Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் 120 இலங்கை பக்தர்கள் தவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த 120 பக்தர்கள், நாடு திரும்ப வேண்டிய விமானத்தை தவற விட்டதால், கொழும்பு செல்ல முடியாமல் சென்னையில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .

யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு இருமுடி கட்டி கேரளாவுக்கு சென்றனர். குருசாமி ரவிசாமி என்பவரின் தலைமையில் இந்தத் தமிழ் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டனர்.

ஐயப்ப தரிசனத்தை சிறப்பாக முடித்து விட்டு கடந்த 18ம் தேதி காலை பத்தரை மணி விமானத்தில் கொழும்பு திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.

திட்டமிட்டபடி 17ம் தேதி திருச்சி வந்த அவர்கள் அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்தனர். ஆனால் அன்றைய தினம் விழுப்புரம் பகுதியில், திருமாவளவன் உண்ணாவிரதத்தின் எதிரொலியாக, பெரும் வன்முறை நடந்தது. பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கை பக்தர்கள் வந்த பஸ் தொடர்ந்து செல்ல முடியவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு விழுப்புரத்துடன் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அவர்களால் சென்னைக்கு வர முடியவில்லை. விமானம் போய் விட்டது.

நேற்று மாலைதான் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

விமானத்தைத் தவற விட்டு விட்டதால் நாடு திரும்ப முடியாமல், விமான நிலையத்திலேயே அனைவரும் தங்கியுள்ளனர். சாப்பிடக் கூட வழியில்லாத அவல நிலையில் 120 தமிழர்களும் உள்ளனர். இதுவரை யாரும் இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லையாம்.

தங்களது நிலை குறித்து ரவிசாமி கூறுகையில், திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததால், எங்கள் பஸ்சை விழுப்புரம் மேம்பாலம் அருகே நள்ளிரவு 2 மணியளவில் நிறுத்தி விட்டனர்.

18-ந் தேதி காலை 10.30 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய நாங்கள் அங்கேயே இருந்தோம். உடனே இது பற்றி விமான நிறுவனங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்து விட்டோம்.

பின்னர் போராட்டம் முடிந்து விட்டதாக கூறி எங்களை அனுப்பினார்கள். நாங்கள் மாலை 5 மணிக்கு தான் வந்து சேர்ந்தோம். எங்களை விமான நிலையத்திற்குள் செல்லக் கூட அனுமதிக்கவில்லை. இது பற்றி இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

ஏர் லங்கா விமான நிறுவன அதிகாரிகளிடம் கூறியும் பலன் இல்லை. எங்களில் 7 பேரை மட்டும் அனுப்பினார்கள். 6 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து இருந்தனர். ஆனால் தற்போது எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் உணவு மற்றும் ஆதரவின்றி தவிக்கிறோம்.

30-ந் தேதி வரை டிக்கெட் இல்லை என்பதால், அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எங்கள் யாரிடமும் பணம் இல்லை. குளிக்க, கழிப்பறை செல்லக் கூட இங்கு பணம் கேட்கிறார்கள்.

எங்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது. குழந்தைகள், வயதான பெண்கள் சிரமப்படுகின்றனர் என்று கூறினார்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து விமானமேறி சபரிமலைக்கு போகும் தகுதிஉடைய பக்தர்களுக்கு ஒரு நாள் சாப்பி;ட (சென்னை விமானநிலையத்தில); வக்கில்லையாம். புதுவிதமான பக்த அடியார்களாக இருக்கின்றனர் இவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.