Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழ் மண்ணில் அமைதி வேண்டி பட்டத்தை வாங்க மறுத்த தேனி மாணவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார்.ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை.

தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் படுகொலையை கண்டித்து கடந்த 30.01.2009 அன்று தூத்துக்குடி கொள்கை நல்லூரைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமரன் சென்னை சாஸ்திரிபவன் அருகே உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் படுகொலைக்காக மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான போராட்டங்களை ஈடுபட்டு வரும் வேளையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி என்பவரது மகன் ஜான்பால்பூபதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து அதற்காக நேற்று நெல்லை பாளை சேவியர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் சபாபதி மோகனிடம் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தான்படித்த பட்டத்தை வாங்க மறுத்தார்.

இதுகுறித்து துணைவேந்தர் சபாபதி மோகன் மாணவர் ஜான்பால்பூபதியிடம் எதனால் பட்டத்தை வாங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தினந்தோறும் மாண்டுவருகிறார்கள். அதனால் பட்டம் பெற விருப்பமில்லை என்று தெரிவித்தார். இலங்கையில் இரண்டு அரசுகளின் சார்பில் சமாதானம் ஏற்பட்டபின் பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பட்டம் வாங்க மறுத்த ஜான்பால்பூபதி தனது தந்தை கூலி வேலை செய்து என்னைக் கஷ்டபட்டு படிக்க வைத்து எனது குடும்பத்தில் முதல் பட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது, என்று என்று கூறியது மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய தமிழ் உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

http://www.isaiminnel.com/news/?p=176#more-176

  • கருத்துக்கள உறவுகள்

பட்டத்தை பெற்று எமது மக்களூக்கு ஆவன செய்வதற்கு ஏன் இப்படி இம் மாணவன் சிந்திக்கிறாரோ தெரியவில்லை.? என்றாலும் அவரது தமிழ் உணர்வை மதிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.