Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட இணைப்பு:- 5 தினங்களில் மட்டும் படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 79 சிவிலியன்கள் பலி

Featured Replies

http://www.globaltamilnews.net/tamil_news....=5070&cat=1

விசேட இணைப்பு:-5 தினங்களில் மட்டும் படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 79 சிவிலியன்கள் பலி - 273 பேர் காயம்

வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - இலங்கைப் படையினர் இன்றும் பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 87 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் இலங்கை அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயங்கள்' எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (24-01-09) பிற்பகல் 4 மணியளவில் உடையார்கட்டு சந்திப் பாடசாலையில் இயங்கும் கிளிநொச்சி மருத்துவமனையின் சிகிச்சை நிலையம் மீது இலங்கைப் படையினர் கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களும், ஏற்கெனவே இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்த பொதுமக்களும் இந்த எறிகணைகளுக்கு இலக்காகினர்.

இந்தப் பிரதேசத்தை நோக்கி இலங்கை படையினர் ஏவிய

60-க்கும் அதிகமான எறிகணைகள் நகரையும் நகரை அண்மித்த பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்தன.

இன்று மாலை 5 மணிக்குப் பின் உடையார்கட்டு வீதிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வாழ்விடம் மீது இலங்கைப் படையினர் மீண்டும் பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அத்துடன் சுதந்திரபுரம் பகுதி மக்கள் வாழ்விடம் மீதும் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் இடம்பெயர்ந்த 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைநதனர்.

கொல்லப்பட்டவர்களில் 32 வயதுடைய டிமல் டொரினா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - விசுவமடு - தேராவில் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.

24 வயதுடைய இ.இந்திரன் 40 வயதுடைய க.கமலாதேவி 75 வயது மதிக்கத்தக்க இன்னொருவர் இதில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் பொதுமருத்துவமனை இயங்கும் வளாகத்தின் மீது இன்று காலை படையினர் கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

நேற்று முன்நாளும் இதே போன்று இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்த போது அந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்தது.

ஆனால், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் பொது மருத்துவமனையை அதே இடத்தில் இயக்குவதற்கான உறுதிப்பாட்டினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த சூழலில் மருத்துமனையில் படையினரின் தாக்குதல்களினால் படுகாயமடையும் பொதுமக்களுக்கான சிகிச்சை வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது இன்று மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது இலங்கைப் படையினர் இன்று பிற்பகல் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுடன் கடந்த 5 தினங்களில் மட்டும் இலங்கை இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சுமார் 79 சிவிலியன்கள் கொல்லப்பட்டு 273 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாக பிரதேசத்தில் கடமையாற்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சுமார் 30 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் பாதுகாப்பான வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது பெரும் வேதனையளிப்பதாக சிவிலியன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சிவிலியன் நிலைகள் மீது படையினர் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Tamilmagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமாவின் email id கிடைக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.