Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி.

Featured Replies

அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி.

[ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ]

விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்கு காடுகளுக்குள் முடக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பின்னர் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை வரலாறு.

தற்போது கூட அரச படைகளால் விடுதலைப்புலிகளை காடுகளுக்குள் முடக்க முடியும். ஆனால் அதன் பின் ஏற்படப் போகும் மாபெரும் ஆபத்தை இவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்போவதாக கூறுகின்றார்கள். ஏற்கனவே தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்ட துரோக கும்பல் ஒன்றிடம் கிழக்கு மாகாணத்தை இந்த அரசு ஒப்படைத்து தனது தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.

ஆனந்தசங்கரி, சந்திரகாந்தன் போன்ற தமிழின துரோகிகளைப் பற்றி இங்கு புகழ்ந்து பேசுகின்றனர். இவர்களைப் பார்த்து தமிழ் மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

இங்கு அமர்ந்திருக்கம் தமிழ் மக்களின் அவமானச்சின்னம் கருணாவை தாம் தான் பிரித்தெடுத்ததாக ஐ.தே.க. உரிமை கொண்டாடுகின்றது. ஜே.வி.பி.சர்வகட்சி மாநாட்டை கலையுங்கள்; இனி அரசியல் தீர்வு தேவையில்லையென்கிறது.

விடுதலைப்புலிகளை அடியோடு அழிக்க வேண்டுமென்ற உங்கள் வெறி ஒருபோதும் நிறைவேறாது. இந்த வருடமென்ன எத்தனை வருடங்கள் சென்றாலும் விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது.

போர் வெறிபிடித்த இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை பலி கொடுக்கிறது. வன்னியில் மக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அரசின் கோயபல்ஸான தாடி வைத்த அந்த அமைச்சர் அப்படி எதுவும் நடக்கவில்லையென்கிறார்.

இந்திய நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் என்பவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றை கொடுத்திருந்தார்.

ராம் என்பவர் யார்? அவர் இலங்கை அரசின் அந்தப்புரம் வரை சென்ற பல விடயங்கள் உள்ளன. அது தொடர்பில் இன்னொரு நாள் விரிவாக பேசுகின்றேன். இந்த அந்தப்புர நாயகன் ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டியில் கிளிநொச்சியில் பொதுமக்களுக்கு எந்தவித சிறு சேதம்கூட ஏற்படுத்தவில்லையெனக் கூறுகின்றார். அவ்வாறானால் வன்னியில் கொல்லப்படும் மக்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? காயப்படுபவர்கள் மனிதர்கள் இல்லையா?

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற மனிதப்படுகொலைகளை செய்கின்ற இந்த அரசும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் ஒருநாள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் சூழ் நிலை ஏற்படும்.

யுத்தவெறியை இந்த நாட்டில் ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் பதவி வெறி பிடித்து அலைகின்றனர். தமிழ் சிங்கள மக்களிடையே எந்தவித குரோதமும் இல்லை.

அரசுக்கு வால்பிடிக்கும் மானம், வெட்கம் கெட்ட சில மலையக அரசியல் தலைவர்கள், வடக்கிலிருந்து வந்துள்ள ராஜா அவர் எந்தக் கட்சி ஆட்சி பீடமேறினாலும் அமைச்சராகும் தகுதிபெற்றவர். அந்தளவுக்கு தமிழருக்கு துரோகம் செய்பவர் ஆகியோர் அரசுக்கு பந்தம் பிடித்து வருகின்றனர்.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். கிளிநொச்சியை பிடித்து விட்டீர்கள். அத்துடன் இந்தப் போரை நிறுத்துங்கள். போரை நிறுத்த புலிகள் தயாராயுள்ளனர். என்றார்.

thanks

tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.