Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் அடிமையாக்கப்பட்ட கரிநாளில் என்ன செய்யப் போகின்றோம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அடிமையாக்கப்பட்ட கரிநாளில் என்ன செய்யப் போகின்றோம் ?

---------------------------------------------------------------------------------------------------------------------------

மனித வாழ்வியக்கத்தின் பதிவே வரலாறாகின்றது. அந்த வரலாற்றில் வரும் இன்னல்கள், நெருக்கடிகள், அழிவுகளை எதிர்கொண்டவாறு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் மனித இனமே உலகில் வாழும் உரிமையை மட்டுமன்றித் தகமையையும் பெற்றுக்கொள்கின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகள் வியட்நாம் முதல் கொசொவோ வரை பல உள்ளன.

1948 ம் ஆண்டு பிரித்தானியக் குடியேற்றவாதமானது வெளியேறும் போது இலங்கைத் தீவினது ஆட்சி உரிமையானது சிங்களவரிடம் கையளிக்கப்படதன் விளைவே தமிழினத்தின் இன்றைய அவலத்துக்கான காரணியென்பது உலகறிந்த உண்மை. இதிலே அன்று தொலைநோக்கற்ற தமிழ்த் தலைவர்களது அணுகுமுறையும் ஒரு காரணியாகும். இந்த வாதப் பிரதிவாதங்களின் நகர்வுத் தளத்திலே தமிழினத்தினது அரசியல் உரிமைகளை மென்முறை தழுவிய போராட்டங்கள் மூலம் பெற்று விடலாம் என்று முயன்று முடிவிலே அழிவுகளையும் அவமதிப்புகளையும் ஏமாற்றங்களையுமே தமிழினத்தால் தரிசிக்க முடிந்ததேயன்றி வேறேதுமில்லை. பின்வந்த காலப்பகுதியிலே இளையோரிடையே ஏற்பட்ட எழுச்சியானது ஆயுதப் போராட்ட வழியொன்றே தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கூடியது என்ற அசைக்க முடியாத கருத்தியல் தாக்கத்தின் விளைவாக பல்வேறு இளையோரியக்கங்கள் தோற்றம் பெற்று உலாவந்ததோடு, காலாவதியுற்ற தெளிவற்ற கொள்கைகள் கோட்பாடுகள், திட்டமிடப்படாத மனிதவலுச் சேர்க்கை, கட்டுப்படுத்த முடியாத தலைமைகள், பதவிப் போட்டிகள், காட்டிக் கொடுப்புகள், விலைபோதல், கழுத்தறுப்பு, என்று முடிவற்றுத் தொடரும் சூறாவளிக்குள் சுழன்றவாறு தமிழீழ விடுதலைப் போராட்டமானது உரியதோர் பரிணாமத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலே உலக அரங்கிலே நிறுவப்படுள்ளமையை இன்றைய காலகட்டத்திலே நாம் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழ விடுதலை என்பது, தமிழினத்தினது வாழ்வாதாரத்திற்கான தாயகத்தை நிறுவித் தமிழினம் கௌரவமாக இந்த உலகிலே ஏனைய இனங்களைப்போல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்பதில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் இடம்கொடாது அர்ப்பணிப்போடு போராடிவரும்; கூர்முனையான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவலுவை மழுங்கடித்து தமிழரின் சமபலத்தைச் சிதைப்பதனூடாகப் புலிகள் தோற்றுவிட்டார்கள், எனவே இனித் தமிழர்கள் யாவரும் சிங்களத்துக்குள் ஐக்கியமாகிக் கரைந்து போகவேண்டியவர்களே என்ற ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைத் திணிப்பதன் மூலம் தமிழர் தாயகம் என்ற கருத்தியலை நீர்த்துப் போகச் செய்வதூடாக தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான குரலை அடக்கிவிடவே சிறீலங்கா அரசானது யுத்தத்தை தமிழினம் மீது கட்டவிழ்த்துவிட்டுப் பெரும் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டமானது, தமிழர்களின் பலத்தின் விளைவாகவே உலக அரங்கிலே பிரவேசித்ததென்பதை வரலாற்றையும், எமது வாழ்வோடு இணைந்துவிட்ட சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் அப்பழுக்கின்றிப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்வர். புரியாததுபோல் நடிக்கும் எம்மவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் புரிகின்ற காலமொன்று வரும். அது வேறு விடயம்.

சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் வெறுமனே உலக மன்றிலே உயிரற்றுச் சடலமாகக் கிடக்கிறது. மனிதஉரிமை, சிறுவர் பாதுகாப்பு, சனநாயக உரிமை என்று கூப்பாடு போடும் இவ்வுலகு, தமிழர் தாயத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அரச பயங்கரவாதத்தை, மிகப் பெரும் மனித அவலத்தை, வேடிக்கை பார்த்தவாறு கையாலாகதவர்களாய் நிற்கும் உலகை என்னவென்று சொல்வது. மனிதர்களைச் சமமாக நடத்த வேண்டும். இனம், மொழி, நிறம், மதம், பால் வேறுபாடுகளுக்கப்பால், மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. இவற்றை வெறுமனே எழுத்துகளில் இலங்கைத் தீவில் இருந்தால் போதுமென்று அனைத்துலகு எண்ணுகின்றதோ என்ற எண்ணமே உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தோற்றம் கண்டுள்ளது.

இதன் விளைவாக உலகத் தமிழினமானது, இந்த அனைத்துலக சமூகமும் தமிழினம் அழிந்துபோக வேண்டுமென எண்ணுகின்றதா(?) அல்லது தமிழினம் அடிமைகளாக வாழ்ந்து மடியட்டும் என வேடிக்கை பார்க்கிறதா (?) என்பது புரியாமல் உலகத் தமிழினம் தினம்தோறும் தவிதவித்துச் சாகிறது. இன்றைய இந்தத் நிலையைத் தமிழினத்துக்கு விட்டுச் சென்ற மிகப்பெரும் சனநாயகச் சட்டம்பியாரான பிரித்தானியா கூடத் தமிழின அழிப்புக்கான உதவி ஒத்தாசை வழங்குவது வேதனைக்குரியது. சதாம் செய்தது இனப்படுகொலை. சதாமுக்கு உதவும் நாடுகளும் பயங்கரவாத நாடுகள் என்றனர். அப்படியாயின் இனப்படுகொலை புரியும் சிறீலங்காவுக்கு உதவும் நாடுகள் பற்றித் தமிழர்கள் எப்படி நோக்குவது. எனவே எமக்கான அடிமைச் சாசனத்தை உருவாக்கிய பிரித்தானிய அரசுக்கு மிகப்பெரும் கடப்பாடொன்றுள்ளது. அது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தலே. அங்கீகரிப்பதோடு நில்லாது தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையையும் நீக்க வேண்டும். பிரித்தானியாவில் ஏற்படும் மாற்றமானது உலக அரங்கிலும் தமிழீழ மக்கள் தொடர்பான போக்கிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகின் காத்திரமான மையச் சக்தியாகவும் திகழும் நாடு என்ற வகையில் பிரித்தானியாவை வென்றெடுக்கும் செயற்பாடுகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களின் தொகையை அடிப்படையாகவும் அரசியல் ரீதியாக நாடாளுமன்றம் வரை தமிழர்களின் பிரசன்னம் இருப்பதால் சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளமையைக் களவமைவாகக் கொள்ளலாம்

சிறீலங்கா அரசு 61 வது சுதந்திரநாளைக் கொண்டாடும் அதேவேளை, தமிழினமோ தாம் அடிமை கொள்ளப்பட்ட “ கரிநாள் „ ஆகவே பெப்ரவரி நான்காம் நாளை இதுவரை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

தமிழினமானது இந்த பெப். நான்காம் நாளில் இருந்து எமது தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகச் சில உறுதியான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்.

1) பெப். நான்காம் நாளில் நடைபெறும் தமிழினத்தின் கரிநாளில் சுயதேவைகளை விடுத்து, எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து அன்றைய நாளில் எமது ஒட்டுமொத்த எழுச்சியை அறவழிப் போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தும் எமக்கான கடமையை செய்தல்.

2) அன்றைய இந்நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத சூழலில் பங்குபற்றாதோர் வெளியே செல்லும்போது கறுப்பு நிற உடைகளை அணிந்துகொள்ளுதல். அதற்கான துண்டுப் பிரசுரங்களைப் பெற்று தெரிந்த பிறநாட்டவருக்கு (அது நாங்கள் பொருள் வாங்கும் இடமாகவும் இருக்கலாம்) வழங்கி எமது நிலையை எடுத்துக் கூறல்.

3) நிதியாதாரமென்பது அனைத்து இருப்புக்கும் அடிநாதமாக விளங்குவதால், இந்நாளில் இருந்து தாயகத்தின் விடுதலைக்காக எம்மால் முடித்த அனைத்து வழிகளிலும் பங்களிப்புச் செய்ய முன்வருதல். (குறிப்பாக, இது வரை செய்யாதிருப்போர்)

4) மன்றங்கள், சங்கங்கள், சமயநிறுவனங்கள் மற்றும் இன்னபிற தமிழர் அமைப்புகள் புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல். புதிய கட்டிடம் கட்டுதல், நிலம் வேண்டுதல், விழாவெடுத்தல் போன்ற செயற்பாடுகளை

நிறுத்தித் தமிழினத்தின் முழு வளத்தையும், பலத்தையும் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வலுவாக மாற்றுவதோடு, தமிழினத்தின் சிந்தனை

மையத்தை தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தோடு ஒன்றித்திருக்க உதவுதல்.

5) ஒவ்வொரு நகரத்திலும்; இருப்போர் ஒன்றினைந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டக் குழுக்களாக மாறித் தாம் வாழும் நகரம் முழுமைக்குமாகத் தமிழினத்தின் இன்றைய

நிலையைத் தெளிவுபடுத்துதல்.

6) இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணிப்பதுடன், பொருண்மிய பங்களிப்பை சிறீலங்காவுக்குச் செய்யாது விடுதல்.

7) தமிழால் வாழும் ஊடகங்கள், குறிப்பாகக் காணொளிச் சேவைகளை நடாத்துவோர், மானாட மயிலாட முதல் சின்னத்திரைத் தொடர்களை விடுத்து, தமிழினத்தின் அவலமும்

புலம்பெயர் வாழ் தமிழர்களின் நிலையையும் அவர்களது தாயகச் செயற்பாடுகளையும் வெளிக்கொணர்வதூடகத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப்போரை திரட்சியாக்கும்

நிகழ்வுகளை நடாத்த முன்வருதல். இதனூடாகத் தமிழர்களைத் தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வகை செய்தல். எம்மை நிராகரிப்போரின் அனைத்தையும்

உணவுப்பொருட்கள் உட்பட அனைத்தையும் நிராகரிக்க இது போன்ற நிறுவனங்களேவழிகாட்ட வேண்டியதும் அவர்களது கடமையாகும். எமது நுகர்வுச் சக்திகாரணமாகக்

கணிசமான வருவாயை இலங்கை இந்திய அரசுகள் மற்றும் தமிழ்த் தேசியத்தைமறுதலித்து அழிக்க முனையும் தமிழகக் கட்சிகளும் பெற்று வருகின்றன

8) தமிழீழ தனியரசை அமைக்க நடைபெறும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு நிகராகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் தோறும் “ நகரங்கள் தோறும் எழுவோம் எம் தாயகத்தைக் காப்போம் „ என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்தல். வீடுகளிலே எமது தாயக வரைபடத்தை வெளியே செல்லும் போதும், வரும்போதும் பார்க்கக் கூடியவாறு வைப்பதோடு, தாயகத்தை நாம் விரைவில் அடைவோம் என்பதைச் சிந்தனையாகக் கொள்ளல்.

9) கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அனைத்துத் தமிழர்களும், தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்று உறுதியெடுக்கும் நாளாக இந்த நாளைக் கொள்ள வேண்டியது தன்மாமுள்ள தமிழர்களதும் அனைவரதும் கடமையெனக் கொள்ள வேண்டும்.

10) வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் நிற்கின்றது தமிழினம். இந்த நிலையிலே நீயா ? நானா? என்பதை விட்டொழித்து விட்டு, தமிழ்த் தேசியத்துள் ஐக்கியமாகித் தமிழினம் தலைநிமிர எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மாவீரன் முத்துக்குமார் தன்னைத் தீயாக்கித் தமிழகத்தைப் புடமிட்டுப் பெரும் ஈகத்தைச் செய்துள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் ?

கருத்துக்கள உறவுகளே ! இது தொடர்பான தங்களது கருத்துக்களையும் பதிவு செய்வீர்களென நட்புடன் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

நட்புடன் நொச்சியான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.