Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமருக்குக் கருப்புக் கொடி பழ.நெடுமாற்ன உள்ளிட்ட 500 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது

on 08-01-2009 04:08

Published in : செய்திகள், தமிழகம்

சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார்.

adhikaalai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்டிய 2000 பேர் கைது

திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்]

தமிழகம் வந்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக்கொடி காட்டிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 2000 பேர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலைக்கு ஆதரவாகச் செயற்படும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இன்று நடந்த போராட்டத்தில் பழ.நெடுமாறன் அவர்களுடன் தியாகு, கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கதி

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா.

ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்துமாறு தமிழக முதல்வர், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, தமிழக சட்டமன்றம், பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இயக்கங்களும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்து வருகிறார். இலங்கைக்கு செல்லப் போவதாக அறிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கான வேலைகளில் சிறிதும் ஈடுபடவில்லை. ஈழத்தமிழர்களை முற்றாக சிங்கள அரசு அழித்து விட்ட பிறகுதான் அவரது பயணத்திற்கு நாள் குறிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து தற்பொழுது ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை சிறையில் சந்தித்து ஆலோசனை செய்து விட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற்ன, சிறைவாசலில் சென்னை வரும் இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனிடையே பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போராட்டத்திற்கு அனுமதி மறுத்துத் தடை விதிக்கப்பட்டது. இச்சூழலில் தடையை மீறி இன்று(8-1-2008) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மெற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வார்ப்பட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தேனிசை செல்லப்பா, திரைப்பட இயக்குனர் புகழேந்தி உட்பட பல தலைவர்களும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் கருப்பு உடையுடனும் கருப்புக் கொடிகளுடன் திரளாக கலந்து கொண்டனர். இந்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மன்மொகன் சிங்கை திரும்பிப் போ என வலியுறுத்தியம் முழக்கங்கள் எழுப்பபட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறமுள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

-தமிழ்செய்தி நிருபர்,தமிழகம்

http://www.tamilseythi.com/tamilnaadu/chen...2009-01-08.html

ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட மத்திய அரசை கண்டித்து, சென்னை வந்துள்ள மன்மோகன் சிங்கை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட முயற்சித்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 700 பேர் கைது.

கைதான தோழர்களை சென்னை சைதாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து இருந்தார்கள்.

அங்கு எடுத்தபடங்கள்.

http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2009-01-08.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.