Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது

Featured Replies

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கடந்த 22ஆம் தேதி முதல் உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கினர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 7வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட மீதமுள்ள 14 மாணவர்களையும் காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர்.

செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கவுதம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது மாணவர்களிடம் உண்ணா நிலையை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு மாணவர்கள், யார் சொன்னாலும் நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

உண்மையான தமிழர்கள்

கருணாநிதி பிறந்த மண்ணில் பிறந்தாலும் எமக்காக உயிரையே கொடுக்கத்துணிந்தவர்கள்

இந்திய மாணவர்களை பொறுத்தவரையில் கல்வி என்பது வெகு கடினமான விடயம். அப்படியிருக்க அவர்கள் தம் பாடசாலையிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார்கள

மாணவர்களது உணர்வுக்காக எமது நன்றிகள்.

சாகும் வரை உண்ணாவிரதம் என்பதை

இந்தியாவில் மாணவர்களும் ஏனையோரும் தவிர்க்க வேண்டும்.

காந்தி

உண்ணாவிரதம் இருந்த போது

ஆண்டது வெள்ளையன்.

தனது ஆட்சியில் அகிம்சை வழி ஒரு உயிர் போனாலும்

அது அவனது சாம்ராஜ்யத்துக்கே இழுக்கு .

இன்று ஆட்சியிலிருப்போருக்கு

எந்த உயிர் போனாலும் அது ???? சமன்.

அப்பாவி மக்கள் செத்தாலும் பரவாயில்லை

நம் தேவை நிறைவேற வேண்டும் எனும் நிலையில்

இந்திய ஆட்சியாளர்கள் செயல்படுவது வேதனை?

புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்று செய்து கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த முகர்ஜி பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்தியாவின் கரிசணை அப்பாவிப் பொதுமக்கள் குறித்தேயாகும் என்றும் அவர்களது நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே விடுவதாகவும் தெரிவித்தார்.

http://www.ajeevan.ch/content/view/8409/1/

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.