Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாள் குறிக்கும் அறிவிப்புகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாள் குறிக்கும் அறிவிப்புகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது

[31 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:45 மு.ப இலங்கை]

கடந்த 2007 நவம்பரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்டாடுவதுதான் அவரது கடைசிப் பிறந்த நாள் என்றும், அடுத்த பிறந்த நாள் கொண்டாட அவரை விட்டு வைக்க மாட்டோம் என்றும் 2007 நவம்பரில் சூளுரைத்திருந்தார் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகம் செல்வாக்கு உடையவராகத் திகழுபவருமான கோத்த பாய ராஜபக்ஷ. ஆனால், கடந்த நவம்பரில் பிரபாகரனின் அடுத்த பிறந்த நாளும் தாண்டிப் போய்விட்டது.

பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியுமா என்பது வேறு விடயம். அதற்கும் இப்போது காலக்கெடு விதித்திருக்கிறார் இலங்கையின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.

அடுத்த நாற்பது நாள்களுக்குள் கிளிநொச்சியை யும் கைப்பற்றி, பிரபாகரனையும் பிடித்து விடுவர் அர சுப் படையினர் என்று நாள் குறித்திருக்கின்றார் அவர்.

நாற்பது நாள்கள் என்பது அப்படி ஒன்றும் நீண்ட காலம் அல்ல. ஒன்றரை மாதத்திலும் குறைவானதே.

ஜோதிடர் நாள் குறித்தமை போல, எதிர்வரும் மத்திய மாகாண மற்றும் வடமேல் (வயம்ப) மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புக்கு முன்பாக இவை இரண்டும் ஒப்பேறிவிடும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் பாதுகாப்புப் பேச்சாளர்.

ஆனால் நாள்குறிக்கும் அவரது பேச்சுப் பற்றிய செய்தி பத்திரிகையில் அச்சாகி அந்த மை காய்வதற்கு இடையிலேயே கிளிநொச்சியைப் பிடிப்போம் என்ற அவரது சூளுரை தடுமாறத் தொடங்கிவிட்டது போலும்.

ஏனென்றால், இதுவரை வன்னியில் கிளிநொச்சியை வல்வளைப்புக்குள் கொண்டுவந்து, அதைக் கைப் பற்றுவதற்கு திடசங்கற்பம் கொண்டிருந்த அரசுப் படைகளின் கவனம் இப்போது முல்லைத்தீவுப் பக்கம் முழுமையாகத் திரும்பிவிட்டது என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுதான் யதார்த்தக் கள நிலைமை என்றால் கிளிநொச்சியை அடுத்த நாற்பது நாள்களுக்குள் அரசுப் படைகள் கைப்பற்றும் என்ற ரம்புக்வெல வின் அறிவிப்பு ‘புஸ்வாணமாகி’விடும் என்பது இப்போதே தெளிவு.

விடுதலைப் புலிகளை அழிக்கவும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வேரடி மண்ணோடு நசுக்கிச் சாய்க்கவும் இப்படி நாள் குறித்த பல சிங் களத் தலைவர்களை இலங்கைத் தீவு கடந்த முப்பது ஆண்டுகளில் கண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ஜெயவர்த்தனா - லலித் அத்துலத் முதலி ஜோடி, ஜனாதிபதி பிரேமதாஸா - ரஞ்சன் விஜேரத்னா ஜோடி, ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க - ஜெனரல் ரதவத்தை ஜோடி என்ற தொடரில் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜோடி என்ற தரப்பு யுத்தக் களம் என்ற கிரிக்கெட்டில் வாய் வீச்சுத் துடுப்பாட் டத்தையும் சேர்த்து நடத்துகின்றது. அதன் வெளிப்பாடாகவே இந்தக் காலக்கெடுப்பு விதிப்பு அறிவிப் புகள் வெளிவருகின்றன.

அறுபது ஆண்டுகளாக முழு இலங்கைத் தீவையுமே பற்றிப் பீடித்து உலுப்பி வரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு - சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமும், நீதியும் வழங்கும் விதத்தினாலான - தீர்வு ஒன்றை வைப்பதற்கோ அல்லது அப்படி வைப்பதற்கான காலக்கெடுவை அறிவிப் பதற்கோ வக்கற்ற இந்த அரசு, புலிகளின் தலைவரை அழிப்பதற்கும் அவர்களின் கையில் இருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களைக் கைப்பற்றி, ஆக்கிரமித்து, மீண்டும் தமது கைகளுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுக்கும் மட்டும் காலக்கெடு விதித்து நாள் குறித்து அறிவிப்புகளை விடுக்கின்றது.

மிக சொற்ப எண்ணிக்கையினரான - சிறுபான்மை யினரான - ஈழத் தமிழர்களின் ஆயுத பலத்தைச் சித றடிப்பதன் மூலம், அவர்களின் பேரம் பேசும் வலுவை இல்லாமலாக்கிவிட்டு, தாம் போடும் ‘பிச்சைத் தீர்வை’ ஏற்று அடங்கிப் போவதைத் தவிர ஈழத் தமி ழர்களுக்கு வேறு மார்க்கம் ஏதும் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இன்றைய பௌத்த - சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சித் தலைமையின் ஒரே நோக்கமும், போக்குமாகும்.

அதன் காரணமாகவே இதோ பிரபாகரனைப் பிடிக்கிறோம், அதோ கிளிநொச்சியைப் பிடித்து விட்டோம் என்ற மாதிரியான - கற்பனை அறிவிப்பு களில் - மாயையில் - மூழ்கிக் கிடக்கின்றது கொழும்பு அரசு.

புலிகளை அல்லது பிரபாகரனை அழித்தால் இலங்கை இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற மாதிரியான கருத்துக்களை விழுங்கிக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் காய்களை நகர்த்தும் அரசுத் தரப்பின் போக்கு அபத்தத்துக்குரியது; எள்ளி நகையாடத்தக்கது.

இதனால் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிடப் போவதில்லை.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.