்பு அதற்கான கடைசி எத்தனமாக பாலஸ்தீனம் மீதான கொடூரத் தாக்குதல் என்ற காய் நகர்த்தலை முன்னெடுக்கின்றது.

இஸ்ரேலைக் காப்பதற்காக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெகுண்டு எழும் தலைமை என்று தன்னைக் காட்டுவதன் மூலம் ஆட்சியை அடுத்த தடவைக்கும் தக்கவைக்க முடியாதா என்ற நப்பாசை இஸ்ரேலின் பிரதமர் எகுட் ஒல்மேர்ட் தலைமையிலான அரசுக்கு. அதன் விளைவே இவ்வாறு பல நூறு பேர்களைத் தினசரி கொன்றொழிக்கும் கொடூர வான் வழித்தாக்குதல்களாக வடிவமெடுத்திருக்கின்றன.

இங்கும் இதேபோன்று தமிழர் தாயகத்தின் மீது - குறிப்பாக கிளிநொச்சி உட்பட்ட வன்னி மண் மீது - கொழும்பு தொடுத்திருக்கும் கோரத் தாக்குதல்களை சர்வதேச சமூகம் கண்டும் காணாமலும் இருப்பது போல -

அங்கும், காஸா மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் வன்முறைப் புயலின் பேரழிவு விளைவுகளை சர்வதேசம் கண்டும் வாளாவிருக்கின்றது.

காஸா நெடுந்துண்டப் பிரதேசம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்தும் குண்டு மழைக்குப் பயந்து, உயிரைக் காப்பாற்றித் தப்புவதற்காக எகிப்து எல்லையை நோக்கி ஓடும் பாலஸ்தீன மக்களை எகிப்துப் படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைக்கின்றன.

ஈழத் தமிழ் மக்கள் பௌத்த - சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பால் அல்லலுறுகின்றனர் என்றால், பாலஸ்தீன மக்கள் ஸியோனியவாதிகளின் ஆக்கிரமிப்பினால் அவலப்படுகின்றனர்.

தேசக் கட்டுமானங்கள் என்ற முகமூடித்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் அரச பயங்கரவாதங்களை அடையாளம் கண்டு, அடக்கி ஒடுக்கும் முயற்சியில் சர்வதேசம் முழு மூச்சுடன் இறங்கினாலன்றி இத்தகைய பிரச்சினைகளுக்கு நியாயத்தீர்வு கிட்டுவது அபூர்வமாகும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.