Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு: வைகோ

Featured Replies

இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு வற்புறுத்தவில்லை என்றும், தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹிட்லருக்குப்பின் உலகத்தில் எந்த நாட்டு அதிபரும் சொல்லத் துணியாத மிரட்டலை, ரத்தக் காட்டேரியைப் போல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது அறிக்கையில், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழர் களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க மாட்டோம் என்று கூறி உள்ளார்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே அழித்துவிட அவர் திட்டமிட்டுத்தான், இந்த இனக்கொலை ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறார் என்பது வெட்டவெளிச்சம்.

புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனைகளின் மீது 2வது முறையாக விமானக் குண்டு வீச்சு நடந்ததில், நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் குறிப்பாகக் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கோரக் காட்சிகளில் வயது முதிர்ந்தோர் இரண்டு கால்கள், இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதும், அவர்கள் கதறி அழுது கொண்டே தங்கள் பக்கத்தில் இருந்த தங்கள் பிள்ளைகள் உடல்கள் சிதறிப் போனதைச் சொல்லும் போதும், சிறு குழந்தைகளும், இளைஞர்களும் கை கால்கள் துண்டிக்கப்பட்டுக் கிடப்பதையும் காணுகையில், கல்மனம் கொண்டோரும் கண்ணீர் விட்டுக்கதறுவர்.

இலங்கை அரசு ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறிவிட்டார். போர் நிறுத்தம் வேண்டும் என்று ஜெர்மனி அரசு கூறி விட்டது. ஜப்பான் கூறி விட்டது, நார்வே கூறி விட்டது. தென்ஆப்பிரிக்க அரசு அறிக்கையே தந்து விட்டது. ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தன் அறிக்கையில், இலங்கையில் தமிழ்ப் பெண்கள், குழந்தைகளும் கொல்லப்படும் கொடுமையைச் சுட்டிக் காட்டி, போர் நிறுத்தம் உடனடித் தேவை என்று அறிக்கை தந்து உள்ளார்.

தமிழர்கள் குடிமக்களாக இல்லாத இந்த நாடுகளெல்லாம் போர் நிறுத்தம் வேண்டும் எனக் கேட்கையில், ஏழு கோடித் தமிழ் மக்களின் இதயதாகமான வேண்டுகோளை, தமிழ் நாடு சட்டமன்றத்தின் ஒரு மனதான தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, இந்திய அரசு போர் நிறுத்தம் வேண்டும் என்று ஒப்புக்குக்கூட ஏன் கேட்கவில்லை? இதுதான் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி.

இதன் பின்னால், ஒரு பெரிய மர்மம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்திய அரசு போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்டால், இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், போர் நிறுத்தத்தை வற்புறுத்த ஆயத்தமாக உள்ளன.

அப்படி ஒரு போர் நிறுத்தம் இலங்கையில் வந்து விடக்கூடாது. இலங்கை அரசின் ராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு, விடு தலைப்புலிகளை எப்படியாவது அழித்து விட வேண்டும், இந்தப் போரில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இந்திய அரசு எண்ணுகிறது. அதனால்தான் நார்வே வெளி விவகார அமைச்சர் எரிக்கோல்ஹைம், போர் நிறுத்தத்துக்கு இந்திய அரசு முயல வேண்டும் என்று வற்புறுத்துவதற்காக, இந்தியாவுக்கு வர முனைந்த போது, அவர் இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று இந்திய அரசு தடுத்து விட்டது.

இந்திய அரசின் இந்தத் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக, நாளை பொது வேலை நிறுத்தத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

நமது சொந்தச் சகோதரர்கள், சகோதரிகள் துன்பத்தில் சாகிற போது, நம் மனதில் படியும் வேதனையை எண்ணி, நாளை ஒருநாள் வேலைக்குச் செல்ல மாட்டோம், கடைகளைத் திறக்க மாட்டோம், வாகனங்களை ஓட்ட மாட்டோம் என்று நம் துயரத்தை வெளிப் படுத்தவும், இந்திய அரசின் துரோகத்தைக் கண்டிக்கவும், தமிழக மக்கள் முன்வர வேண்டுகிறேன்.

தமிழகம் கொந்தளிக்கிறது என்பதை உணர்த்துவதன் மூலமாவது, இந்திய அரசு துரோகத்தைத் தொடராமல், ஒப்புக்காவது போர் நிறுத்தம் என்று சொல்ல முன் வரட்டும். அதன் பின் உலக நாடுகள் அனைத்தும் தரும் அழுத்தத்தால், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படட்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசே துரோகம் செய்யும் போது , மத்திய அரசை குறை சொல்லி என்ன பலன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.