Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேடம் இழுக்கும் ஊடக சுதந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேடம் இழுக்கும் ஊடக சுதந்திரம்

[12 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:40 மு.ப இலங்கை]

இலங்கையில் ஊடக சுதந்திரம் உயிர் பிரியும் நோயாளி போல மூச்சிழந்து அல்லாடிக் கிடக்கின்றது.

2009 ஆம் ஆண்டு பிறப்புடன் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது.

முதலில் மகாராஜா குழுமத்தைச் சேர்ந்த எம்.ரி.வி., எம்.பி.ஸி. போன்றவற்றின் அலுவலகத்துக்குப் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அது குறித்துப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில் அதன் கலையகம் மீது அராஜகக் கும்பல் ஒன்றினால் வெறியாட்டம் நடத்தப்பட்டது.

அது நடந்து இரண்டு நாட்களுக்குள் இலங்கையில் பிரசித்தி பெற்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் - நட்ட நடு வீதியில் வைத்து - சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இத்தாக்குதல்கள் குறித்து வெளிவரும் செய்திகளின்படி, எம்.ரி.வி. கலையகம் மீதான தாக்குதலில் சுமார் இருபது பேர் கொண்ட குழு இயந்திரத் துப்பாக்கிகள், கிரனேட்டுகள், கிளைமோர்க் குண்டுகளுடன் பங்குபற்றியுள்ளது. ‘த சண்டே லீடர்’ ஆசிரியர் படுகொலைச் சம்பவத்தில் அவரது நடமாட்டங்களை வேவு பார்த்தல், அவரது வாகனத்தை வழிமறித்துத் தாக்கியமை போன்றவற்றுடன் ஐந்து பேருக்கும் குறையாத அணி ஒன்று இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் ஈடுபட்டிருக்கின்றது.

இச்சம்பவங்களை அடுத்து, ஆங்கில வார இதழ் ஒன்றில் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய விடயங்களை எழுதும் முன்னணி இராணுவ விமர்சகர் ஒருவர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தமது வாராந்த ஆய்வை எழுதுவதை நிறுத்திவிட்டார்.‘த சண்டே லீடர்’ ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவை இலக்கு வைப்பதற்கு முன்னரே இவரது உயிருக்கும் உலை வைக்க முயற்சி எடுக்கப்பட்டதாகவும், அதிலிருந்து தெய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்த அவர், அக்காரணத்தினால் தமது பேனாவுக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றார் என்றும் அறிய முடிகின்றது. முதலில் அவரது உயிருக்கு உலை வைக்க முயற்சி எடுத்தவர்கள், பின்னர் தொலைபேசி மூலம் அவரை மிரட்டியிருக்கின்றனர் என அவர் தமது நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினார் எனவும் அறியவந்தது.

இதேவேளை, தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை ஒட்டிய விடயங்களை - உள்வீட்டுத் தகவல்களை - கொழும்பிலிருந்தபடி வெளியிட்டு வந்த ‘லங்கா டிஸெண்ட்’ என்ற இணையத்தள ஊடகமும் ‘த சண்டே லீடர்’ ஆசிரியரின் படுகொலையுடன் மௌனித்து விட்டது.

மறுபுறத்தில், புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடை என்ற பெயரில் அவசரகாலச் சட்ட ஒழுங்குப் பிரமாணங்களின் கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளும் ஊடக சுதந்திரத்துக்கு ஆப்பு வைத்திருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் - புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் - சுமார் நான்கு லட்சம் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இந்தப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்துப் பெரும் எடுப்பிலான தனது இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் தீவிரமாக ஆரம்பித்திருக்கின்றன.

இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த மக்கள் பேரவலத்தில் மட்டுமல்லாமல் பேராபத்திலும் சிக்குண்டுள்ளனர். அங்கு ஷெல், பீரங்கி, துப்பாக்கிச் சூடு மற்றும் வான் குண்டு வீச்சில் காயமடையும் அல்லது உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதும் கண்கூடு.

இந்தச் சமயத்தில்தான் இம்மக்களின் உண்மை நிலைவரத்தை வெளிக்கொணர வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் ஊடகங்கள் மீது - குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் மீது - அதிகமாகச் சுமத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், அக்கடமையை அவை நிறைவேற்ற முயன்றால், புலித்தடையை ஒட்டிய அவசரகாலச் சட்ட விதிகள் அவர்கள் மீது பாயும் ஆபத்து நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ‘புலி ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு இருபது ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை விதிக்கப்படக்கூடிய ஆபத்து ஏதுநிலையும் உண்டு.

ஆகவே, தமிழ் ஊடகங்களும் இன்று பகுதியாக மௌனிக்கும் கட்டாயத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றன.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் கணிப்பீட்டின்படி, 2002 இல் சர்வதேச மட்டத்தில் 51 ஆவது இடத்தில் இருந்த இலங்கையின் ஊடக சுதந்திர சுட்டி, மெல்லக் கீழிறங்கி 2005 இல் 115 ஐ அடைந்து, மேலும் நலிவுற்று, கடந்த ஆண்டில் 165 ஆவது இடத்தை அடைந்திருக்கின்றது. உலக நாடுகளின் தரவரிசையில் கடைசி 7 இடங்களுக்குள்தான் இலங்கையின் ஊடக சுதந்திரம் வீழ்ந்து கிடக்கின்றது.

ஆனால், ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் புகுந்து நடத்திய வெறியாட்டத்தில் இருந்து கடந்த வியாழனன்று ‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் கொல்லப்பட்டமை வரையான தாக்குதல்கள் அனைத்தும் இராணுவத்தினரின் வெற்றியைத் திசைதிருப்புவதற்காக சில சக்திகள் மேற்கொண்ட சதி என்று வெகு ‘ஸிம்பிளாக’ கூறிவிட்டார் நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

அந்த சதிகாரர்களை வெளிப்படையாக அவர் அம்பலப்படுத்தாதவரை இவ்விடயங்களுக்கான தொப்பி அரசின் தலைமீதுதான். அதை மறைக்க முடியாது என்பதை ஜனாதிபதி உணர்ந்துகொண்டால் சரி.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.