Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையை நிறுத்தக்கோரி ஒன்ராறியோவில் பிரச்சாரப்பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CanadianHart (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) அமைப்பு, ஒன்ராறியோவின் 10 நகரங்களுக்கூடாக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும் நிறுத்தக்கோரியும் பிரச்சாரப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தப் பிரச்சாரம், Canadian Federation of Students (CFS) இனதும் Canadian Peace Alliance (CPA) இனதும் ஆதரவுடன்; நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பயணத்தின் நோக்கமானது, கனடியப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை எடுத்துச்சொல்வதாகும்.

CanadianHart அமைப்பு நடாத்தும் பிரச்சாரப்பயணம் பெப்ரவரி 9ம் திகதி ஆரம்பித்து இம்மாத முடிவுவரை தொடரவுள்ளது. இதன் முதலாவது குழு, தனது பிரச்சாரப்பயணத்தை Guelph (பெப்ரவரி 10), Waterloo(பெப்ரவரி 11), London (பெப்ரவரி 12), Windsor (பெப்ரவரி 13) லும் இரண்டாவது குழு தனது பிரச்சாரப்பயணத்தை பெப்ரவரி 23ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

CanadianHart அமைப்பின் மக்கள் தொடர்பாளரும் இப் பிரச்சாரப்பயணத்தை முன்னெடுப்பவரான நிசாந்தன் விஜயராஜா கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஒரு மாத காலமாக கனடிய தமிழ் மக்கள் சிறிலங்காவினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மனிதச்சங்கிலி, பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தல், சமாதானம் வேண்டிப் பிரார்த்தனை, உண்ணாவிரதப் போராட்டம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எதுவாயினும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியாதவாறு சிறிலங்கா அரசு இனப்படுகொலையைத் தொடர்கிறது. இந்த பிரச்சாரப்பயணத்தின் மூலம் கனடிய மக்களைத் தட்டி எழுப்புவதன் மூலமாக சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்த முடியும் என நம்புகிறோம்" என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், "இது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சம்மந்தமான விடயம் அல்ல, மனிதாபிமானம் சம்மந்தமான விடயம். ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமான உணர்வுடன் செயற்பட்டு இந்த இன அழிப்பை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவிலிருந்து ஆரம்பிக்கும் இப்பிரச்சாரப்பயணக் குழு, உள்ளூர் அரசியல்வாதிகளையும் பொதுமக்களையும் சந்தித்து, பிரசுரங்களை விநியோகித்து விளக்கமளிக்கவுள்ளது. Canadian Federation of Students (CFS) மற்றும் பல பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புகளும் இப்பிரச்சாரப்பயண முன்னெடுப்பில் தமது பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த வருட ஆரம்பித்தில், சிறிலங்காவில் 1,022க்கு மேற்பட்ட தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டும் 3,242க்கு மேற்பட்ட தமிழ் பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், 250,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், ரொறன்ரோவின் அரைவாசி அளவை விட குறைவான பிரதேசத்தில் சிறைப்படுத்தப்பட்டு, வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, உணவு, சுகாதாரம், மருத்துவம், எரிபொருள், தங்கும் இடவசதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் நிறுத்தப்பட்டு மனிதவதைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு இந்த மக்களுக்கு உதவி வழங்கும் அனைத்து வழிமுறைகளையும் தடுத்துள்ளது. உள்ளூர் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை தடைசெய்துள்ளது. ஊடகவியலாளர்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள், அடக்கு முறை, இனப்படுகொலை, மனிதவதை, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தும் குண்டுத் தாக்குதல் போன்றவற்றை கனடிய மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் உணர்த்துவதன் மூலம் மட்டுமே எமது மக்களுக்கு விடுதலையும் சமாதானத்தையும் கொண்டுவர முடியும். தினமும் 100க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது நாம் அமைதியாக இருக்கமுடியாது. கனடாவிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கிளர்ந்தெழுந்து தமிழ் இன ஒழிப்பை தடுத்து நிறுத்துவோம். எமது இனத்தின் அழிப்பைத் தடுக்கக்கூடிய, அழியாது காக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து தவறுவோமாயின் எதிர் காலத்தில் சிறிலங்காவில் தமிழ் இனம் வாழ்ந்ததிற்கான அடையாளம் இல்லாமல் அழித்தொழிக்கப்படும். எம் இனத்தைக் காக்க அனைவரும் ஒன்று திரள்வோம்.

தொடர்புகளிற்கு: 416-838-9637

http://www.seithy.com/briefEventDetail.php...;language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்ரவரி 10 அன்று CanadianHART இனைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பான விழிப்புணர்வினை பல்வேறு பல்கலைக்கழகங்களிடையேயும் ஏற்படுத்தும் வகையில் 'இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணம்' ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.300 000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களினைப் பிரதிநிதித்துவம் செய்யும் கனடிய மாணவர் கூட்டமைப்பு (CFS) மற்றும் சமாதானத்திற்கான கனடிய ஒன்றியம் (CPA)ஆகியவை ஆதரவு வழங்கும் இவ் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவற் பரிமாற்ற நிகழ்வில் 50 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

CanadianHART இனது 'இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணம்' பெப்ரவரி 9, 2009 இல் ஆரம்பித்து இம்மாத இறுதிவரை முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதற்பகுதியில் கல்ஃப் (பெப்ரவரி 10), வாட்டர்லூ (பெப்ரவரி 11), லண்டன் (பெப்ரவரி 12) மற்றும் வின்ட்சர் (பெப்ரவரி 13) ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடும் இப்பயணம் தனது இரண்டாவது பகுதியினை பெப்ரவரி 23,2009 அன்று ஆரம்பிக்கின்றது.

ஒன்ராரியே மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கல்ஃப் பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்த இப் பயணக்குழு மாணவர்கள் அங்கு பல்வேறு அமைப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மத்திய மாணவர் ஒன்றியம் (CSA), ஒன்ராரியோ பொதுமக்கள் விருப்பு ஆய்வுக் குழு (OPIRG-Guelph), கனடிய பொது ஊழியர்கள் ஒன்றியம் (CUPE 3913) மற்றும் கல்ஃப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆகியன அவ்வமைப்புக்களாகும். பயணக்குழுவினர் 800 இற்கு மேற்பட்ட கைநூல்களை அங்கு விநியோகித்திருந்ததுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவற் பரிமாற்ற நிகழ்விற்கும் அழைப்புக்களை விடுத்திருந்தனர். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தகவற்பரிமாற்ற நிகழ்வினை பல்கலைக்கழக ஊடகங்கள் பதிவுசெய்திருந்தன.

CanadianHart இன் மக்கள் தொடர்பாளரும் இப் பிரச்சாரப்பயணத்தை முன்னெடுப்பவருமான நிசாந்தன் விஜயராஜா கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஒரு மாத காலமாக கனடிய தமிழ் மக்கள் சிறிலங்காவினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மனிதச்சங்கிலி, பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தல், சமாதானம் வேண்டிப் பிரார்த்தனை, உண்ணாவிரதப் போராட்டம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எதுவாயினும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியாதவாறு சிறிலங்கா அரசு இனப்படுகொலையைத் தொடர்கிறது. இந்த பிரச்சாரப்பயணத்தின் மூலம் கனடிய மக்களைத் தட்டி எழுப்புவதன் மூலமாக சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்த முடியும் என நம்புகிறோம்" என்றார்.

படங்களிற்கு: http://www.pathivu.com/news/270/54/.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.